வீட்டு மனையை பஞ்சாயத்துத் தலைவர் அங்கீகரிக்கலாமா? சொத்து வாங்கும்போது ஏற்படும் கேள்விகள், அதற்கான பதில்கள்!

0
195

நிலத்தில் முதலீடு செய்வது தான் இன்றைக்கு நல்ல முதலீடாக கருதப்படுகிறது. ஆனால், அசையா சொத்தை வாங்கும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் நிறைய இருக்கின்றன. இதில் கவனமாக இல்லையென்றால், பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

நிலம் வாங்கும் போது கீழ்கண்டவற்றை சரி பார்த்து வாங்குதல் அவசியம்:-

வில்லங்கம் பார்த்தல்

1975 ஆம் ஆண்டில் இருந்து நிலத்தின் வில்லங்க சான்றிதழை பார்க்க வேண்டும். அதேபோல், 1908 அல்லது 1858 வரையிலான வில்லங்க சான்றிதழையும் கட்டாயம் பார்க்க வேண்டும். அதில் நிலத்தின் மதிப்பு ஸீரோ (Zero) என்றிருந்தால், அது பூமிதான நிலம் அல்லது புறம்போக்கு, வில்லங்க நிலம். எனவே அந்த நிலத்தை வாங்க வேண்டாம்.

பவர் ஆஃப் அட்டர்னி

பவர் ஆஃப் அட்டர்னியில் (POA) வருகிற நிலத்தை, அதாவது பவரில் (power) வரும் நிலத்தை வாங்க வேண்டாம். இது டபுள் டாக்குமெண்ட்க்கு கொண்டு செல்லும். இதுபோன்ற நிலத்தை வாங்கியே தீர வேண்டும் என்றால் பவர் கொடுத்தவர் உயிரோடு இருக்கிறாரா என்று கண்டுபிடியுங்கள். அவரைச் சந்தித்து, பவர் பத்திரம் செல்ல கூடியாதா? என்று விசாரியுங்கள். எழுதி கொடுத்தவர் ரத்து செய்து விட்டாரா என்றும் கேளுங்கள். முகவரும் (agent) விற்கலாம், பவர் எழுதி கொடுத்தவரும் விற்கலாம். விற்றால் அது double டாக்குமெண்ட்.

உயில் பத்திர நிலம், டபுள் டாக்குமெண்ட்

உயில் மூலம் உரிமை மாறி இருக்கிறதா? எது கடைசி உயில் என்று பார்க்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட உயில் மூலம் விற்கப்பட்டால், அது நில விற்பனை பத்திரம். அதற்கு பிறகு ஏதாவது பதிவு செய்யாத உயில் இருக்கிறதா? என்று நிலம் விற்பவரின் உறவினர்களை கேட்க வேண்டும். பதிவு செய்யப்படாத உயில் மூலம் விற்பனை செய்யப்பட்டு இருந்தால் அது டபுள் டாக்குமென்ட்.

செட்டில்மென்ட் பத்திர நிலம் – டபுள் டாக்குமென்ட்

செட்டில்மென்ட் பத்திரம் மூலம் நிலம் விற்பனைக்கு வந்தால், செட்டில்மென்ட் ரத்து செய்யப்பட்டு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். செட்டில்மென்ட் பத்திரத்தை சிவில் கோர்ட் மூலமாகத்தான் ரத்து செய்ய முடியும். பத்திரப் பதிவு அலுவலகங்களில் நடக்கும் ரத்து பத்திரம் செல்லாது. சப் ரிஜிஸ்டர் அலுவலகம் மூலம் ரத்தாகியிருந்தால், அதை வாங்க வேண்டாம். உயில் பத்திரம் தாய் பத்திரமாக இருந்தால், அந்த தாய் பத்திர உயில் மூலம் கிரையம் நடைபெற்று இருந்தால், அந்த பத்திரத்துக்கு லிங்க் சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

அப்டேட் ஆகாத பட்டா மூலம் கிரயம் – டபுள் டாக்குமென்ட்

1987-UDR, 1995-நத்தம் நிலவரி திட்டத்தின் நிலம் மூலம் வாங்கியவர், அதை ரெவன்யூ ரெக்கார்டு எனப்படும் பட்டாவில், தற்போதைய உரிமையாளர் நீங்கள்தான் என்பதை அப்டேட் செய்யாமல் இருந்தாலோ, 1987 ஆம் ஆண்டுக்கு முந்தைய உரிமையாளர், அவரின் வாரிசுகள் பழைய பட்டா மூலம் கிரயம் செய்தாலோ, அடுத்து நிலம் வாங்கி பட்டாவில் அப்டேட் செய்யாமல் விட்டுவிட்ட அசல் உரிமையாளர் என்றோ, இல்லை அவரின் வாரிசுகள் விற்று கிரய பத்திரம் ஆகி இருந்தாலோ அதுவும் டபுள் டாக்குமென்ட்.

லேவுட் பிரேம், வடிவம், உருவாமாற்றம் மாற்றிய நிலமா?

நில அளவைப் படங்கள் (Field Measurement Boo – FMB) சரிபார்க்கப்பட வேண்டும். நத்தம் நிலமா,லே அவுட் பிளாட்டா என்று பாருங்கள்?. டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதி பெற்ற (DTCP approved or CMDA approved) நிலம் என்றால், அவர்களின் இணையதளத்தில் ஒரிஜினல்தானா என்று உறுதிப்படுத்தி கொள்ளலாம். இணையதளத்தில் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் நேரில் LPA(local planning authority ) DTCP அல்லது CMDA அலுவலகத்திற்கு சென்று தெரிந்துகொள்ளலாம்.

லே அவுட்டா என்றும் விசாரியுங்கள். ப்ளூ பிரின்ட் இருந்தால் கொண்டு சென்று பார்க், பள்ளிக்கு இடம் விட்டு லே அவுட் போட்டு இருக்கிறார்களா என்றும் கேளுங்கள். பஞ்சாயத்து அனுமதி இடங்களை வாங்காமல் இருப்பது நல்லது. ஏனெனில் தமிழ்நாட்டைப் பொருத்த வரை வீட்டு மனைக்கு அங்கீகாரம் வழங்கும் அதிகாரம் பஞ்சாயத்துத் தலைவருக்கு இல்லை. மேலும் அங்கீகரிக்கப்பட்ட மனையின் விவரங்கள் ஆன்லைன் மூலம் சரிபார்க்கப்பட வேண்டும்.

சிஎம்டிஏவின் இணையதளத்தில் 2000-ம் ஆண்டு முதல் அங்கீகரிக்கப்பட்ட மனையின் விவரங்கள் ஆன்லைனில் சரிபார்க்கலாம். அதே டிடிசிபியால் கடந்த 5-6 ஆண்டுகளாக அங்கீகரிக்கப்பட்ட மனையின் விவரங்கள் ஆன்லைனில் சரிபார்க்கலாம். இல்லையென்றால் வாங்கிய பின்பு நிலத்தை வரையறை செய்ய, நீங்கள்தான் அலைய வேண்டி இருக்கும். நத்தம் நிலம் என்றால் விஏஓவை பார்க்க வேண்டும். உங்கள் சர்வே நம்பரின் யுடிஆர் (UDR) 1987 ஆம் ஆண்டின் சிட்டா அடங்கலை, நேரில் சென்று கேளுங்கள்.

இனாம் கிராமமாக இருந்து இனாம் ஒழிப்பின் மூலம் பட்டா வழங்கப்பட்ட நிலமா என்றும் பார்க்க வேண்டும். அந்த பட்டா, யுடிஆர் காலத்து சிட்டா அடங்கல் ரெஜிஸ்டரில் பதிவாகி இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும்.

மின் இணைப்பு, சொத்து வரி போன்றவை விற்பவர் பெயரில் இருக்கிறதா என்று பாருங்கள். இல்லை என்றால் மாற்றி அதற்கு பிறகு விற்கச் சொல்லுங்கள். விற்பவர் பெயரில் பட்டா இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். கூட்டு பட்டா நிலம் என்றால், நில பங்குதாரர்களில், யாருக்கு எவ்வளவு இடம், எந்த இடம் என்று பிரித்திருக்க வேண்டும். இல்லை என்றால் வாங்கும் உங்களுக்கு சிக்கல். பட்டா வாங்குவது பெரிய வேலை. நிலத்தின் வகைப்பாட்டை கண்டிப்பாகப் பார்க்க வேண்டும்.

ஒரு மனை வாங்கினால் ஒரு மனை இலவசம், வீடு வாங்கினால் தங்கக்காசு இலவசம் என்ற வார்த்தை ஜாலங்களில் மயங்கி விட வேண்டாம். இந்த நூற்றாண்டில் எதுவுமே இலவசமாகக் கிடைக்காது. இலவச பொருட்களுக்குரிய தொகையை விட பலமடங்கு உங்களிடம் வசூல் செய்துவிட்டுத்தான் அதை இலவசமாக வழங்குவது போல் பில்டர்கள் தோற்றத்தை ஏற்படுத்துவார்கள். சொத்தின் உரிமையாளர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்தால், அந்த சொத்தை நேரடியாக வாங்க முடியாது. நீதிமன்றத்தின் அனுமதி கட்டாயம் தேவை.

பத்திரப்பதிவுக்கு கால அவகாசம் தேவைப்படும் பட்சத்தில், விற்பனை ஒப்பந்தம் செய்து கொள்வது நல்லது. விற்பனை ஒப்பந்தத்தில் முன்பணம், விற்பனை தொகை, கால அவகாசம், நீட்டிப்புக்கான நிபந்தனைகள், விற்பனை தவறும் பட்சத்தில் தரப்பட வேண்டிய இழப்பீடு ஆகிய அனைத்தையும் குறிப்பிட வேண்டும். நிறுவனங்களிடம் இருந்து சொத்து வாங்கும்போது உரிமை, உடைமைகளுடன், அந்த நிறுவனத்தின் விதிமுறைகளை பற்றியும் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry