மத பிரிவினைவாதிகளை சந்தித்து நாட்டை பிளவுபடுத்துகிறார் ராகுல்! அண்ணாமலை சரமாரி கேள்வி!

0
18

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பாத யாத்திரையின் போது, பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை ராகுல் காந்தி டீ சாப்பிட்டு கொண்டே சந்தித்து பேசுகிறார்.

ஜார்ஜ் பொன்னையா எப்படிப்பட்ட கருத்துகளை கூறிவிட்டு சிறை சென்றவர் என்பது நமக்கு தெரியும். அவர், பிரதமர் குறித்து தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்துகிறார். மிகவும் தரம் குறைந்த வார்த்தைகளை பிரதமர் மற்றும் அமித்ஷா குறித்து ஜார்ஜ் பொன்னையா பயன்படுத்தினார்.

ராகுல் யாத்திரை என்பது பாரத் ஜோடோவா அல்லது பாரத் தோடோவா. பாரத் ஜோடோ என்றால் இந்தியாவை இணைக்கிறேன் என்று பொருள், பாரத் தோடோ என்றால் இந்தியாவை பிரிக்கிறேன் என பொருள். ஜார்ஜ் பொன்னையா போன்றவர்கள், கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராட்டத்தை தூண்டியவர்களை ராகுல் காந்தி சந்திக்கிறார்.

Also Read : வெளிப்படைத் தன்மை, நேர்மை அவசியம்! காங். தலைவர் தேர்தல் குறித்து எம்.பி.க்கள் கடிதம்!

அன்றைக்கே இந்த போராட்டம் தூண்டப்பட்ட போராட்டம் என மன்மோகன் சிங் கூறியுள்ளார். அந்த அமைச்சரவையில் திமுக இடம்பெற்றிருந்தது. பாதயாத்திரையின் போது, நிறைய பிரிவினைவாதிகளை மட்டுமே சந்திப்பதை ராகுல் முதல் நோக்கமாக வைத்துள்ளார். எந்த ஊர் சென்றாலும், அதிகம் பிரிவினைவாதிகளை சந்திப்பதாக தான் ராகுலின் நடவடிக்கைள் உள்ளன. இந்தியாவை சேர்த்து வைக்கும் அளவுக்கு இல்லை.
தமிழகத்தில் இருந்து கேரளா சென்றுள்ளார். அடுத்து 6 அல்லது 7 நாட்களுக்கு என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்க வேண்டும். இப்படிப்பட்டவர்களை ஊக்குவித்து கொண்டு அவர்களின் அருகில் நிற்பதை ஸ்டாலின் பெருமையாக கருதுகிறார்”. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry