நீங்களும், உங்கள் கடன்களும்..! அதென்ன சுப கடன், அசுபக் கடன்! கடன் வாங்கக் கூடாத நாட்கள் எவை? How to get rid of loans by astrology!

0
97

“நீரின்றி அமையாது உலகு” என்ற காலம் மாறி, “கடனின்றி அமையாது உலகு” என்ற நிலை வந்துவிட்டது. நாடே கடனாளியாக இருக்கும்போது நாம் மட்டும் என்ன விதிவிலக்கா?. தனி மனிதர் ஒவ்வொருவரும் அவரவர் தகுதிக்கேற்ப ஆயிரம், லட்சம், கோடிகளில் கடன் பெற்று கடனாளியாக இருக்கின்றனர்.

நீங்கள் நிதி நெருக்கடியில் சிக்கி ஜோதிட தீர்வுகளை தேடுகிறீர்களா? இந்தக் கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு எந்தெந்த வழிகளில் கடன் ஏற்படும் என்பதை கணித்துத் கொடுத்துள்ளார் பிரசன்ன ஜோதிடர் ஆர்.கே.வெங்கடேஸ்வர்.

கடனை இரு வகையாகப் பிரித்துக் கொள்ளலாம். சுப கடன், அசுப கடன். சுப கடன் என்பது வீடு கட்டுவது, தொழில், வியாபாரத்தை விருத்தி செய்வது, கல்வி கற்க வாங்குவது என வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு உதவும் கடன்களை சுப கடனாக எடுத்து கொள்ளலாம்.

அசுப கடன் என்பது வீண் செலவுக்காக கடன் பெறுவது, மருத்துவ செலவுக்காக கடன்படுவது, ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் பெறுவது, அளவுக்கு மிஞ்சி கடன் பெற்று வாழ்நாள் முழுவதும் வட்டி கட்டி மன வேதனை அடைவது போன்றவற்றை அசுபக் கடன் என்று சொல்லலாம்.

Also Read : உங்கள் லக்னத்துக்கு ஏற்ற லக்கி கடவுள் யார்? இந்த நிற உடை அணிந்து வழிபட்டால் கைமேல் பலன்!

இனி 12 லக்னம், ராசிகளில் பிறந்தவர்களுக்கு எந்தெந்த வழிகளில் எல்லாம் கடன் பிரச்னை ஏற்படும் என்பதையும், கடன் வாங்க கூடாத நாட்கள் மற்றும் கடன் தீர்வதற்கான வழிபாடுகளை பார்ப்போம்.

மேஷம் : மேஷ லக்னம், ராசியில் பிறந்தவர்களுக்கு உடன்பிறந்தவர்கள் மற்றும் நண்பர்கள் வழியில் கடன் ஏற்படும். சொந்த தொழில் செய்வதாலும், வீடு, வாகனம் வாங்குவதற்காகவும் கடன் பட வேண்டியிருக்கும். கல்வி கற்கவும், தயாருக்காகவும் கடன் பெற வேண்டிய நிலை உருவாகும். லாட்டரி சீட்டு, சூதாட்டம், கிரிப்டோ கரன்சி, பங்குச்சந்தை முதலீடு, ரகசிய நடவடிக்கைகள் மூலமாகவும், மேஷ லக்னம், ராசிக்காரர்கள் கடன் வாங்கி சிக்கலில் மாட்டி கொள்வார்கள் என்பதால் எச்சரிக்கை தேவை. திடீரென அறிமுகமாகும் நபர்களை நம்பி முதலீடு செய்து ஏமாறுவது, அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை முதலீடு செய்து ஏமாற்றத்தை சந்திப்பீர்கள். ஆன்லைன் மோசடி கும்பலிடம் சிக்கி பணத்தை இழப்பீர்கள் என்பதால் அதிலும் கவனம் தேவை.

கடன் வாங்கக் கூடாத நாட்கள் : மேஷ லக்னம், ராசியில் பிறந்தவர்கள் புதன், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக புதன்கிழமைகளில் கடன் வாங்கினால் அதிலிருந்து மீளமுடியாத நிலை ஏற்படும்.
கடன் விரைவில் அடைய : மேஷ லக்னம், ராசியில் பிறந்தவர்கள் சனிக்கிழமைகளில் கடனை திருப்பி தரும் வழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். முழுத் தொகையை தர இயலவில்லை என்றாலும், ஒரு சிறு தொகையாவது சனிக்கிழமைகளில் தந்தால் கடன் விரைவில் அடைபடும்.

ரிஷபம் : ரிஷப லக்னம் மற்றும் ராசியில் பிறந்தவர்கள் உங்களின் தேவைக்காகவும், குடும்பத்திற்காகவும் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும். உடன்பிறந்த சகோதரிகளுக்காக கடன் பெறுவீர்கள். சீட்டு போட்டாலும், நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தாலும் பணம் திரும்பி வராத நிலை உண்டாகும் என்பதால் எச்சரிக்கை தேவை. பெரிய மனிதர்களை நம்பி கடனாளி ஆகும் நிலை ஏற்படும். திருமணத்தில் தோல்வி ஏற்பட்டு மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க கடன் பெற வேண்டி வரும். ரிஷப லக்னம், ராசிக்காரர்கள் சிலர் ஆடம்பர வாழ்க்கைக்காக கடன் வாங்குவார்கள், அதனைத் தவிர்ப்பது நல்லது. சிலர் குழந்தைகளின் கல்வி செலவிற்காக கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.

கடன் வாங்கக் கூடாத நாட்கள் : ரிஷப லக்னம், ராசியில் பிறந்தவர்கள் வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் கடன் வாங்கினால் அதிலிருந்து மீளமுடியாத நிலை ஏற்படும்.
கடன் விரைவில் அடைய : ரிஷப லக்னம், ராசியில் பிறந்தவர்கள் வியாழக்கிழமைகளில் கடனை திருப்பி தரும் வழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். முழுத் தொகையை தர இயலவில்லை என்றாலும், ஒரு சிறு தொகையாவது வியாழக்கிழமைகளில் தந்தால் கடன் விரைவில் அடைபடும்.

மிதுனம் : மிதுன லக்னம் மற்றும் ராசியில் பிறந்தவர்கள் படிப்பிற்காகவும், தாயாருக்காகவும் கடன் வாங்கும் நிலை உண்டாகும். சொந்த வீடு, வாகனம் வாங்குவதற்காக கடன் வாங்க நேரிடும். சிலர் கடன் வாங்கி முதலீடு செய்வார்கள். மிதுனம் லக்னம் மற்றும் ராசியில் பிறந்தவர்கள் இயற்கையிலேயே கடனாளியாகும் அமைப்பு கொண்டவர்கள், மேலும் வாங்கிய கடனை திரும்பி செலுத்த முடியாத நிலை ஏற்படும் என்பதால், முடிந்த வரை கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். சிலர் சொந்தத் தொழில் செய்வதாகக் கூறி கடன் வாங்கி அவதிப்படுவார்கள். செல்போன், லேப்டாப் போன்ற விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதற்காக சிலர் கடன் வாங்குவார்கள். சிலர் சந்தையில் புது வரவாக உள்ள செல்போன்களை வாங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அடிக்கடி செல்போன்களை மாற்றுவார்கள். அதற்காக கடன் வாங்கி கொண்டே இருக்கும் நிலையை ஏற்படும். சிலர் குடும்பத்திற்கே தெரியாமல் கடன் வாங்கி சிக்கலில் மாட்டிக்கொள்வார்கள். பங்கு சந்தையில் முதலீடு செய்து கடனாளி ஆகும் அமைப்பும் உள்ளது.

கடன் வாங்கக் கூடாத நாட்கள் : மிதுன லக்னம், ராசியில் பிறந்தவர்கள் வெள்ளி, வியாழக்கிழமைகளில் கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். வெள்ளி மற்றும் வியாழக்கிழமைகளில் கடன் வாங்கினால் அதிலிருந்து மீளமுடியாத நிலை ஏற்படும்.
கடன் விரைவில் அடைய : மிதுன லக்னம், ராசியில் பிறந்தவர்கள் செவ்வாய்க் கிழமைகளில் கடனை திருப்பித் தரும் வழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

Also Read : நுரையீரல் புற்றுநோயை கண்டறிவது சிரமம்! தம் அடிக்கறவங்க உடனடியா CT SCAN செய்து பாருங்க!

கடகம் : கடக லக்னம் மற்றும் ராசியில் பிறந்தவர்களுக்கு கடன் இருந்து கொண்டே இருக்கும். கடனை காட்டிலும் எதிரிகள் அதிகமாக இருப்பார்கள். மறைமுக கடன்கள் அதிகரித்து கொண்டே இருக்கும். சிலர் குழந்தை பாக்கியத்திற்காக கடன் வாங்கி மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருக்கும். குழந்தைகளின் படிப்பிற்காக சிலர் கடனாளி ஆவார்கள். வீடு, வாகனங்களுக்காக கடன் வாங்கும் நிலை ஏற்படும். சிலர் கெளரவத்திற்காக கடன் பெற்று செலவு செய்வார்கள். வெளிநாடு செல்வதற்காகவும், ஆசைவார்த்தைகளுக்கும், பெறாசைகளுக்கும் நம்பி கடனாளி ஆக வேண்டியிருக்கும். சிலர் அரசியல்வாதி, அரசு அதிகாரிகளிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டியிருக்கும்.

கடன் வாங்கக் கூடாத நாட்கள் : கடக லக்னம், ராசியில் பிறந்தவர்கள் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். இந்த இரண்டு நாட்களிலும் கடன் வாங்கினால் அதிலிருந்து மீளமுடியாத நிலை ஏற்படும்.
கடன் விரைவில் அடைய : கடக லக்னம், ராசியில் பிறந்தவர்கள் வெள்ளிக் கிழமைகளில் கடனை திருப்பித் தரும் வழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

சிம்மம் : சிம்ம லக்னம் மற்றும் ராசியில் பிறந்தவர்கள் சொந்த தொழில் செய்வதால் கடனாளி ஆவார்கள். சிலர் வேலைக்காரர்களால் கடன்படுவார்கள். சகோதரர்கள் வழியில் கடன் உண்டாகும். நண்பர்களுக்கு கடன் வாங்கி கொடுப்பதாலும், ஜாமீன் கையெழுத்து போடுவதாலும் சிக்கலில் மாட்டி அவதிப்படும் நிலை உண்டாகும். சிலர் தேவையில்லா முயற்சிகளால் கடன் வாங்குவார்கள். இளைய துணை வழியில் சிலருக்கு கடன் ஏற்படும். திருமணத்திற்காக கடன் வாங்கும் நிலை உருவாகும். கூட்டு தொழில் செய்து கடனாளி ஆவீர்கள். மற்றவர்களுக்கு கடன் வாங்கி உதவி செய்து பிறகு சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள். சிலருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக கடன் வாங்கும் நிலை ஏற்படும். திடீர் அதிர்ஷ்டம், லாட்டரிச் சீட்டு, பங்கு சந்தையை நம்பி கடனாளி ஆகும் நிலை ஏற்படும் எச்சரிக்கை தேவை.

கடன் வாங்கக் கூடாத நாட்கள் : சிம்ம லக்னம், ராசியில் பிறந்தவர்கள் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். இந்த இரண்டு நாட்களிலும் கடன் வாங்கினால் அதிலிருந்து மீளமுடியாத நிலை ஏற்படும்.
கடன் விரைவில் அடைய : சிம்ம லக்னம், ராசியில் பிறந்தவர்கள் புதன்கிழமைகளில் கடனைத் திருப்பி தரும் வழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.

கன்னி : கன்னி லக்னம் மற்றும் ராசியில் பிறந்தவர்கள் குடும்பத்திற்காகவும், குடும்ப உறுப்பினர்களுக்காகவும் கடன்படும் நிலை ஏற்படும். சிலர் அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு கடனாளி ஆவார்கள். நண்பர்களால் கடன் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. இளைய துணையால் சிலருக்கு கடன் உண்டாகும். முதல் திருமணம் தோல்வியில் முடிந்து கடன் வாங்கி மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்கும் நிலை ஏற்படும். அதீத ஆசையால் கடனாளி ஆவீர்கள். கூட்டுத் தொழில், கூட்டாளிகளால் கடனாளி ஆவீர்கள் மற்றும் அவர்களால் விரையம் அதிகம் உண்டு.

கடன் வாங்கக் கூடாத நாட்கள் : கன்னி லக்னம், ராசியில் பிறந்தவர்கள் சனி மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். இந்த இரண்டு நாட்களிலும் கடன் வாங்கினால் அதிலிருந்து மீளமுடியாத நிலை ஏற்படும்.
கடன் விரைவில் அடைய : கன்னி லக்னம், ராசியில் பிறந்தவர்கள் திங்கட் கிழமைகளில் கடனை திருப்பித் தரும் வழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.

Also Read : பெட்ரோல், டீசல் விலை குறையாததன் பகீர் பின்னணி! ரஷ்ய கச்சா எண்ணெய் மூலம் ரூ.44,000 கோடி லாபம் ஈட்டிய ரிலையன்ஸ்!

துலாம் : துலாம் லக்னம் மற்றும் ராசியில் பிறந்தவர்கள் குழந்தை பிறப்பிற்காகவும், குழந்தைகளின் சந்தோஷத்திற்காகவும், அவர்களின் படிப்பிற்காகவும் கடன் வாங்கும் நிலை உண்டாகும். சிலர் பொதுக்காரியங்களில் ஈடுபடுவதால் கடனாளி ஆகும் நிலை ஏற்படும். கவுரவம், பெரிய மனித தோரணைக்காக கடன் ஏற்படும். தாய் வழி உறவுகளால் கடன் பிரச்னை உண்டாகும். சிலருக்கு சொந்தத் தொழில் செய்வதால் கடன் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் மற்றும் நண்பர்களால் சிலர் கடனாளி ஆவீர்கள்.

கடன் வாங்கக் கூடாத நாட்கள் : துலாம் லக்னம், ராசியில் பிறந்தவர்கள் வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். இந்த இரண்டு நாட்களிலும் கடன் வாங்கினால் அதிலிருந்து மீளமுடியாத நிலை ஏற்படும்.
கடன் விரைவில் அடைய : துலாம் லக்னம், ராசியில் பிறந்தவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் கடனை திருப்பித் தரும் வழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

விருச்சிகம் : விருச்சிக லக்னம் மற்றும் ராசியில் பிறந்தவர்கள் அவர்களது நடவடிக்கைகளால் கடனாளி ஆகும் நிலை ஏற்படும். இவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் அவர்களுக்கே பாதகத்தையும், கடனையும் உண்டாக்கும். சிலருக்கு நிலம் வாங்குவதால் கடனாளியாகும் அமைப்பு ஏற்படும். சிலர் சண்டை, முன்விரோதத்தால் பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கி கடனாளியாவார்கள். சிலர் வழக்கிற்காக நீதிமன்ற படியேறுவதால் கடனாளி ஆவார்கள். உடன் பிறந்தவர்கள், நண்பர்கள், உறவினர்களால் கடன் ஏற்படும்.

கடன் வாங்கக் கூடாத நாட்கள் : விருச்சிக லக்னம், ராசியில் பிறந்தவர்கள் புதன் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். இந்த இரண்டு நாட்களிலும் கடன் வாங்கினால் அதிலிருந்து மீளமுடியாத நிலை ஏற்படும்.
கடன் விரைவில் அடைய : விருச்சிக லக்னம், ராசியில் பிறந்தவர்கள் தேய்பிறை அஷ்டமி நாட்கள் அல்லது மைத்ர முகூர்த்த நேரங்களில் கடனை திருப்பித் தரும் வழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

தனுசு : தனுசு லக்னம் மாற்றும் ராசியில் பிறந்தவர்கள் ஆடம்பர வாழ்க்கைக்காக கடன் வாங்கி கஷ்டப்படுவார்கள். குழந்தைகளின் படிப்பு, அவர்களின் விருப்பதை நிறைவேற்றுவதற்காக கடன் வாங்கும் சூழல் ஏற்படும். சிலருக்கு தந்தையின் கடனை அடைக்க வேண்டிய நிலை உண்டாகும். சிலர் தாயாருக்காக கடன்படுவார்கள். சிலர் நேர்மையாக இருப்பதற்காக கடன் வாங்கும் நிலை உண்டாகும். சொந்தத் தொழில் செய்து கடன் வாங்கி கஷ்டப்படுவார்கள். நண்பர்கள் மற்றும் பெரிய மனிதர்களை நம்பி கடன்பட வேண்டியிருக்கும்.

கடன் வாங்கக் கூடாத நாட்கள் : தனசு லக்னம், ராசியில் பிறந்தவர்கள் வெள்ளி மற்றும் திங்கட் கிழமைகளில் கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். இந்த இரண்டு நாட்களிலும் கடன் வாங்கினால் அதிலிருந்து மீளமுடியாத நிலை ஏற்படும்.
கடன் விரைவில் அடைய : தனுசு லக்னம், ராசியில் பிறந்தவர்கள் தேய்பிறை அஷ்டமி நாட்கள் அல்லது மைத்ர முகூர்த்த நேரங்களில் கடனை திருப்பித் தரும் வழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

மகரம் : மகர லக்னம் மற்றும் ராசியில் பிறந்தவர்கள் குழந்தைகள், உடன் பிறந்தவர்கள், நண்பர்களுக்காக கடன் வாங்கி கஷ்டப்படுவார்கள். சிறு சிறு பிரச்னைகளால் வம்பு, வழக்கில் சிக்கி கடனாளி ஆவீர்கள். நிலம், வீடு வாங்கும் போது போலி பத்திரம் சிக்கலில் சிக்கி கடன்படும் நிலை ஏற்படும். பங்குச்சந்தை, கிரிப்டோ கரன்சி, ஆன்லைன் மோசடியால் கடனாளி ஆகும் நிலை உருவாகும். மகன், மகள் திருமணத்திற்காக அதிக கடன் வாங்கும் நிலை ஏற்படும். சிலர் மின்சார பொருட்களால் கடன் வாங்கும் நிலை உண்டாகும். அரசாங்கத்திற்கு சரியான நேரத்தில் வரி செலுத்தாத காரணத்தால் கடன் மற்றும் பிரச்னைகளில் சிக்கும் நிலை ஏற்படும்.

கடன் வாங்கக் கூடாத நாட்கள் : மகர லக்னம், ராசியில் பிறந்தவர்கள் புதன் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். இந்த இரண்டு நாட்களிலும் கடன் வாங்கினால் அதிலிருந்து மீளமுடியாத நிலை ஏற்படும்.
கடன் விரைவில் அடைய : மகர லக்னம், ராசியில் பிறந்தவர்கள் செவ்வாய்க் கிழமைகளில் கடனை திருப்பி தரும் வழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.

கும்பம் : கும்ப லக்னம் மற்றும் ராசியில் பிறந்தவர்கள் வீடு, வாகனம் வாங்குவதற்காக கடன் வாங்குவீர்கள். சிலர் முதலீடு செய்து ஏமாந்து கடனாளி ஆவார்கள். சிலர் சொந்த தொழில் செய்து கடனாளி ஆகும் நிலை ஏற்படும். உறவுகள் வகையில் சிலருக்கு கடன் வந்து சேரும். தாய் வழி உறவு, உடன் பிறந்தவர்கள் வழியில் கடன் வாங்கி வட்டி கட்டும் நிலை உண்டாகும். கும்ப லக்னம் மற்றும் ராசியில் பிறந்தவர்கள் வட்டி கட்ட ஆரம்பித்தால் கடைசி வரை அதே நிலை இருக்கும் என்பதால் எச்சரிக்கை தேவை. கும்ப லக்னம் மற்றும் ராசியில் பிறந்தவர்கள் யாருக்கு கடன் கொடுத்தாலும் கடன் திரும்பி வராது. கடன் கொடுத்தவர்கள் எதிரி ஆகும் நிலை ஏற்படும். ஜாமீன் கையெழுத்து போட்டு ஏமாறுவது, பங்குச்சந்தைகளில் ஏமாறும் நிலை உண்டாகும்.

கடன் வாங்கக் கூடாத நாட்கள் : கும்ப லக்னம், ராசியில் பிறந்தவர்கள் திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். இந்த இரண்டு நாட்களிலும் கடன் வாங்கினால் அதிலிருந்து மீளமுடியாத நிலை ஏற்படும்.
கடன் விரைவில் அடைய : கும்ப லக்னம், ராசியில் பிறந்தவர்கள் வியாழக் கிழமைகளில் கடனை திருப்பி தரும் வழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.

மீனம் : மீன லக்னம் மற்றும் ராசியில் பிறந்தவர்கள் குடும்ப உறவுகளால் கடனாளி ஆகும் நிலை ஏற்படும். ஆடம்பர, உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கடன் வாங்கி கஷ்டப்படுவீர்கள். சிலர் பெண் சகவாசத்தால் இருப்பதை இழந்து கடனாளி ஆகும் நிலை உண்டாகும். சிலர் சட்ட சிக்கல்களை எதிர்க்கொண்டு கடன் வாங்கும் நிலை ஏற்படும். அரசியல்வாதி, அரசு அதிகாரிகளிடம் பணத்தை இழந்து கஷ்டப்படுவீர்கள்.

கடன் வாங்கக் கூடாத நாட்கள் : மீன லக்னம், ராசியில் பிறந்தவர்கள் ஞாயிறு மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். இந்த இரண்டு நாட்களிலும் கடன் வாங்கினால் அதிலிருந்து மீளமுடியாத நிலை ஏற்படும்.
கடன் விரைவில் அடைய : மீன லக்னம், ராசியில் பிறந்தவர்கள் சனிக்கிழமைகளில் கடனை திருப்பி தரும் வழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.

தொடர்புக்கு: ‘ஜோதிட சிரோன்மணி’ ஆர்.கே.வெங்கடேஸ்வரர், ஸ்ரீ மாருதி ஜோதிட ஆராய்ச்சி மையம், சென்னை. தொடர்புக்கு : astrovenkataeswar@gmail.com, அலைப்பேசி – 91590 13118.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry