Friday, March 24, 2023

3 மாநில தேர்தலில் காங்கிரஸ், இடதுசாரிகளுக்கு பெரும் பின்னடைவு! நாகாலாந்து, திரிபுராவில் பாஜக கூட்டணி ஆட்சி!

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற மூன்று வடகிழக்கு மாநிலங்களில், நாகாலாந்து, திரிபுராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி அமைகிறது. மேகாலயாவில் சங்மாவின் தேசிய மக்கள் கட்சி (என்பிபி) அதிக தொகுதிகளில் முன்னேறுகிறது.

திரிபுரா: தற்போதைய நிலவரப்படி, 60 தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில் பாஜக கூட்டணி 34 தொகுதிகளை வசப்படுத்தும் நிலையில் உள்ளது. சிபிஎம் – காங்கிரஸ் கூட்டணி 14 தொகுதிகளை கைப்பற்றும் நிலையில் உள்ளது. மாநிலக் கட்சியான ப்ரடோய்ட் மணிக்யா டெப்பர்மாவின் திப்ரா மோதா கட்சி 12 தொகுதிகளை வசப்படுத்தும் நிலையில் உள்ளது.

Also Read : அதானிக்கு சாதகமாக புதிய சட்டத் திருத்தங்கள்! RTI மூலம் அம்பலம்! பெரும் சர்ச்சையில் சிக்கிய மோடி அரசு!

நாகாலாந்து: 60 தொகுதிகளைக் கொண்ட நாகாலாந்தில் தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சி – பாஜக கூட்டணி 36 தொகுதிகளை வசப்படுத்தும் நிலையில் உள்ளது. என்பிஎஃப் கட்சி 2 தொகுதியை கைப்பற்றும் நிலையில், காங்கிரஸ் எந்த தொகுதியிலும் முன்னிலையில் இல்லை.

Also Read : மீண்டும் கட்டணத்தை உயர்த்துகிறது #Airtel! வருவாய் போதவில்லை என குறைபட்டுக்கொள்ளும் சுனில் மிட்டல்!

மேகாலயா: 60 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட மேகாலயாவில், சங்மாவின் ஆளும் தேசிய மக்கள் கட்சி 25 தொகுதிகளை வசப்படுத்தும் நிலையில் உள்ளது. யுடிபி 11 இடங்களை வசப்படுத்தும் நிலையில் உள்ளது. இங்கு காங்கிரஸ் மற்றும் திரிணமூல் தலா 5 தொகுதிகளையும், பாஜக 3 தொகுதிகளையும் கைப்பற்றும் நிலையில் உள்ளன. இந்த மாநிலத்தில் தொங்கு சட்டசபை அமையும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த மூன்று மாநிலங்களிலும் ஆட்சியமைக்க 31 இடங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles