யானை கட்டுப்பட்ட வரலாற்றை ஸ்டாலின் மறக்கலாமா? முத்துவேலர் பிறப்பிலிருந்தா வரலாறு துவங்குகிறது?

0
49

ஒன்றிய அரசு என்பது தேச ஒற்றுமைக்கு எதிராகச் சிறு தீப்பொறியாகவே இருந்தது, இப்போது அதுஜெய்ஹிந்த்க்கு எதிராகப் பெருங்காற்று தீயாகப் பரவி இருக்கிறது என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியிருக்கிறார்

அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கடந்த ஒன்றரை மாதமாகச் சட்டமன்றத்திற்கு வெளியே அறிக்கைகளில் இடம் பெற்று வந்தஒன்றிய அரசுஎன்ற பிரிவினை வார்த்தையை இப்பொழுது சட்டமன்றத்திலும் பதிவு செய்யத் துவங்கி விட்டனர். அத்தோடு நிற்கவில்லை. ஆங்கிலேயருடைய ஆட்சி அதிகாரத்திற்கு அடங்கி போயும், உறங்கி போயும் இருந்த கோடான கோடி இந்திய மக்களைத் தட்டியெழுப்புவதற்காக அன்றைய சுதந்திர போராட்ட வீரர்களால் பயன்படுத்தப்பட்டஇந்தியாவிற்கே வெற்றிஜெய்ஹிந்த்என்ற வெற்றி முழக்க வார்த்தை ஆளுநர் அறிக்கையில் இடம் பெறாதது கூட அவர்களுக்கு இப்போது குதூகலமாக இருக்கிறது.

முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று மூன்று தலைமுறைக்கு மட்டுமே முற்பட்ட அவரது தாத்தாவின் அடையாளத்தைப் கூறி பெருமை அடையும் ஸ்டாலின் ஆயிரமாயிரம் தலைமுறைகளைக் கொண்ட பாரதஇந்தியத் தேசத்தின் முகவரியை மறைக்க நினைக்கிறீர்களே? இது நியாயமா? அடுக்குமா? இல்லை, வரலாறுதான் உங்களை மன்னிக்குமா? மறக்குமா?

“India that is Bharat, Shall be a Union Of States” என்று 9 வார்த்தைகள் கொண்ட அரசியல் சாசனத்தில் உள்ள ”Union Of States” என்ற வால்பகுதி வார்த்தைகளை மட்டும் எடுத்துக் கொண்டு, இந்தியாபாரதம் என்ற நமது தேசத்தின் அடையாளங்களை அழித்து விட்டுஒன்றிய அரசுஎன மொட்டையாக இரண்டே வார்த்தைகளில் மொழி பெயர்ப்பது சட்டப்படி குற்றம் என்பது தெரியவில்லையா?

ஏற்கனவே சுயாதீனமாக ஆட்சி செய்து கொண்டிருந்த எந்த நாடுகளுடனோ, பிராந்தியங்களுடனோ செய்து கொண்ட ஒப்பந்த அடிப்படையில் உருவாக்கப்பட்ட தொகுப்பு அல்ல இந்தியா என்பதைத்தான்  “Indian union is not the result of any agreement between states” என்று அரசியல் நிர்ணய சபையில் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் அழுத்தம் திருத்தமாகத் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

இந்திய அரசியல் சாசனத்தில் முதல் சரத்தில் சொல்லப்பட்ட ”union of states” என்ற வார்த்தை, இன்றிருக்கும் மாநிலங்களைக் குறிப்பதற்கானது அல்ல, இந்தியாவில் பன்னெடுங்காலம் இருந்து வந்த ‘Princely States’-யை தான் அது குறிக்கிறது. ஆகவே, ’Union Of States’ என்பதற்குப் பூகோள ரீதியான வரையறை செய்யப்பட்ட எல்லைகளைக் கொண்ட ஒற்றை தேசம் என்பதே பொருள் ஆகும்.

இந்திய பாரத மண்ணில் தோன்றிய அரசுகளானாலும் சரி, அந்நிய மண்ணிலிருந்து படையெடுத்து ஆட்சி செய்தவர்கள் ஆனாலும் சரி, அவரவர் சக்திக்கு ஏற்ற வகையில் பகுதி பகுதிகளாக ஆட்சி செய்தார்களே தவிர, இந்தியத் தேசத்தை எவரும் பூகோள ரீதியாகத் துண்டாடவுமில்லை; தனி நாடுகளாக்கவும் இல்லை. 1947 இந்திய சுதந்திரத்திற்கு முன்பாக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் இந்திய தேசத்தை மத ரீதியாக துண்டாடிய நிகழ்ச்சி மட்டுமே விதிவிலக்கு.

இந்திய அரசியல் சாசனம் ஒன்றைத் தெளிவு படுத்துகிறது. உலகத்தில் பிற நாடுகளைப் போல, இந்தியத் தேசம் உலகத்தின் பிற நாடுகளில் நிலவக்கூடிய மாநிலங்களாலோ, நாடுகளாலோ ஒப்பந்த அடிப்படையில் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு (Federal) அல்ல. இது தீர்க்கமான எல்லைகளைக் கொண்ட இந்தியா அதாவது பாரதம் என்றே பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய அரசியல் சாசனத்தின் முதல் சரத்து பூகோள ரீதியான ஒன்றுபட்ட ஏக இந்தியாவைக் குறிப்பிடுகிறது. பின்வரும் சரத்துக்கள் இந்தியத் தேச மக்களுக்கு  அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமைகளை நிறைவேற்றக் கையாள வேண்டிய ஆட்சி முறைகளைப் பற்றிச் சொல்கிறது. இப்போது அவர்கள் ஒன்றியத்தில் துவங்கி வேரோறு விசயத்திற்கு நகருகிறார்கள். தமிழ்நாட்டிலிருந்து அனைத்து வித தேச அடையாளங்களையும் அழித்து ஒழித்து விட வேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

ஆங்கிலேயருக்கு எதிரான சுதந்திரப் போராட்டங்களுக்கு எழுச்சிகர கோசமாக விளங்கியஜெய்ஹிந்த்ஆளுநர் உரையில் நீக்கப்பட்டதை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இதன் மூலம் இவர்கள் 250 வருடங்களுக்கு முன்பு, துவங்கிய சுதந்திர போராட்ட வரலாற்றையும் முற்றாக அழிக்க நினைக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

தமிழ்நாட்டின் வரலாற்றை முத்துவேலர் பிறப்பிலிருந்து மட்டுமே துவங்க நினைக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. ஒன்றிய அரசு என்பதற்கும் சட்டமன்றத்தில் பெரிய எதிர்ப்பு ஒன்றுமில்லை;’ஜெய்ஹிந்த்என்பது ஆளுநர் உரையில் நீக்கப்பட்டதற்கும் பாராட்டுக்கள்; சிறு எதிர்ப்பு கூட உருவாகவில்லை. இதையெல்லாம் பார்க்கின்ற போது தனி நாடு கோரிக்கையை  ஆரவாரத்துடன் சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

ஒன்றிய அரசு என்பது தேச ஒற்றுமைக்கு எதிராகச் சிறு தீப்பொறியாகவே இருந்தது; இப்போது அதுஜெய்ஹிந்த்க்கு எதிராகப் பெருங்காற்று தீயாகப் பரவி இருக்கிறது. திமுக யாருக்கும் கட்டுப்படாத மதம் பிடித்த யானை என்று ஸ்டாலின் வாக்குமூலம் அளிக்கிறார். 1962 வரையில்திராவிட நாடுபிரிவினை வாதம்பேசி வந்த திமுக, அன்றைய பிரதமர் நேரு அவர்களின்திமுகவிற்குத் தடைஎன்ற ஒரே ஒரு மிரட்டலுக்குப் பணிந்து, அன்றைய திமுக தலைவர் அண்ணா அவர்கள் திமுகவின்திராவிட நாடுகோரிக்கையைக் கைவிட்டார்.  மதம் பிடித்த கட்டுக்கடங்கா யானை அன்றே  கட்டுப்பட்ட வரலாற்றை ஸ்டாலின் மறந்து விடலாமா?

தேச ஒற்றுமைக்கு எதிராக கிளம்பியிருக்கும் கட்டுக்கடங்காத மதம் பிடித்த யானையைக் கட்டிப்போட வேண்டிய நேரம் வந்துவிட்டது. கட்டிப் போட வேண்டியவர்கள் கயிற்றுடன் வருவார்களா? அல்லது கைக்கட்டி வேடிக்கைப் பார்ப்பார்களா? என பொறுத்திருந்து பார்ப்போம்என்று அறிக்கையில் டாக்டர் கிருஷ்ணசாமி கேட்டிருக்கிறார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry