ஈரேழு பதினாலு லோகங்களென்றும், ஏழு கடல்கள், ஏழு மலைகள் என்றெல்லாம் பாட்டி சொல்லும் கதைகளைக் கேட்டிருக்கிறோம். கடலை, மலைகளை அறிந்திருக்கிறோம். அது எங்கே இருக்கிறது பதினாலு லோகம்?
தமிழகத்தை குளிர்விக்க வருகிறது கோடை மழை! கனமழை லிஸ்ட்ல உங்க மாவட்டம் இருக்கா?
“மே 6-ஆம் தேதி வரை வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும். தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 2 முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்” என தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆழ் மனதில் ஸ்டோராகும் எண்ணச் சுமைகள்! இயல்பாக வாழ வழிகாட்டும் ஆன்மிகம்! Part – 2
3 Min Read : ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மூன்று வகையான உயிரோட்டங்கள் உள்ளன. இவை சதா உள்நோக்கி பாய்ந்துகொண்டுள்ளன. அவை ஞான உயிரோட்டம், கர்ம உயிரோட்டம், மற்றும் ஸ்வபாவ உயிரோட்டம். இவைகளின் ஓட்டத்தைப் பொறுத்தே ஒருவரது உள் மற்றும் வெளி உலக நடவடிக்கைகள் உள்வாங்கப்பட்டு வெளிப்படுத்தப்படுகின்றன.
வெப்ப அலைக்கு நடுவே மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு! விருதுநகர் ஆட்சியர் உத்தரவால் கடும் சர்ச்சை! உடனடியாக ரத்து செய்ய ஐபெட்டோ வலியுறுத்தல்!
சுட்டெரிக்கும் வெயில், வெப்ப அலையை பொருட்படுத்தாமல், அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்த விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் உத்தரவிட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
4 மாதங்களாக வட்டி, முதிர்வுத்தொகை வழங்காமல் கைவிரிப்பு! மயிலாப்பூர் நிதி நிறுவன முதலீட்டாளர்கள் கலக்கம்! பணம் தேர்தலுக்குச் செலவிடப்பட்டதாக சந்தேகம்!
150 ஆண்டுகள் பாரம்பரியமான ‘மயிலாப்பூர் இந்து நிரந்தர நிதி நிறுவனம்’ சர்ச்சையில் சிக்கியுள்ளது. சில மாதங்களாக இந்த நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு வட்டித் தொகையும், முதிர்வுத் தொகையும் வழங்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
அரசுக்கு எதிராக ஆசிரியர்களை திருப்பும் ஐஏஎஸ் அதிகாரிகள்! சட்டமன்ற தேர்தலிலும் எதிர் மனநிலையை உருவாக்க முயற்சி! ஐபெட்டோ குற்றச்சாட்டால் பரபரப்பு!
4.30 Min Read : ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “சுட்டெரிக்கும் கோடை வெயிலின் வெப்ப அலையை விட, கல்வித்துறையில் அன்றாடம் வெளிவரும் அபாய அறிவிப்புகளினால் ஆசிரியர்கள் பெரிதும் மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகிறார்கள், கல்வித்துறை இதை உணர வேண்டாமா?. வெப்ப அலை தாக்குதலை விட, பணி நிரவல் அரசாணை மூலம் (G.O.243 நாள்:-21.12.2023) பதவி உயர்வு அமல்படுத்தும் அறிவிப்புகளை ஆசிரியர்கள் மத்தியில் பரவவிட்டு, ஏழை மாணவர்களின் கல்வி நலனை பாதிக்க வைக்க முன் வருவது ஏன்?” என்ற கேள்விகளுடன் அறிக்கையைத் தொடங்கியுள்ளார்.
தமிழக வீரர்களை தேர்வு செய்வதில் பிசிசிஐ பாரபட்சம்! தேர்வுக்குழு மீது முன்னாள் வீரர் பகிரங்க குற்றச்சாட்டு!
இந்திய அணியைத் தேர்வு செய்யும்போது தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் மீது பாரபட்சம் காட்டுவது ஏன்? என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். மட்டுமின்றி, சன்ரைசர்ஸ் அணியில் சிறப்பாக விளையாடிவரும் தமிழக வீரர் நடராஜன் ரிசர்வ் வீரராக கூட தேர்வுசெய்யப்படாதது சர்ச்சையாக மாறியுள்ளது. நடராஜனை ஏன் தேர்வு செய்யவில்லை என பத்ரிநாத்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.
