பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ரூ.2000 மட்டுமே ஓய்வு ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. முதியோர் உதவித் தொகையாக மாதம் ரூ.1,200, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகையாக மாதம் ரூ.1,500 வீதம் வழங்கப்பட்டு வரும் நிலையில், 40 ஆண்டுகள் வரை பணி செய்த அமைப்பாளர்களுக்கு ரூ.2000 ஓய்வூதியம் வழங்குவது அவர்களின் சேவையை கொச்சைப்படுத்துவதாகும்.
கைப்பிடித்து செய்த சத்தியத்தையே நிறைவேற்றாத முதல்வர்! அவமானப்படுத்தும் துறை அமைச்சர்! அரசு மருத்துவர்கள் குமுறல்!
அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் டாக்டர் எஸ். பெருமாள் பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்லும் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் TOWER BLOCK 1 வாசலில், கடந்த 2019 ம் ஆண்டு அக்டோபர் 25 ம் தேதி முதல் ‘சாகும் வரை உண்ணாவிரதம்’ மேற்கொண்டோம். அப்போது தமிழகம் முழுவதும் 7 நாட்கள் அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்தனர்.
ஐபோன்களை தயாரிக்க ஆப்பிளுடன் கைகோர்த்த டாடா நிறுவனம்! மேக் இன் இந்தியா’ திட்டத்தில் இணையும் டாடாவின் ஐபோன் தயாரிப்புகள்!
ஐபோன் உற்பத்தியாளர்களின் பிரத்யேக குழுவில் டாடா குழுமம் இணைந்துள்ளது. இரண்டரை ஆண்டுகளில் இந்தியாவில் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஐபோன்களை உருவாக்கத் தொடங்கும்.
ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வுபெறவில்லை! ஃபிட்னஸ் பற்றியும் மனம் திறந்து பேசிய தோனி!
2024ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 18 அல்லது 19ம் தேதியில் நடக்கும் எனத் தெரிகிறது. இதையடுத்து ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணிகளிலும் தக்க வைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை சமர்ப்பிக்க நவம்பர் 15-ம் தேதி கடைசி நாள் என்று கூறப்படுகிறது.
சட்டமன்ற இருக்கை விவகாரம்! சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் நீதிமன்றத்தில் முறையீடு!
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி, அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
