நீட் தேர்வை ஒழிக்க திமுகவிற்கு வாக்களியுங்கள், திமுக ஆட்சி கட்டிலில் அமர்ந்ததும் முதல் கையெழுத்து நீட் விலக்கு என்று திமுக பிரச்சாரம் செய்து வாக்குகளை பெற்றது. திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், வாக்குறுதி அளித்தபடி நீட் தொடர்பாக எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் நாடகமாடி வருகின்றனர். இரண்டரை ஆண்டுகள் ஆகியும் இன்னமும் நீட் தேர்வு ரத்து செய்யப்படாதது ஏன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
ஆசிரியர்கள் நியமன விவகாரம்! வாக்குறுதி அளித்துவிட்டு துரோகம் செய்யலாமா? தமிழக அரசுக்கு பாமக கண்டனம்!
பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் நியமிப்பதற்காக 2,222 பட்டதாரி ஆசிரியர்கள் / வட்டார வள பயிற்றுனர்களை தேர்ந்தெடுப்பதற்கான போட்டித் தேர்வு அறிவிக்கையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருக்கிறது.
குடியரசுத் தலைவர் வரவுள்ள நிலையில் ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு! உளவுத்துறை தோல்வியடைந்து விட்டதாக ஈபிஎஸ் குற்றச்சாட்டு!
“இந்திய குடியரசுத் தலைவர் நாளை தமிழக ஆளுநர் மாளிகைக்கு வரவுள்ள நிலையில், அடிப்படை பாதுகாப்புக்கே குந்தகமான செயல்கள் நடந்திருப்பது, தமிழக உளவுத் துறையும், காவல் துறையும் இந்த ஆட்சியில் மொத்தமாக செயல் இழந்துவிட்டதையே வெளிக்காட்டுகிறது” என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
பாண்டியன் கண் அசைவுக்கு கட்டுப்படும் முதலமைச்சர்! ஆளும் கட்சியை ஆட்டுவிக்கும் வேலூர்க்காரர்!
முதல்வர் நவீன் பட்நாயக்கின் தலைமையில், ஒடிசா மாநிலம் மிகச்சிறப்பான நிலையை எட்டியுள்ளது. ஒடிசாவின் மாற்றம் என்பது, குறிப்பாக கடந்த பதினைந்து ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட ஆற்றல்மிக்க மாற்றங்களால் ஏற்பட்டது. இந்த வளர்ச்சியில், ஒடிசா முதல்வரின் நம்பிக்கைக்குரிய தளபதி வி.கே.பாண்டியன் எனும் கார்த்திகேய பாண்டியன் ஆற்றிய பங்கு விலைமதிப்பற்றது.
