தீபாவளிப் பண்டிகை அடுத்த மாதம் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க தீயணைப்புத்துறை உரிமம் வழங்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
தெம்பு, திராணி, வெட்கம், மானம், ரோஷம் இருந்தால் நீட் தேர்வை ரத்து செய்யுங்கள்! திமுகவை வெளுத்தெடுத்த எடப்பாடி பழனிசாமி!
நீட் தேர்வுக்கு எதிரான திமுகவின் கையெழுத்து இயக்கம் மக்களை ஏமாற்றும் வேலை, மக்களவைத் தேர்தல் வருவதால் இப்படிச் செய்கிறார்கள் என்று அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
சிறுபான்மை மக்கள் அதிமுக-வை ஆதரித்துவிடுவார்களோ என்ற அச்சம் முதல்வருக்கு வந்துவிட்டது! ஈபிஎஸ் விமர்சனம்!
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.
முதலமைச்சர் வாக்குறுதிப்படி அகவிலைப்படி உயர்வினை உடனடியாக அறிவிக்க வேண்டும்! தமிழக அரசுக்கு ஐபெட்டோ வலியுறுத்தல்!
அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (ஐபெட்டோ) தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை, அகவிலைப்படி தொடர்பாக தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
உங்கள் ஆரோக்கியத்துக்கு வேட்டு வைக்கும் டிஜிட்டல் புத்தகம்! Know what’s better for your heath? – a digital book or a print book?
3.00 Minute(s) Read : மன அழுத்தத்தைக் குறைத்து, மனதை சுறுசுறுப்பாக்கி, கற்பனைத் திறனை மேம்படுத்தி, அறிவை வளர்ப்பதுதான் வாசிக்கும் பழக்கம். புத்தகங்கள் ஒரு நபரின் தனிப்பட்டக் கொள்கைகளையும் மாற்றும் திறன் படைத்தது. கோபம், சோர்வு, மன அமைதியின்மை ஆகியவற்றைச் சரிப்படுத்த நூல் வாசிப்பு சிகிச்சையாகவே கையாளப்படுகிறது. புதிய புத்தகங்களிலிருந்து வெளியாகும வாசமே அலாதியானது.
சாதிவாரி கணக்கெடுப்பு! அதிகாரம் இருந்தும் மத்திய அரசின் பக்கம் மடைமாற்றுகிறார் முதல்வர்! மாநில உரிமைகளை விட்டுக்கொடுப்பதாகவும் பாமக விமர்சனம்!
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய அளவில் 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார். சமூகநீதியை நிலை நிறுத்தவும், வளர்ச்சியின் பயன்களை அடித்தட்டு மக்கள்வரை கொண்டு செல்லவும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு மிகவும் அவசியம் என்று ஒப்புக்கொண்டதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டுகிறேன்.
