தமிழ்நாட்டுக்குரிய காவிரி நீரைத் திறந்துவிடாமல் கடந்த சில மாதங்களாக கர்நாடகம் முரண்டு பிடித்துவருகிறது. இதனால், காவிரிப்படுகையின் கடைமடை வரை குறுவை சாகுபடிக்கான நெற்ப்பயிர்கள் காய்ந்து கருகிக்கொண்டிருக்கின்றன.
ஒருநாள், டெஸ்ட், டி20 என மூன்றிலும் நம்பர் 1! இந்திய கிரிக்கெட் அணி வரலாற்றுச் சாதனை!
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டியானது மொஹாலியில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 276 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியில் 4 வீரர்கள் அரைசதம் அடிக்க, 48.4 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது.
விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 இழப்பீடு! பருவமழை பொய்த்த மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கவும் வலியுறுத்தல்!
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12 முதல் செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி வரை தண்ணீர் திறக்கப்பட்டு, டெல்டா மாவட்டங்களில் சுமார் 5.50 லட்சம் ஏக்கர் பாசன நிலங்களில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படும்.
கடிப்பதற்கு முன்பாக பாம்பு எப்படி எச்சரிக்கும்? எந்தெந்த பாம்பு என்னவிதமான பாதிப்பை ஏற்படுத்தும்? Identifying venomous snakes!
இந்தியாவில், மழைக்காலத்தில் அதிகம்பேர் பாம்புக் கடிக்கு ஆளாகின்றனர். விவசாயப் பணிகள் அதிகமாக நடைபெறும் மழைக்காலத்தில் தான், பாம்புகளும் அதிகமாக முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன என்பதால் கிராமப்புறங்களில் பாதிக்கப்படுவோர் அதிகம்.
சனாதன சர்ச்சை! உதயநிதி மீது FIR பதியக் கோரும் மனு விசாரணைக்கு ஏற்பு! தமிழக அரசு, உதயநிதி, ஆ.ராசாவுக்கு நோட்டீஸ்!
சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், ‘சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள்.
ஆளவந்தார் அறக்கட்டளை நிலத்தில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைப்பதா? தமிழக அரசுக்கு பாமக கடும் எதிர்ப்பு!
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நினைவு பன்னாட்டு அரங்கம் கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு கிராமத்தில் கட்டப்பட இருப்பதாகவும், கலைஞர் பன்னாட்டு அரங்கம் கட்டப்படவுள்ள 60 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் பெரும் பகுதி ஆயிரம் காணி ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலம் என்றும் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
