காவிரி நதிநீர்ப் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகா வழங்கவில்லை. இதுகுறித்து காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் கர்நாடகா அதனைச் செயல்படுத்தவில்லை.
ஓபிஎஸ் நீக்கப்பட்டது செல்லும் என ஐகோர்ட் அதிரடித் தீர்ப்பு! அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்குத் தடை விதிக்கவும் மறுப்பு!
அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடைவிதிக்க கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, பொதுக்குழுக் கூட்டம் நடத்தலாம் என்று உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு அளித்த உத்தரவின் அடிப்படையில், அந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தொடர்பாக எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. அதிமுக பொதுக்குழு ஜூலை 11-ம் தேதி மீண்டும் கூடும் என்று அறிவிக்கப்பட்டது.
கதிரியக்க நீரைக் கடலில் கலக்கவிடும் ஜப்பான்! உலக நாடுகள் கடும் எதிர்ப்பு! மனித குலத்துக்கு எதிரான நடவடிக்கை என கண்டனம்!
ஃபுகுஷிமா அணுமின் நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை பசிபிக் பெருங்கடலில் ஜப்பான் நேற்றிலிருந்து வெளியேற்றுகிறது. ஜப்பானின் இந்த நடவடிக்கைக்கு சீனா, வடகொரியா, தென்கொரியா மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
‘கடைசி விவசாயி’ திரைப்படத்துக்கு 2 தேசிய விருதுகள்! ராக்கெட்ரி சிறந்த திரைப்படம்! அல்லு அர்ஜுன் சிறந்த நடிகர்!
இந்திய அரசு சார்பில் திரையுலகினரை கெளரவிக்கும் வகையில் ஆண்டு தோறும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 1954 முதல் ஆண்டுதோறும் வெளியாகும் திரைப்படங்களில் ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த படம் எவை என நடுவர்களால் தேர்வுசெய்து இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.
விக்ரம் லேண்டரில் இருந்து வெளியேறியது ரோவர்! 2 வாரங்களுக்குத் தென்துருவத்தில் ஆய்வு! சந்திரயான்-3 மிஷன் பூரண வெற்றி!
சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் கலன், நிலவில் நேற்று (ஆக.23) வெற்றிகரமாக தரையிறங்கிய நிலையில், லேண்டரில் இருந்து சாய்தள பாதையின் வழியாக வெளிவந்த பிரக்யான் ரோவர் தற்போது நிலவில் உலா வருகிறது. ஊர்திக்கலமான ரோவர், அதன் தாய்க்கலமான லேண்டரில் இருந்து வெளியே வந்துவிட்டதை உறுதி செய்யும் வகையில், தாயும் சேயும் ஒன்றையொன்று படமெடுத்து அனுப்பிவிட்டன.
திருமணத்திற்கு எத்தனைப் பொருத்தம் தேவை? பூப்பெய்திய நேரம் வைத்து ஜாதகம் கணிப்பது சரியா? Part – 2
இந்த பாகத்தில், பத்துப் பொருத்தம் வந்தது எப்படி? என்பதைப் பார்க்கலாம். இன்றைய காலத்தில் உசிலம்பட்டியில் உட்கார்ந்து கொண்டு உலக நாடுகளின் நேரத்தை நம்மால் துல்லியமாகச் சொல்ல முடியும். அந்த அளவிற்கு டெக்னாலஜி வளர்ந்துவிட்டது.
காவிரி விவகாரத்தில் தமிழக அரசு பொய் சொல்வதாகப் புகார்! பிரதமரை சந்தித்து முறையிட கர்நாடக அரசு முடிவு!
காவிரியில் தமிழகத்திற்கு உரிய நீரை கர்நாடகா அரசு திறந்துவிடாததால், தமிழ்நாடு அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனை விசாரிக்க தனி அமர்வை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள நிலையில், இதுபற்றி விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுமாறு கர்நாடகா முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி வலியுறுத்தியிருந்தார்.
