மதுரையில் அதிமுக பொன்விழா எழுச்சி மாநில மாநாட்டை அக்கட்சி நிர்வாகிகள் வெற்றிகரமாக நடத்தி இருக்கின்றனர். சுமார் 15 லட்சம் தொண்டர்கள் மாநாட்டில் பங்கேற்றனர். அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகளால் மதுரையே விழாக்கோலம் பூண்டிருந்தது.
அதிமுக பிரமாண்ட மாநாடு! குலுங்கியது மதுரை! மாஸ் காட்டிய ஈபிஎஸ்! லட்சக்கணக்கில் திரண்ட தொண்டர்கள்!
மதுரையில் நடைபெறும் அஇஅதிமுகவின் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, கட்சியின் வயதைக் குறிக்கும் வகையில் இன்று காலை 51 அடி உயர கம்பத்தில் கட்சிக் கொடியேற்றி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றுள்ளதால் மதுரை ஸ்தம்பித்துள்ளது.
ராசிக்கல்லா? ராசிக்குக் கல்லா..? எந்த விரலில் ராசிக்கல் மோதிரம் அணிய வேண்டும்?
யாருக்கு எப்போது அதிர்ஷ்டம் அடிக்கும் என்பதே தெரியாது. ஏதாவது அதிசயம் நடந்து வாழ்க்கையில் முன்னேற மாட்டோமா? கோடீஸ்வரர் ஆகமாட்டோமா? என்ற ஏக்கம் அனைவருக்கும் உண்டு.
நீட் மாணவர் தற்கொலை! உண்மையைச் சொல்லாமல் பதற்றத்தை உருவாக்குவது அராஜகம் என பாஜக குற்றச்சாட்டு!
மாநில பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த ஜெகதீசன் என்ற மாணவர் மூன்று முறை நீட் தேர்வு எழுதியும், அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காமல் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டது வருத்தமளிக்கிறது.
நீட் விவகாரத்தில் திமுக பொய் பேசி ஏமாற்றுகிறது! இன்னும் எத்தனை உயிர்களைத்தான் பலிவாங்கப் போகிறார்களோ? என ஈபிஎஸ் கேள்வி!
நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும், பொய் பேசி ஏமாற்றும் வித்தையை விட்டுவிட்டு, சட்ட வல்லுநர்களைக் கலந்தாலோசித்து, நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய தீர்வு காண வேண்டும் என்று திமுக அரசை, அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
அரசு உதவிபெறும் பள்ளி மீது மதமாற்றப் புகார்! டி.சி. வாங்கிய 150க்கும் மேற்பட்ட மாணவர்கள்!
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் தாலுகா சுரண்டை அருகே உள்ள கிராமம் அச்சங்குட்டம் எனப்படும் அச்சங்குன்றம். திருநெல்வேலி சி.எஸ்.ஐ., மறைமாவட்டத்தின் கீழ் இயங்கும், திருநெல்வேலி மாவட்ட அறக்கட்டளை சங்கத்தால் (Tirunelveli District Trust Association-TDTA) நடத்தப்படும் அரசு உதவி பெறும் TDTA தொடக்கப் பள்ளி 50 ஆண்டுகளுக்கும் மேலாக அச்சங்குன்றத்தில் செயல்பட்டு வருகிறது.
