அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “அதிமுகவில் 2 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய இலக்கு. அதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம்.
சாதி வெறியும், ஊழலும்தான் எதிர்க்கட்சிகளின் அடையாளம்! திமுக மீது பிரதமர் மோடி கடும் விமர்சனம்!
போர்ட் பிளேரில் வீர சாவர்க்கர் விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தை காணொலி வாயிலாக பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் கூட்டம் குறித்து விமர்சித்தார்.
மத்திய அரசிடம் மு.க. ஸ்டாலின் சரணாகதி! தகுதி இல்லாதவருக்கு வாக்களித்துவிட்டு மக்கள் அனுபவிப்பதாக ஈபிஎஎஸ் கடும் சாடல்!
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “எந்தவிதத் தகுதியும் இல்லாமல், வாரிசு அரசியலில் தலையெடுத்த ஒருவரிடம், ஆட்சியை ஒப்படைத்ததன் பலனை தமிழக மக்கள் தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
பொது சிவில் சட்டத்தால் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்த முடியும்? மத்திய அரசின் முயற்சி பற்றிய விரிவான பார்வை! #UniformCivilCode
4 Min(s) Read : மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில், கடந்த மாதம் 27ந் தேதி வந்தே பாரத் ரயிலை துவக்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி, “பொது சிவில் சட்டத்தின் பேரில் பொது மக்களை தூண்டிவிடும் வேலை நடைபெற்று வருகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு ஓர் சட்டம்; மற்றொரு நபருக்கு இன்னொரு சட்டம் என்று இருந்தால், அந்த குடும்பத்தை எப்படி நடத்துவது என்று நீங்களே (பொதுமக்கள்) சொல்லுங்கள்,” என்று பேசி இருந்தார்.
சமூக நீதி பற்றி பேச திமுகவுக்கு என்ன தகுதி இருக்கிறது? மருத்துவத்துறை சீரழிந்து விட்டதாகவும் ஈபிஎஸ் விமர்சனம்!
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுக தலைமைக் கழக செயலாளர்கள் மற்றும் மாவட்டக் கழக செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
