தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவரும், ஐபெட்டோ தேசியச் செயலாளருமான வா. அண்ணாமலை, ஆசிரியர் சங்கங்களே..! என்று தலைப்பிட்டு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், “ஆசிரியர் சங்கங்களே..! நாமெல்லாம் ஒரு மண்ணில் படர்ந்த கொடிகள்! ஒரு கொடியில் பூத்த மலர்கள்..! ஒரு மலரில் விரிந்த இதழ்கள்..! ஒரு இதழில் ஓடும் நரம்புகள்..! என்பதை நம்மால் மறுக்க முடியுமா..? மறக்கத்தான் முடியுமா..?
NLC விரிவாக்கப்பணி! தமிழக அரசின் ஒத்துழைப்புடன் ஜேசிபி மூலம் அழிக்கப்படும் பசுமை வயல்கள்!
நெய்வேலி அருகே புவனகிரி ஒன்றியம் சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில் என்எல்சி இந்தியா நிறுவனம் கையகப்படுத்திய நிலத்தில் பரவனாறு விரிவாக்கம் வாய்க்கால் வெட்டும் பணி, விளைநிலங்களில் உள்ள நெல் பயிரை அழித்து தீவிரமாக நடந்து வந்து வருகிறது. அப்பகுதியில் பாதுகாப்புக்கு 500-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பணம் மட்டுமே குறிக்கோள்! இது புத்திசாலித்தனமான அரசா? கோவை மாவட்ட செயலாளர் ஆடியோவால் திமுகவில் பெரும் சலசலப்பு!
கோவை திமுக மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் பேசுவதாக ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திமுக அரசு குறித்து அவர் கடுமையாக விமர்சிப்பதாக அந்த ஆடியோ உள்ளது. அதில், கடந்த பொங்கல் பண்டிகையின்போது அரசு கொடுத்த 21 வகையான பொருட்களின் தொகுப்பை மக்கள் விரும்பவில்லை, அதிமுக ஆட்சியில் கொடுத்தது போல பெண்கள் பணத்தை எதிர்பார்த்தார்கள்.
பயங்கரவாத அமைப்புகளின் பெயர்களில் கூட இந்தியா உள்ளது! எதிர்க்கட்சிகள் கூட்டணி குறித்து மோடி கடும் விமர்சனம்!
‘இந்தியன் முஜாகிதீன், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவிலும் கூட ‘இண்டியா’ என்ற பெயர் உள்ளதாக, எதிர்க்கட்சிகள் கூட்டணி குறித்து பிரதமர் நரேந்திர மோடி கேலி செய்துள்ளார். நாடாளுமன்றத்தை முடக்கி வரும் எதிர்க்கட்சியினரைத் “திக்கற்றவர்கள்” என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஜிஎஸ்டி-யின் கீழ் அரிசி போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள்! தமிழ்நாட்டில் அரிசி விலை கிடுகிடு உயர்வு!
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் அரிசி விலை கிலோவுக்கு பத்து ரூபாய் வரை உயர்ந்துள்ளது. அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் விதமாக பாசுமதி அரிசி தவிர மற்ற அரிசிகளின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடைவிதித்திருக்கிறது.
தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அறிவை உபயோகிப்பதில்லை! தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் கடும் கண்டனம்!
தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் தனது அறிவை உபயோகிக்காமல் இயந்திரத் தனமாக சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியதாக தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விமர்சித்துள்ளது.
