பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் தமிழ்நாட்டின் தேர்ச்சி விகிதம் கணிசமாக குறைந்திருப்பது வருத்தமளிக்கிறது. குறிப்பாக இத்தேர்வில் பங்கேற்ற அரசு பள்ளி மாணவர்களில் 80 விழுக்காட்டினர் தோல்வியடைந்திருப்பது வேதனையளிக்கிறது.
அறநிலையத்துறை கோவில்களில் தமிழிலும் குடமுழுக்கு! செயல்முறைகளை அனுப்ப ஆணையர் வேண்டுகோள்!
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிப்பேராணையின்படி, திருக்கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் “திருக்கோயில்களில் வழிபடும் பக்தர்கள் தாம் வழிபடும் கோயிலின் ஆகமத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு, திருக்கோயில் ஆகமத்தை ஆவணப்படுத்தி தமிழிலும், ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்து புத்தகங்களாக பதிப்பிக்க முடிவு செய்யப்பட்டது.
விரைவில் பொதுச் செயலாளரை தேர்வு செய்யும் பணி தொடங்கும்! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
சென்னையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு 72 நாட்களுக்குப் பின்னர், இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பொறுப்புடன் வந்த எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வேலூரில் சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு! கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என உறுதி!
வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு வருவதையொட்டி பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. 127 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 85 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவற்றின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சிறந்த மனிதநேய விருது பெற்றார் நடிகர் சௌந்தரராஜா! உழவர்களுக்கு அர்ப்பணிப்பதாக நெகிழ்ச்சி!
Take Care International Foundation என்ற அமைப்பு மக்களுக்காக சேவை செய்யும் சிறந்த மனிதர்களை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு ஆண்டும் Pride of Humanity விருது வழங்கி கௌரவிக்கிறது.
நெற்பயிரை காப்பபற்ற கோவை வேளாண் பல்கலை. முக்கிய அட்வைஸ்! வேளாண் படிப்புகளுக்கு 10ம் தேதி ரேங்க் லிஸ்ட் வெளியீடு!
கோவையில், வேளாண் பல்கலைகழகத்தில், துணை வேந்தர் கீதாலட்சுமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தென்மேற்கு பருவ மழையைப் பொறுத்தவரை தமிழகத்தில் 90% அதிகம் பதிவாகியுள்ளது. அதே சமயம் செங்கல்பட்டு, கள்ளகுறிச்சி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை அளவு குறைந்துள்ளது.
