‘செலக்டிவ்’ மதச்சார்பின்மை வியாதி காரணமாகவே, ராஜஸ்தானில் அப்பாவி தையல் கடைக்காரர் கொலை செய்யப்பட்டதை கண்டும் காணாமல், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தி.மு.க., தலைவர்கள் மவுனம் காப்பதாக, கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ.வும், பா.ஜ.க. மகளிரணி தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
எல்கேஜி, யுகேஜி மாணவர் சேர்க்கை தொடங்குகிறது! வகுப்பு நடத்த அங்கன்வாடி பணியாளர்களுக்கு உத்தரவு!
தமிழகம் முழுவதும் 2,381 மையங்களில் எல்கேஜி -யுகேஜி மாணவர் சேர்க்கையை நடத்த உத்தரவிட்டுள்ள தொடக்கக் கல்வித்துறை, தற்பொழுது ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படாத நிலையில், அங்கன்வாடி பணியாளர்களைக் கொண்டு வகுப்புகளை நடத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது.
கல்வித்துறையின் அடுத்த சறுக்கல்! தற்காலிக ஆசிரியர் நியமனத்தை நிறுத்த உத்தரவு! ஐகோர்ட்டும் அதிருப்தி!
தமிழகத்தில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக, தற்காலிகமாக நிரப்பிக் கொள்ள பள்ளிக் கல்வித் துறை அண்மையில் உத்தரவிட்டது. அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை பள்ளிகள் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள இந்த 13,331 ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பு ஊதியத்தில் ஓராண்டுக்குள் நிரப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது! ஐகோர்ட் உத்தரவால் ஓபிஎஸ் தரப்புக்கு பின்னடைவு!
ஜூலை 11ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கும் கோரிக்கையை விசாரிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பேக் செய்யப்பட்ட உணவு, ஆர்கானிக் உணவுகளுக்கு வரி அதிகரிப்பு! உயர்த்தப்பட்ட வரி விகிதங்கள்!
சண்டிகரில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்றும், இன்றும் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சிலின் 47வது கூட்டத்தில் பல்வேறு பொருட்களின் ஜிஎஸ்டி வரிவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
மின்வாரிய ஊழியர்களுக்கு சீருடை! சாந்தமான நிறத்தில் அணிய வேண்டும் என கட்டுப்பாடு!
தமிழக மின்வாரியத்தில் பணியாற்றக்கூடிய ஊழியர்கள் சீருடை விதிகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
