இலங்கை அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் தடுப்புகளை அடித்து நொறுக்கி உள்ளே நுழைந்தனர். அங்கிருந்த எம்.பி. ரஜிதா சேனரத்னாவை அவர்கள் கடுமையாகத் தாக்கியதாக கூறப்படுகிறது. இலங்கை அதிபர் மாளிகை தற்போது போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.
பள்ளிகளில் வேலைவாய்ப்பக பதிவு முறை ரத்து! ஆன்லைனில் செய்துகொள்ளுமாறு தமிழக அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் வேலை வாய்ப்பிற்காக தங்களது கல்வித் தகுதியை, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யும் நடை முறை இருந்து வருகிறது. 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்ததும் அந்தந்த பள்ளி வளாகத்திலேயே இணையத்தின் மூலமாக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வந்தார்கள்.
பிரிட்டன் பிரதமர் பதவிக்கு நாராயணமூர்த்தி மருமகன் போட்டி! டிவிட்டர் பிரச்சாரத்தை தொடங்கினார் ரிஷி!
பிரிட்டனில் அமைச்சர்கள் 40-க்கும் மேற்பட்டோர் ராஜினாமா செய்து, இதற்கு முன் இல்லாத வகையில் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியதால், பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 10ம் வகுப்பு மாணவர்கள்! 4 பேர் கைது!
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு மேல் நிலைப் பள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது மாணவி 10-ம் வகுப்பு படித்து வந்தார். இப்பள்ளியில் பிளஸ் 2 படித்து முடித்த கொடிக்களத்தைச் சேர்ந்த 17 வயது மாணவர் மே 22-ம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். அப்போது அந்நிகழ்ச்சியில் திட்டக்குடியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியும் கலந்து கொண்டனர். கேக் வெட்டிய போது மாணவ, மாணவியர் சேர்ந்து செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளனர்.
காமராஜ் வீடு உள்பட 49 இடங்களில் ரெய்டு! அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என எடப்பாடி கண்டனம்!
முன்னாள் அமைச்சர் வேலுமணி, மற்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு நெருக்கமானவர்களாக கருதப்படும் வடவள்ளி சந்திரசேகர், அருப்புக்கோட்டை செய்யாதுரை, மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமி மகன் செந்தில்குமார் ஆகியோரின் இல்லம், அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு தினங்களாக சோதனைகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது டெல்டா மாவட்டத்தில் முக்கிய பிரமுகரான முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜை லஞ்ச ஒழிப்புத்துறை குறி வைத்திருக்கிறது.
