கூச்சல் எழுப்பியபடி வராதீர்கள்! மோசடி நடந்தது காங்கிரஸ் ஆட்சியில்! நிர்மலா சீதாராமன் விளக்கம்!

0
144

குஜராத்தில் ஏபிஜி எனும் கப்பல் கட்டும் நிறுவனம் ரூ.23 ஆயிரம் கோடி வங்கி மோசடி செய்தது, மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதுதான், பாஜக ஆட்சியில் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

குஜராத்தைச் சேர்ந்த மிகப்பெரிய கப்பல் கட்டும் நிறுவனம் ஏபிஜி(ABG) ஷிப்யார்டு லிமிடெட். இந்தியாவிலேயே கப்பல் கட்டும் நிறுவனங்களில் மிகப்பெரியதாகவும், இதுவரை 160-க்கும் மேற்பட்ட கப்பல்களையும் இந்நிறுவனம் கட்டமைத்துள்ளது

ஏபிஜி நிறுவனம் மீது 2019ம் ஆண்டு சிபிஐயிடம் ஸ்டேட் வங்கி புகார் அளித்தது. 28 வங்கிகளில் ரூ.22 ஆயிரத்து 284 கோடி கடன் பெற்று மோசடி செய்திருப்பதாக எஸ்பிஐ வங்கி அளித்த புகாரின் அடிப்படையில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. ஏபிஜி நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட கடன் தொகையை அந்தநிறுவனம் முறைகேடாக அதனுடைய பல்வேறு துணை நிறுவனங்களுக்கு வழங்கியது, கணக்குத் தணிக்கையின் போது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், மும்பையில் ரிசர்வ் வங்கியின் வாரியக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் குஜராத் கப்பல் நிறுவன வங்கி மோசடி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், நாட்டிலேயே மிகப்பெரிய  ரூ.22,842 கோடி மோசடி என்று சத்தம் போட்டுக்கொண்டு சிலர் வருவார்கள். அவர்களுக்குச் சொல்கிறேன்

Nirmala Sitharaman
File Image

இந்த ஏபிஜி கப்பல் நிறுவனத்துக்கு கடன் வழங்கப்பட்டது கடந்த 2013ம் ஆண்டுக்கு முன்புதான், அப்போது காங்கிரஸ் தலைமையிலான அரசு தான் ஆட்சியில் இருந்தது. பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அப்போது இல்லைவழக்கமாக இதுபோன்ற வங்கி மோசடியைக் கண்டுபிடிக்க 52 முதல் 56 மாதங்களாகும்.  ஆனால், இந்த மோசடி குறித்து சிபிஐ அமைப்பு விரைந்து கண்டறிந்து நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த மோசடியை கண்டுபிடித்ததன் மூலம் வங்கித்துறையில் இருந்த கறைகள் சுத்தம் செய்யப்பட்டுவிட்டதை காட்டுகிறது.

இந்த வழக்கில் அதிக ஈடுபாட்டுடன் வங்கிகள், வங்கிகள் கூட்டமைப்பு உழைத்து ஆதாரங்களைத் திரட்டின. வழக்கமான காலத்தைவிட குறைந்த நாட்களில் மோசடி நடந்தது கண்டறியப்பட்டுள்ளது. கணக்குத்தணிக்கை குறித்த அனைத்து அறிக்கைகளும் 2020ம் ஆண்டே சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது, 2022ம் ஆண்டு சில ஆதாரங்களும் ஒப்படைக்கப்பட்டன. இதன் அடிப்படையில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனஇவ்வாறு சீதாராமன் தெரிவித்தார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry