வேகமாகப் பரவும் இன்புளூயன்சா காய்ச்சல்! எச்சரிக்கையாக இருக்குமாறு அமைச்சர் மா.சு. அறிவுறுத்தல்!

0
245

தமிழகத்தில் தற்போது இன்ஃபுளுயன்சா என்ற புதிய வகை காய்ச்சல் பரவி வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெரியவர்களை விட குழந்தைகளை காய்ச்சல் அதிக அளவில் பாதிக்கிறது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சென்னையில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் தற்போது புதுவகை காய்ச்சல் பரவி வருகிறது. தற்போது பரவும் காய்ச்சலின் உண்மை நிலையை அறிவிக்க இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தை பொருத்தவரை இன்ஃபுளுயன்சா காய்ச்சல் மூலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை அரசு மருத்துவமனையில் 202 பேரும், தனியார் மருத்துவமனையில் 215 பேரும், வீடுகளில் 54 குழந்தைகள் என மொத்தம் 282 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Also Read : இந்துவாக இருப்பவர்கள் விபச்சாரியின் மகன்கள்! தி.மு.க. எம்.பி. ஆ.ராசா சர்ச்சை பேச்சு!

இதைப்பற்றி மக்கள் பதற்றப்பட வேண்டிய சூழல் இல்லை. அனைத்து அரசு மருத்துவமனைக்கும் சுற்றிக்கை விடப்பட்டு உள்ளது. அதில் எந்தவித காய்ச்சலாக இருந்தாலும் எச்சரிக்கை வேண்டும். மருந்து கடைகளிலும் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் இன்ஃபுளுயன்சா போன்ற வைரசுக்கு மருந்து கொடுக்கக்கூடாது. மழைக்காலம் என்பதால் மக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இன்புளுவன்சா காய்ச்சலுக்கு தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் 8 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஜனவரி மாதம் முதல் இதுவரை 819 பேர் இந்த வகை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 282 பேர் சிகிச்சையில் உள்ளனர். நோய் பாதிப்பை கட்டுப்படுத்த வழிகாட்டு நெறிமுறைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

Also Read : தொடக்கப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம்! சாப்பாட்டிலேயே கைகழுவிய முதலமைச்சர்!

இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் அனைத்து சுகாதாரத்துறை மாவட்ட அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் திடீர் வறட்டு இருமல், தொண்டை வலி, தலைவலி, மூக்கடைப்பு, உடல் வலி, உடல் சோர்வு ஆகியவை இன்புளுவென்சா காய்ச்சலின் அறிகுறிகள் என்று தெரிவித்துள்ளார். மேற்கண்ட அறிகுறிகளுடன் பொதுமக்கள் வந்தால் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கான சிகிச்சை வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

லேசான அறிகுறிகள் கொண்டவர்கள் 48 மணி நேரத்திற்கு மருத்துவ கண்காணிப்பில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 5 அல்லது 5 வயதுக்குட்பட்ட பச்சிளம் குழந்தைகள், தீவிரமான சுவாச பிரச்சனை கொண்டவர்கள், நீரிழிவு மற்றும் உடல் பருமன் கொண்டவர்கள் என எளிதில் நோய்த்தொற்றுக்கு ஆளாகக்கூடிய நபர்களுக்கு அறிகுறிகள் கண்டறிந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் என்றும் ஆசெல்டமிவிர் மற்றும் தேவைப்படும் மருந்துகளை வழங்க வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry