காமெடி காதல் கதை ‘கன்னி ராசி’! Blacksheepன் “Bs value” OTTக்காக படப்பிடிப்பு துவக்கம்!

0
203

இளம் வயதினரையும், குடும்பங்களையும் ஈர்க்கும் படைப்புகளுக்கு பெயர் பெற்ற Blacksheep குழு, YouTube தளத்தில் தமிழின் முதல் 100 மில்லியன் பார்வைகளை கடந்த வெப் சீரிஸாக சாதனை படைத்த “ஆஹா கல்யாணம்” என்ற முக்கோணக் காதல் கதையின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, இப்போது மீண்டும் “கன்னி ராசி” என்ற தலைப்பில் (மூன்று: ஒன்று) காதல் கதையை துவங்குகிறது.

Blacksheep உடைய சொந்த OTT-யான “Bs value”வுக்காக உருவாக்கப்படும் இந்தத் தொடரை அன்புதாசன் இயக்குகிறார். இவரது எழுத்து மற்றும் நடிப்பில் உருவான ‘கல்யாண சமையல் சாதம்’ என்ற தொடர் 100 மில்லியன் பார்வையை கடந்ததோடு, YouTube தளத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் இந்த தொடர் “என்ன சொல்ல போகிறாய்” புகழ் தேஜூ அஸ்வினியை கோலிவுட்டுக்கு வழங்கியது குறிப்பிடதக்கது.

மீசைய முறுக்கு, கோலமாவு கோகிலா, ஆதித்ய வர்மா, ஓ மண பெண்ணே போன்ற திரைப்படங்களில் பங்குபெற்றதில் பாராட்டப்பட்ட நடிகராக வலம் வருவதோடு, அன்பு டிஜிட்டல் உலகத்தில் தனது எழுத்து மற்றும் இயக்கத்திற்காக வெறித்தனமான ரசிகர்களையும் கொண்டிருக்கும் அன்புதாசன், பெரிய அளவில் இயக்குனராக பரிணமிக்கும் படைப்பாக இது இருக்கும். Blacksheep உடைய பல புனைக்கதை மற்றும் புனைக்கதை அல்லாத தொடர்களில் குறும்புத்தனம் மற்றும் அசத்தலான நடிப்பு மூலம், லட்சக்கணக்கான டிஜிட்டல் பார்வையாளர்கள் மத்தியில், ஏற்கனவே பிரபலமாக இருந்த சேட்டை ஷெரிப் இதில் ஹீரோவாக நடிக்கிறார்.

‘கன்னிராசி’ என்பது ஒரு வேடிக்கை நிறைந்த வலைத் தொடராகும். இது திருப்பங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட தொடர். சேட்டை ஷெரிப் உடன் அமேசான் பிரைம் ஸ்டாண்டப் காமெடி புகழ் அபிஷேக் குமார், ஸ்வேதா, ஷாம்னி, பதின் குமார், அருண் கார்த்தி, குட்டி மூஞ்சி விவேக் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

நாயகன் கிருஷ்ணாவை (சேட்டை ஷெரீப்) சுற்றி இந்த கதை சுழல்கிறது, ஒரு நல்ல வேலையுடன் கச்சிதமான வாழ்க்கையை வாழவேண்டும் என்ற அவனது கனவு நிறைவேறாமல் இருக்கிறது. பின்னர் Mr. X என்ற ஒருவரை சந்தித்த பிறகு, அவனது கனவு வேலை அவனுக்கு கிடைக்கிறது, அதிலிருந்து அவன் வாழ்கை சிறப்பானதாக மாறுகிறது. கிருஷ்ணா எப்படி அவனது கனவு வேலையை அடைந்தான்?, Mr. X யார்?, இது தான் கன்னிராசி வலைதொடர், இது மொத்தம் 10 எபிசோட்களை கொண்ட தொடராக உருவாகிறது .

ஆகஸ்ட் 2022 இல் இத்தொடரை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. படக்குழுவினர் கலந்துகொண்ட எளிமையான பூஜையுடன், படப்பிடிப்பு தொடங்கியது. படத்தின் தொழில்நுட்ப குழு: நவநீத கிருஷ்ணன் (இணை இயக்குனர்), ஷஷாங்க், மகிமை, நித்யா, லோகேஷ்வரி( உதவி இயக்குனர்கள்). சரவணன் & நர்மதா (எழுத்தாளர்கள்), ஃப்ரெட்ரிக் விஜய் (ஒளிப்பதிவு), டார்வின் அஜய் (கேமரா அசிஸ்டண்ட்), பிரதீப் (கலை இயக்கம்), ஹரி ( SFX), நிசாம் (DI), அர்சத், இர்ஷத்(டிசைன்ஸ்), அசார்(நடனம்), நரேஷ்-கிஷோர்(எக்ஸிகியூடிவ் புரடியூசர்).

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry