தேர்தல் வாக்குறுதிகளில் இருந்து நழுவும் திமுக! ஓபிஎஸ் குற்றச்சாட்டு!

0
184

சட்டப்பேரவை மானியக்கோரிக்கை விவாத நிகழ்வுகளில் கலந்து கொண்டவிட்டு தனது சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு செல்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் ஓ.பன்னீர்செல்வம் இன்று மதுரை வந்தடைந்தார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தேர்தல் வாக்குறுதியில் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், திமுகவினர் அதிலிருந்து நழுவி உள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து திமுகவிடம் தான் கருத்து கேட்க வேண்டும்” என்றார்.

மானியக்கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட திட்டங்களை திமுக நடைமுறைப்படுத்துமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அவற்றையே நிறைவேற்ற முடியாத அரசு புதிய திட்டங்களை எவ்வாறு செயல்படுத்தப்போகிறது” என்று பதிலளித்தார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry