Saturday, February 14, 2026
Home Blog Page 125

விலையில்லா மடிக்கணினி திட்டத்துக்கு மூடுவிழா! கணினி ஆய்வகங்களுக்கு கூடுதலாக சில கம்ப்யூட்டர்களை வழங்க அரசு திட்டம்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மூளையில் உதித்த விலையில்லா மடிக்கணினித் திட்டம் 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. விலையில்லா மடிக்கணினி திட்டத்தின் கீழ் 2011-2012 முதல் 2019-2020 வரை (பிப்ரவரி வரை) ரூ.7,257.61 கோடி மதிப்பிலான 51.67 லட்சம் மடிக்கணினிகள் மாணவ / மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக 15 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மடிக்கணினிக்காக காத்திருக்கின்றனர்.

Virat Kohli 50th Hundred: தலைவணங்கிய கோலி, உணர்ச்சிப் பெருக்கில் சச்சின்; ரசிகர்களின் முழக்கத்தால் அதிர்ந்த வான்கடே மைதானம்!

சர்வதேச கிரிக்கெட்டில் வரலாற்றுச் சாதனை படைத்து ஒட்டுமொத்த தேசத்தின் நம்பிக்கையையும் காப்பாற்றியிருக்கிறார் விராட் கோலி. மிக முக்கியமான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் சதமடித்ததோடு, ஒருநாள் போட்டிகளில் அதிக சதமடித்த வீரர் எனும் சச்சினின் சாதனையையும் கோலி முறியடித்திருக்கிறார்.

மின் கட்டண உயர்வால் கடும் நெருக்கடி! தொழிலாளர்களுடன் பீகாருக்கு இடம்பெயரும் திருப்பூர் பின்னலாடைத் தொழில்?

பின்னலாடைத் தொழிலுக்கு பிஹார் மாநில அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளதால் திருப்பூரில் பின்னலாடைத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும், தொழிலாளர்களும் பிஹார் மாநிலத்துக்கு படையெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வி.சி.க., எம்.எல்.ஏ.வை அவமதித்தாரா அமைச்சர்? மீண்டும் சர்ச்சையில் சிக்கிய எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!

வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தன்னைச் சந்திக்க வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளையும், காட்டுமன்னார்கோயில் விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. சிந்தனைச் செல்வனையும் நிற்க வைத்துப் பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மருத்துவக் கல்வி இயக்குநர் பணியிடத்தை நிரப்பாதது ஏன் என EPS கேள்வி? GHகளுக்கு மருந்து விநியோகிப்பதில் குளறுபடி எனவும் விமர்சனம்!

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் மூலம் மருந்துகள் மொத்தமாக வாங்குவது குறைக்கப்பட்டு, அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவ அதிகாரிகளுக்கு உள்ளூர் கொள்முதல் மூலம் பாதியளவு மருந்துகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாகத் தகவல்கள் தெரிய வருகிறது.

Tamil Nadu Rains: 13 மாவட்டங்களில் கன மற்றும் மிகக் கனமழைக்கு வாய்ப்பு! தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி! 

வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “செவ்வாய்க் கிழமை காலை 8.30 மணிக்குத் தொடங்கி அடுத்த 24 மணி நேரத்துக்கு, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்யும்.

வினாத்தாள்களை காப்பியடித்துப் பிடிபட்ட திருவள்ளுவர் பல்கலைக்கழகம்..! என்ன செய்யப்போகிறது உயர் கல்வித்துறை?

தேர்வுகளின் போது மாணவர்கள் காப்பியடிப்பது முறைகேடு. அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும். ஆனால் பல்கலைக்கழகமே தேர்வுக்காக வினாத்தாளை காப்பியடித்தால்…? இப்படியொரு சர்ச்சையில்தான் வேலூரில் இயங்கும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சிக்கியுள்ளது.

antalya bayan escort