கேரள மாநிலம், கொச்சி களமச்சேரி மருத்துவக் கல்லூரி அருகே சாம்ரா இன்டர்நேஷனல் கிறிஸ்தவ கன்வென்சன் சென்டரில், யாக்கோபா சாட்சி சபைகளின் மண்டல மாநாடு கடந்த 27-ம் தேதி தொடங்கியது. அந்த மாநாட்டின் நிறைவுவிழாவான இன்று சுமார் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் கூடியிருந்தனர்.
பென்னி குயிக், முல்லைப் பெரியாறு அணையின் உண்மையான வரலாற்றுப் பின்னணி! விவசாயிகளின் மனச்சான்றை எடுத்துரைக்கும் புதிய தொடர்!
ஐம்பதினாயிரம் ஆண்டு நெடிய பாரம்பரியம் கொண்ட தமிழக கலாச்சாரத்தினூடே நகரும் ஒரு பண்பாட்டு அசைவு எங்கள் பென்னிகுயிக். பென்னி குயிக் என்ற இந்த பெயரை உச்சரித்தாலே முல்லைப் பெரியாறு பாயும் ஐந்து மாவட்டத்திலும் அன்பு இழையோடுகிறது.
சத்துணவு அமைப்பாளர்களின் ஓய்வூதியத்தை ரூ.10,000 ஆக உயர்த்த வேண்டும்! தமிழக அரசுக்கு பாமக வலியுறுத்தல்!
பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ரூ.2000 மட்டுமே ஓய்வு ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. முதியோர் உதவித் தொகையாக மாதம் ரூ.1,200, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகையாக மாதம் ரூ.1,500 வீதம் வழங்கப்பட்டு வரும் நிலையில், 40 ஆண்டுகள் வரை பணி செய்த அமைப்பாளர்களுக்கு ரூ.2000 ஓய்வூதியம் வழங்குவது அவர்களின் சேவையை கொச்சைப்படுத்துவதாகும்.
கைப்பிடித்து செய்த சத்தியத்தையே நிறைவேற்றாத முதல்வர்! அவமானப்படுத்தும் துறை அமைச்சர்! அரசு மருத்துவர்கள் குமுறல்!
அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் டாக்டர் எஸ். பெருமாள் பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்லும் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் TOWER BLOCK 1 வாசலில், கடந்த 2019 ம் ஆண்டு அக்டோபர் 25 ம் தேதி முதல் ‘சாகும் வரை உண்ணாவிரதம்’ மேற்கொண்டோம். அப்போது தமிழகம் முழுவதும் 7 நாட்கள் அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்தனர்.
ஐபோன்களை தயாரிக்க ஆப்பிளுடன் கைகோர்த்த டாடா நிறுவனம்! மேக் இன் இந்தியா’ திட்டத்தில் இணையும் டாடாவின் ஐபோன் தயாரிப்புகள்!
ஐபோன் உற்பத்தியாளர்களின் பிரத்யேக குழுவில் டாடா குழுமம் இணைந்துள்ளது. இரண்டரை ஆண்டுகளில் இந்தியாவில் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஐபோன்களை உருவாக்கத் தொடங்கும்.
