Wednesday, February 18, 2026
Home Blog Page 278

பூஜை அறையில் வெற்றிலை, பாக்கை எப்படி வைக்க வேண்டும்? காம்பை கிள்ளி வைப்பதுதான் சரியா?

பூஜையையும், வெற்றிலை பாக்கையும் பிரிக்கவே முடியாது; பிரிக்கவும் கூடாது. வீடுகளில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வெற்றிலை பாக்கு வைத்துதான் பூஜை செய்வது வழக்கம். தட்டு நிறைய பழங்களையும் பூக்களையும் வைத்து பூஜை செய்தாலும் வெற்றிலை பாக்கு வைக்காவிட்டால்  பூஜை நிறைவு பெறாது. நம்முடைய நைவேத்தியமும் சுவாமியால் ஏற்கப்படாது.

காலியாகும் பன்னீர் முகாம்! எடப்பாடியிடம் ஐக்கியமான மைத்ரேயன்! புலம்பல் மோடில் ஓபிஎஸ்!

அதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெறவிருக்கும் நிலையில், ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்றும் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

“மெட்ரோவை அரசியல் ஆக்காதீர்கள்!” – முதல்வர் ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் பதிலடி!

மதுரை மற்றும் கோவை மாநகரங்களுக்கு முன்மொழியப்பட்ட மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. இரண்டு நகரங்களிலும் மக்கள்தொகை 20 லட்சத்துக்கும் குறைவாக இருப்பதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “’கோயில் நகர்’ மதுரைக்கும், ‘தென்னிந்திய மான்செஸ்டர்’ கோவைக்கும் “NO METRO” என நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு! பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக் கூட மெட்ரோ ரயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அழகல்ல.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் எக்ஸ் பதிவுக்கு பதிலளிக்கும் விதமாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் மனோகர் லால் கட்டார் தனது எக்ஸ் பக்கத்தில், “மெட்ரோ ரயில் அமைப்பு போன்ற விலையுயர்ந்த உள்கட்டமைப்புத் திட்டங்கள், பொதுமக்களுக்கு அதிகபட்ச நன்மையை கொடுக்க வேண்டும் என்ற மெட்ரோ கொள்கை 2017-ஐ பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டவை.

Madurai Coimbatore Metro Rejection: Stalin Politics vs. Central Minister Manohar Lal Khattar Response.
அமைச்சர் மனோகர் லால் கட்டார்

மெட்ரோ அமைப்பு அந்தக் கொள்கையை பயன்படுத்துவதை தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் அரசியல் செய்து, சர்ச்சையை உருவாக்குவது துரதிர்ஷ்டவசமானது. 2024 அக்டோபர் 3 அன்று மத்திய அரசால் சென்னை மெட்ரோ 2-ம் கட்டத் திட்டமாக 119 கி.மீ. நீளத்திற்கு ரூ. 63,246 கோடி வழங்கியது. மத்திய அரசின் இந்தப் பெருந்தன்மையான ஒப்புதலை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் அரசியல் செய்கிறார்.

Also Read : சென்னை மாநகராட்சிக்கு ஆணையரா.. திமுக மாவட்ட செயலாளரா? அதிமுக ஆர்ப்பாட்டத்தில் நேரடி எச்சரிக்கை!

கோயம்புத்தூர் மற்றும் மதுரை திட்டங்களில் பின்வரும் முரண்பாடுகள் உள்ளன:

  • கோயம்புத்தூரில் உள்ள பாதையின் நீளம், சென்னை மெட்ரோ அமைப்பின் பாதையின் நீளத்தை விடக் குறைவாக இருந்தும், சென்னையை விட அதிகமான போக்குவரத்துத் திட்ட மதிப்பீடுகள் (traffic projections) வழங்கப்பட்டுள்ளன. இது முதல் பார்வையிலேயே தவறாகத் தெரிகிறது.
  • திட்டமிடப்பட்ட சராசரி பயண தூரங்கள் மற்றும் சாலைப் போக்குவரத்துக்கும் மெட்ரோவுக்கும் இடையேயான வேக வேறுபாடுகள் (speed differentials) ஆகியவை, போக்குவரத்து முறை மெட்ரோவுக்கு மாறுவதைத் தாங்குவதாக இல்லை.
  • கோயம்புத்தூர் விரிவான திட்ட அறிக்கையின்படி (DPR), 7 மெட்ரோ ரயில் நிலைய இடங்களில் போதுமான நிலவசதி (right of way) இல்லை.
  • மதுரைக்கான விரிவான போக்குவரத்துத் திட்ட ஆவணம் (Comprehensive Mobility Plan) தற்போதைய பயணிகள் எண்ணிக்கையின்படி பேருந்து விரைவுப் போக்குவரத்து அமைப்பு (BRTS) மட்டுமே பொருத்தமானது என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது.
  • கோயம்புத்தூர் மாநகராட்சியின் மக்கள் தொகை 2011-ல் 15.85 லட்சம். அதே சமயம் 2011 கணக்கெடுப்பின்படி உள்ளூர் திட்டமிடல் பகுதி மக்கள் தொகை 7.7 லட்சம். போக்குவரத்து மாற்றத்திற்கான பயணிகள் எண்ணிக்கை மட்டுமே திட்டமிடப்பட்டுள்ளது. மெட்ரோ அமைப்புக்கு எவ்வளவு பெரிய போக்குவரத்து மாற்றம் இருக்கும் என்பதற்கான நியாயமான விளக்கம் தேவை.

மேலும், பல்வேறு நகரங்களுக்கு 10,000 குளிர்சாதன வசதி கொண்ட இ-பேருந்துகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட மத்திய அரசின் PM e-bus Sewa திட்டத்தின் பலனைத் தமிழ்நாடு அரசு பயன்படுத்த மறுத்துவிட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், பேருந்துகளுக்கு மத்திய நிதி உதவி, டிப்போ உள்கட்டமைப்பு மற்றும் ‘பிஹைண்ட் தி மீட்டர்’ வசதிகளுக்கான நிதியுதவி வழங்கப்படுகிறது. மத்திய அரசு மீண்டும் மீண்டும் வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசு இதுவரை இந்தத் திட்டத்தில் பங்கேற்கவில்லை.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

இட்லியில் இவ்வளவு சத்துக்களா உள்ளன? தவிர்க்கவே முடியாத இட்லியின் பூர்வீகம் தெரியுமா..?

ஆவியில் வேக வைத்து தயாரிக்கப்படும் இட்லி, இடியாப்பம், புட்டு போன்ற ஆரோக்கியமான உணவு வகைகளில், பெரும்பாலானவர்களின் முதல் சாய்ஸ் இட்லி தான். தென்னிந்தியாவில் “இட்லி” இல்லாத ஹோட்டல்களே இல்லை. சுமார் 30 – 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை தீபாவளி போன்ற சிறப்பு தினங்களில் மட்டுமே வீடுகளில் அத்திப் பூத்தது போல் சமைக்கப்பட்ட இட்லியை, தமிழகத்தில் இன்று இட்லி வேகாத வீடுகளும், ஹோட்டல்களும் இல்லை என்ற அளவுக்கு வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்துவிட்டது.

அரசு பொறியியல் கல்லூரிகளில் ஜெர்மன், பிரெஞ்சு, ஜப்பானிய மொழி வகுப்பு! 10 கல்லூரிகளை தேர்வு செய்தது DOTE!

அரசு பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு ஜெர்மன், பிரெஞ்சு மற்றும் ஜப்பானிய மொழிகளை வரும் கல்வி ஆண்டிலிருந்து கற்பிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

திமுக-வில் ஓங்கும் கனிமொழியின் செல்வாக்கு! ஸ்டாலினுக்கு அடுத்த தலைவலி ஆரம்பம்! கலக்கத்தில் மூவர் அணி!

திமுகவில், மகளிரணி செயலாளர் கனிமொழியின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மூத்த நிர்வாகிகள் ஆதரவு தர, மகளிரணியைத் தாண்டி தமக்கான ஆதரவு வட்டம் உருவாவதால் அவர் உற்சாகமாக இருப்பதாக தெரிகிறது.

மாடல் பள்ளிகளில் சேர நுழைவுத் தேர்வு நடத்துவது தவறான முன்னுதாரணம்! கருணாநிதி கொள்கைகளுக்கு முரணானது என கல்வியாளர்கள் கொந்தளிப்பு!

தமிழகத்தில் மாதிரி பள்ளிகள் தொடங்கப்பட உள்ளன. அந்த பள்ளிகளில் நவீன வகுப்பறைகள், ஆய்வகங்கள், உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன், உண்டு உறைவிட வசதிகள் அமைக்கப்பட உள்ளன.

antalya bayan escort