Wednesday, February 18, 2026
Home Blog Page 289

4 முறை வெளிநாடு சென்று ஈர்த்த முதலீடு வெறும் ரூ.18,000 கோடி! முதலமைச்சரின் செயல்பாடு பூஜ்ஜியம் என ஈபிஎஸ் விமர்சனம்!

அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கிறேன் என்று, பதவியேற்ற 40 மாதங்களில் 4 முறை வெளிநாடுகளுக்கு குடும்பத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஸ்டாலின், இந்தியாவில் மற்ற மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் ஈர்த்த முதலீட்டைவிட மிக, மிகக் குறைவான முதலீட்டைக் கொண்டு வந்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒருதலைப்பட்சமாக எல்லையை அளக்கும் கேரளா! சலனமின்றி வேடிக்கைப்பார்க்கும் தமிழக அரசு! உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ள விவசாயிகள்!

தமிழக கேரள எல்லையை முறைப்படி மத்திய சர்வே துறை மேற்பார்வையில் அளவீடு செய்ய வேண்டும் என்று நாங்கள் சொன்னால், இங்கே நிறைய பேர் அதை பிரிவினை வாதம் என்கிறார்கள்.

போர் யானைகளுடன் வாகை மலர்! கட்சியின் கொடியை அறிமுகம் செய்தார் விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி சென்னை ஈசிஆர் சாலையில் பனையூரில் உள்ள அக்கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கட்சியின் தலைவர் விஜய் கொடியை அறிமுகம் செய்தார். மேலும், கீழும் சிவப்பு, நடுவில் மஞ்சள் ஆகிய நிறங்களுடன், இரண்டு போர் யானைகள், நடுவில் வாகை மலருடன் இருக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறுவை சிகிச்சை வசதி கொண்ட மருத்துவமனை! சோழர்களின் அசத்தலான ஆட்சி முறையை பகிரும் கல்வெட்டு!

ஆயிரம் ஆண்டுகளுக்கு தற்போது இருப்பது போன்ற வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகள் இருந்தனவா? மக்கள் நோய்வாய்ப்பட்ட போது என்ன செய்தார்கள்? என்பன போன்ற கேள்விகள் நமக்குள் அவ்வப்போது எழுவதுண்டு. அதற்கு விடையாகவே, காஞ்சிபுரம் அருகே திருமுக்கூடல் பகுதியில் உள்ள ஆதுலர் சாலை இருக்கிறது.

ஜாக்டோ ஜியோ நான்கு கட்ட போராட்ட அறிவிப்பு! டிசம்பரில் கோட்டை முற்றுகை! நெருக்கடியில் தமிழக அரசு!

2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பழைய ஓய்வூதியத் திட்டம், இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை, பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை திமுக தேர்தல் வாக்குறுதிகளாக வெளியிட்டிருந்தது. அவை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

மழலையர் வகுப்புகளை சிறப்பாக நடத்துவது எப்படி? ஆசிரியர் கூட்டணியின் அடுக்கடுக்கான யோசனைகள்!

மழலையர் வகுப்புகளை சிறப்பாக நடத்துவது எவ்வாறு?, தொடக்கக் கல்வித்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப என்ன செய்யலாம்? அரசுப் பள்ளிகளின் தரத்தை எப்படி உயர்த்தலாம்? போன்றவற்றுக்கு சிறப்பான யோசனையை தமிழக ஆசிரியர் கூட்டணி, அரசுக்கு முன்வைத்துள்ளது.

50 வகை புற்றுநோயை கண்டறிய ஒரே ரத்தப்பரிசோதனை! அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பே கண்டுபிடிக்கலாம்!

ஒரே ஒரு ரத்தப் பரிசோதனை மூலம், அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பாகவே 50 வகையான புற்றுநோயைக் கண்டறிய முடியும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்தப் பரிசோதனைக்குகேலரி‘ (Galleri) என்று பெயர். (https://www.galleri.com/)

antalya bayan escort