புதுச்சேரியில் தலைவர்கள் மட்டத்தில் மட்டுமே இருந்த பாஜக, தற்போது, தொண்டர்கள் மட்டத்திலும் செல்ல ஆரம்பித்துள்ளது. மாற்றுக்கட்சியினர் பலரும் பாஜக–வில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
“தொழில் முதலீடு குறித்து திமுக அரசு கூறும் தகவல்கள் அனைத்தும் அப்பட்டமான பொய்” – பா.ம.க. ஆவணம் வெளியீடு!
பா.ம.க. தலைவர் டாக்டர். அன்புமணி ராமதாஸ், தி.மு.க. அரசின் தொழில் முதலீடுகள் பொய்யானவை என்பதைக் குறிக்கும் ஆவணப் புத்தகம் ஒன்றை இன்று சென்னையில் வெளியிட்டார். தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்காக பா.ம.க. இதுவரை வெளியிட்ட 57 ஆவணங்களின் தொடர்ச்சியாக இந்த அறிக்கை அமைந்துள்ளது.
இனியாவின் புது கெட் அப்! ‘தீரன்’ கார்த்தியை மிஞ்ச தீவிரப் பயிற்சி! திடீர் ‘ERROR’ஆல் திருப்பம்!
பிரபல நடிகை இனியா போடப்போகும் புது கெட் அப் தமிழ்த் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ‘தீரன் அதிகாரம் ஒன்று’ கார்த்தியை மிஞ்சும் வகையில் அவர் எடுக்கும் பயிற்சி, அடடா ரகமாக இருக்கிறது.
மோசமான நிலையில் தமிழக சுகாதாரத்துறை! அமைச்சரின் நிர்வாகக் குளறுபடிகள், உளறல்கள், அந்தர்பல்டிகள் அதிகரிப்பு!
(20.11.24 தேதியிட்ட ஜுனியர் விகடன் இதழில் வெளியான சிறப்புச் செய்தி, சுருக்கமாக வேல்ஸ் மீடியா வாசகர்களுக்காக!)
4 Mins Read : இந்தியாவின் மருத்துவத் தலைநகரம் என்றழைக்கப்படும் பெருமை, தமிழ்நாட்டுக்கு எப்போதுமே உண்டு. 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அவற்றுடன் இணைந்த 62 மருத்துவமனைகள், 37 மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைகள், 1,832 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 8713 துணை சுகாதார நிலையங்கள், 487 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட தமிழ்நாட்டில் மொத்தம் 13,214 அரசு மருத்துவக் கட்டமைப்புகள் இருக்கின்றன.
தமிழகத்தில் சாராய ஆறு ஓடுகிறது! திமுகவின் கைக்கூலிகளாக மாறிய சமூகப் போராளிகள், நடிகர்கள்! ஈபிஎஸ் கடும் விமர்சனம்!
கள்ளச் சாராயம் அருந்தி, விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
பரந்தூர் விமான நிலையம் அமைக்க வலுக்கும் எதிர்ப்பு! பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டம்!
சென்னையின் இரண்டாவது புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கப்படவுள்ளது. பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 13 கிராமப்பகுதியில் இந்த புதிய விமான நிலையம் அமைக்கப்படவுள்ளதற்கு, கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
