ஒரு காலத்தில், இதய நோய் வயதானவர்களை மட்டுமே பாதித்தது. ஆனால் தற்போது அனைத்து வயதினரையும் பாதிக்கிறது. இன்றைய இளைஞர்கள் தொழில்நுட்பத்துடன் ஓடிக்கொண்டிருப்பதால், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த அவர்களுக்கு போதிய நேரம் கிடைப்பதில்லை. இதனால் இளம் வயதிலேயே அவர்களுக்கு பல உடல் நலப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக இளம் வயதினரிடையே மாரடைப்பு அதிகமாகி வருகிறது.
கோபக்காரன் என பெருமைப்படுபவரா நீங்கள்..? உடல் ஆரோக்கியத்தையே புரட்டிப்போடும் கோபம் பற்றி தெரியுமா?
சாது என அழைக்கப்படுவர்களுக்கே ஏதாவது ஒரு சூழ்நிலையில் கோபம் வரும் போது, சாதாரண மனிதர் கோபப்படாமல் இருப்பது கடினம்தான். சுயமரியாதை, சுய கொள்கைகளே கோபம் வர முக்கிய காரணமாகிறது. சிலருக்கு இருக்கின்ற பொறுமையில்லாத சுபாவமும், சூழ்நிலைகளும், அறச் சீற்றமும் கோபத்தை வரவழைக்கும் காரணிகளாக இருக்கலாம்.
பொட்டுக்கடலையை சாதாரணமா நினைச்சுட்டீங்களா..? ஒரே கைப்பிடி..! கொட்டிக்கிடக்கும் நன்மைகள்!
கடலை, பொட்டுக்கடலை, பொரிகடலை, வறுகடலை என்று பல பெயர்களில் அழைக்கப்படும் பொட்டுக்கடலையில் வைட்டமின் A, B1, B2, B3, கால்சியம், பொட்டாசியம் நிறைந்துள்ளன. பெண்கள், குழந்தைகள், நீரிழிவு நோயாளிகள், உடல் எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள், கர்ப்பிணிகள் என அனைத்து தரப்பினருக்குமே பொட்டுக்கடலை ஏராளமான நன்மைகளைத் தருகிறது.
அதிக விலைக்கு தனியாரிடம் இருந்து மின்சாரம் கொள்முதல்! ஒழுங்கு முறை ஆணையத்தை உதாசீனப்படுத்தி அரசு அத்துமீறுவதாக குற்றச்சாட்டு!
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முன் அனுமதியைப் பெறாமல், மின்சாரம் கொள்முதல் செய்வதற்காக கோரப்பட்டுள்ள ஒப்பந்தப்புள்ளிகளை மின்சார வாரியம் ரத்து செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
