இந்தியாவை பலவீனப்படுத்த இலங்கையின் பலே திட்டம்! காரைக்கால் துறைமுகத்தை ஆய்வு செய்த ராஜபக்ச கைக்கூலி!

0
11

சீனாவின் பின்னணியில் இந்தியாவை பலவீனப்படுத்துவதற்கான முயற்சிகளை இலங்கை முன்னெடுத்துள்ளது. இந்தியாவுக்கான இலங்கை துணை உயர் ஆணையரின் காரைக்கால் பயணம் இதன் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது

இலங்கை தூதரக துணை உயர் ஆணையரான வெங்கடேஷ்வரன், பல்வேறு நாடுகளுக்கு சென்று வளர்ச்சிப் பணிகளை நேரில் பார்வையிட்டு வருகிறார். அதன்படி, இந்தியாவிற்கு வந்த வெங்கடேஷ்வரன், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்தார். இதனைத் தொடர்ந்து, காரைக்கால் துறைமுகத்திற்கு சென்று அவர் பார்வையிட்டுள்ளார்.

இலங்கையில் துறைமுகத்தை கட்டமைத்து வரும் சீனா, இலங்கையை இந்தியாவிற்கு எதிராக செயல்படவைக்க திட்டமிட்டு வருகிறது. அவர் மூலம், தமிழகத்தை உளவு பார்ப்பதற்கான திட்டங்களை இலங்கை அதிபர் வகுத்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

2009-ல் அப்பாவி தமிழர்களையும், விடுதலைப் புலிகளையும் கொன்று குவித்த இலங்கை ராணுவ வீரர்கள் சவேந்திர சில்வா, கமல் குணரனுடன், துணை தூதராக நியமிக்கப்பட்டுள்ள வெங்கடேஷ்வரன்.

தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி துறைமுகமும், புதுச்சேரியின் காரைக்கால் துறைமுகமும் சீனாவிற்கு பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. இதனால் இந்த இரண்டு துறைமுகங்களின் கட்டமைப்புகளை பலவீனப்படுத்தும் முயற்சிகளில் சீன அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. அப்படி இருக்கும்போது, சீனாவின் கைப்பாவையாக இருக்கும் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் காரைக்கால் துறைமுகத்தில் ஆய்வு நடத்துவது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

காரைக்கால் துறைமுகத்தின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளை முழுமையாக இலங்கைக்கு உளவு சொல்வதற்காகவே, வெங்கடேஷ்வரன் அங்கு சென்றார் என உறுதியாக நம்பப்படுகிறது. 2009ஆம் ஆண்டு இலங்கை ராணுவம், அப்பாவி தமிழர்களையும் விடுதலை புலிகளையும் கொன்று குவித்த பிறகு, சவேந்திர சில்வா மற்றும் கமல் குணரன் ஆகியோரின் வெற்றிக் கொண்டாட்டத்திற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்தவர் வெங்கடேஷ்வரன் என்றே கூறப்படுகிறது.

அதேபோல 2009ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, விடுதலைப் புலிகளுக்கு எங்கிருந்து உணவுகள், உணவு பொருட்கள் வருகின்றன? அவர்களுடைய போக்குவரத்திற்கான பெட்ரோல், டீசல் எங்கிருந்து வருகிறது என்பது தொடர்பான ரகசியங்களை இலங்கை ராணுவத்திற்கு தந்து, தனக்கு தேவையான சன்மானங்களை வெங்கடேஷ்வரன் பெற்றதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

இப்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருப்பதால், இங்கு நடக்கும் பல விஷயங்களை அலுவல் ரீதியாகவும், ரகசியமாகவும் இலங்கை அரசுக்கு தெரிவிக்கவே வெங்கடேஷ்வரனை ராஜபக்ச தமிழகத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நியமனம் தொடர்பான பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்ட, அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத, சென்னையில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள், “இதுவரை இந்த பதவிக்கு நியமனம் செய்யப்பட்ட அதிகாரிகள் Srilanka Foreign Service நியமனம் மூலமே தேர்வு செய்யப்பட்டார்கள். கடந்த காலங்களில் தேர்வு செய்யப்பட்ட அதிகாரிகள் தமிழர்களாக இருந்த போதிலும், ராஜபக்ச அரசுக்கு அரசியலமைப்பு சட்டத்தை மீறி ஒத்துழைப்பு வழங்கவில்லை.

தகுதியான தமிழர்கள் பலர் இருக்கும் நிலையில், Srilanka Foreign Service தகுதி இல்லாத வெங்கடேஷ்வரனை, இலங்கை அரசியலமைப்பு சட்டத்தை மீறி, இந்தியாவிற்கான இலங்கை தூதராக நியமித்திருப்பதற்குப் பின்னால் பல ரகசியங்கள் உள்ளன. இந்த நியமனம் மூலம் இந்திய அரசின் ரகசியங்களை வெங்கடேஷ்வரன் மூலம் தெரிந்து கொள்ள இலங்கை அரசு விரும்புகிறதுஎன்று கூறினார்கள்.

சமீபத்தில் திருச்சியில் உள்ள Kothagiri sugars and Chemicals Ltd நிறுவனத்திற்கு வெங்கடேஷ்வரன் நேரடியாக சென்று பார்வையிட்டு உள்ளார். திருச்சியில் உள்ள நிறுவனத்திற்கும், இந்தியாவிற்கான இலங்கை தூதருக்கும் என்ன சம்பந்தம்? என்ற கேள்வி சிலரால் முன்வைக்கப்பட்டது. திருச்சியில் உள்ள இந்த நிறுவனத்திற்கு சென்று பார்வையிட்டது தொடர்பாக வெங்கடேஷ்வரன் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இலங்கை ஜனாதிபதி வழிகாட்டுதலின் பேரிலேயே இந்த நிறுவனத்தை பார்வையிட வந்ததாக குறிப்பிடுகிறார்.

அதேபோல தூத்துக்குடி அனல்மின் நிலையத்திலும் வெங்கடேஷ்வரன் ஆய்வை நடத்தி முடித்திருக்கிறார். முட்டியாரா அனல் மின் நிலையத்திற்கு நேரில் சென்ற அவர், அங்கு நடைபெற்று வரும்  பணிகளை பார்வையிட்டு அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி உள்ளார். ஏற்கனவே தூத்துக்குடி துறைமுகத்திற்கு சீனாவின் அச்சுறுத்தல் உள்ள நிலையில், சீனாவின் நட்பு நாடான இலங்கையின் துணை உயர் ஆணையர் ஏன் நேரில் சென்று ஆய்வு நடத்துகிறார் என்பதே அனைவரின் கேள்வி. இப்படி தமிழகத்தில் பல இடங்களுக்கு செல்லும் வெங்கடேஷ்வரன், அங்கு கிடைக்கும் தகவல்களை இலங்கைக்கு தெரிவிக்கிறார். தமிழக அரசின் நகர்வுகளை தெரிந்துகொள்ள இலங்கை அரசு விரும்புவதால், தூதர் என்ற முறையில், தமிழகத்தில் உள்ள  அதிகாரிகளை சந்தித்துப் பேசி, முக்கிய தகவல்களை பெற்று, அதனை வெங்கடேஷ்வரன் இலங்கைக்கு அனுப்புகிறார் என்ற அதிர்ச்சித் தகவலும் கிடைக்கிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry