சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாரின் அடிப்படையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை(Enforcement Directorate – ED) சோதனை நடைபெற்றது. இதில் ஆட்சியாளர்களுக்கு மிகவும் நெருங்கிய நபர்களிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
விமரிசையாக நடைபெற்ற திருச்செந்தூர் சூரசம்ஹாரம்! ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என முழக்கமிட்டு பக்தர்கள் பரவசம்!
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், அலைவீசும் கடலருகே அமைந்துள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடக்கும் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி விழா கடந்த 13-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. சஷ்டித் திருவிழாவின் உச்ச நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடந்தது.
ஒரு கம்பெனிக்காக கல்வியைப் பாழ்படுத்துவதா? இனி, எமிஸ் பதிவு செய்யமாட்டோம்! அச்சுறுத்தலை எதிர்கொள்ளத்தயார் என ஐபெட்டோ ஆவேசம்!
அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (ஐபெட்டோ) தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “டிட்டோஜாக் மற்றும் தமிழக ஆசிரியர் கூட்டணி அறைகூவலினை ஏற்று எமிஸ் இணையதளத்தில், மாணவர்கள், ஆசிரியர்கள் வருகைப் பதிவினை தவிர்த்து மற்ற அனைத்து பதிவுகளிலிருந்தும் தங்களை விடுவித்துக் கொண்டு அதில் உறுதியாக இருக்கும் மாவட்ட, வட்டார அமைப்புகளை பெருமையுடன் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை உனடியாக திருப்பெறாவிட்டால் மிகப்பெரும் போராட்டம்! தமிழக அரசுக்கு ஈபிஎஸ் எச்சரிக்கை!
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சட்டமன்றத் தொகுதி, அனக்காவூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல்மா, தேத்துறை, குறும்பூர், நர்மா பள்ளம், நெடுங்கல், அத்தி, வடஆளப்பிறந்தான், இளநீர்குன்றம், வீரம்பாக்கம் ஆகிய 9 ஊராட்சிகளைச் சேர்ந்த சுமார் 3,300 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய விளை நிலங்களை `சிப்காட் தொழிற்பூங்கா விரிவாக்கம்’ என்ற பெயரில் கையகப்படுத்துவதற்கான அரசாணையை இந்த திமுக அரசு பிறப்பித்துள்ளது.
விலையில்லா மடிக்கணினி திட்டத்துக்கு மூடுவிழா! கணினி ஆய்வகங்களுக்கு கூடுதலாக சில கம்ப்யூட்டர்களை வழங்க அரசு திட்டம்!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மூளையில் உதித்த விலையில்லா மடிக்கணினித் திட்டம் 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. விலையில்லா மடிக்கணினி திட்டத்தின் கீழ் 2011-2012 முதல் 2019-2020 வரை (பிப்ரவரி வரை) ரூ.7,257.61 கோடி மதிப்பிலான 51.67 லட்சம் மடிக்கணினிகள் மாணவ / மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக 15 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மடிக்கணினிக்காக காத்திருக்கின்றனர்.
