பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் 3 வகையான ஆசிரியர்களின் சில கோரிக்கைகளை அரைகுறையாக நிறைவேற்றுவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஆனால், தங்களின் கோரிக்கைகள் முழுமையாக ஏற்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்று ஆசிரியர் சங்கங்கள் அறிவித்திருந்த நிலையில், அறப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் கைது செய்து அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
போராடிய ஆசிரியர்கள் குண்டுக்கட்டாக கைது! பயத்தில் கதறிய குழந்தைகள்! தமிழக அரசுக்கு ஈபிஎஸ் கடும் கண்டனம்!
அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்ட 5 அறிவிப்புகளில் முக்கிய கோரிக்கை நிறைவேற்றப்படாததால், சென்னையில் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்த ஆசிரியர்கள் இன்று (அக்டோபர் 5) அதிகாலை கைது செய்யப்பட்டனர். ஏழு நாட்கள் மட்டுமே போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அதற்கு மேலாக அனுமதி வழங்க முடியாது என்று கூறி, காவல் துறையினர் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.
கோரிக்கைகளை முதல்வர் கண்டுகொள்ளவில்லை! அக்.16-ல் 20,000 பேர் உண்ணாவிரதம்! MSME கூட்டமைப்பு அறிவிப்பு!
மின் கட்டண உயர்வை திரும்பப்பெறக் கோரி அக்டோபர் 16-ம் தேதி சென்னையில் 20 ஆயிரம் பேர் பங்கேற்கும் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குடும்ப நிறுவனத்துக்காக ஆவினை நசுக்கும் திமுக அரசு? பகீர் பின்னணியை அம்பலப்படுத்தும் முகவர்கள்! அதிமுகவால்தான் ஆவினை காப்பாற்ற முடியும்!
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தினசரி இரவு தூங்கி, அதிகாலையில் பால் விநியோகத்திற்காக எழும் போதே, இன்று ஆவின் பால் பாக்கெட்டுகள் எவ்வளவு வருமோ..?, எவ்வளவு பற்றாக்குறையாக தருவார்களோ..?, பச்சை நிற பால் பாக்கெட் வருமா..? வராதா..? சில்லரை வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் என்ன பதில் சொல்வது..? பற்றாக்குறையான பால் பாக்கெட்டுகள் விநியோகத்தை எப்படி சமாளிப்பது..? என்கிற மன உளைச்சலுடனேயே பால் முகவர்களின் பணி தொடங்குகிறது.
நீரிழிவுநோய் – சுக்கு என்ன தொடர்பு? வெறும் வயிற்றில் சுக்குத்தண்ணீர் குடிப்பதால்..! Benefits of Dry Ginger!
தவறான மற்றும் மோசமான உணவுப் பழக்க வழக்கம், உடற்பயிற்சியின்மை மற்றும் மரபியல் போன்ற பல காரணிகளால் நீரிழிவு நோய் உருவாகிறது. இது, வளர்சிதை மாற்ற கபம் வகையைச் சார்ந்த நோயாகக் கருதப்படுகிறது. செரிமான குறைபாடு காரணமாக அஜீரன கோளாறுகளால் கணையத்தில் சர்க்கரை அதிகரித்து நோயை ஏற்படுத்துகிறது.
டிபிஐ வளாகத்தில் அடுத்தடுத்து மயக்கமடையும் ஆசிரியர்கள்! தோல்வியில் முடிந்த அமைச்சர் பேச்சுவார்த்தை! முதலமைச்சர் தலையிட வலியுறுத்தல்!
சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை(DPI) வளாகத்தில், ஒரு வாரத்திற்கும் மேலாக இடைநிலை ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்கள் என மூன்று வகையான ஆசியர்கள் சங்கத்தினர் வெவ்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தங்கள் குடும்பத்தினருடன் போராடி வருகின்றனர்.
