நம்மில் பலருக்கு வாழ்நாள் லட்சியம், ஆசை, விருப்பம் எல்லாம் சொந்த வீடு வாங்குவதுதான். கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தில் அடிப்படை தேவையான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றை நிறைவேற்றி மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்பதே அனைவரது எண்ணம். நமக்கு பின்னர் வரும் சந்ததியினர் சுகமாக வாழ கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து வைக்கவில்லை என்றாலும், பெயர் சொல்ல ஒரு வீடாவது இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் சரமாரி ராக்கெட் தாக்குதல்! போர் தொடங்கிவிட்டதாக நெதன்யாகு அறிவிப்பு! இஸ்ரேலில் பெரும் பதற்றம்!
இஸ்ரேல் நாட்டின் தென் பகுதியில், திடீர் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 20 நிமிடத்தில் 5,000 ராக்கெட்டுகளை ஏவி நடத்தப்பட்ட தாக்குதலால் இஸ்ரேலில் பதற்றம் நிலவுகிறது. நாடு முழுவதும் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கையை அறிவிக்கும் விதமாக அபாய ஒலிகள் எழுப்பப்பட்டன.
கரூரில் ஆசிரம இடத்தை மறுகிரயம் செய்ய முயற்சி? சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்!
கரூர் மாவட்டம், பவித்திரம் கிராமம் குமார கவுண்டன்புதூர் என்ற இடத்தில் அமைந்துள்ள சித்தர் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமிகள் ஜீவசமாதி 2012ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அன்று முதல் ஜீவ சமாதியில் நித்திய பூஜைகள், சிறப்பு பூஜைகள், அன்னதானம் போன்றவை நடைபெற்று வருகிறது.
ஆசிரியர்கள் போராட்டம் பற்றி விவாதம் நடத்தாதது ஏன், அரசின் மீதான அச்சமா..? ஊடகங்கள் நடுநிலையோடு செயல்பட ஈபிஎஸ் வலியுறுத்தல்!
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றுள்ளதை நிறைவேற்றித் தரும்படிதான் இடைநிலை ஆசிரியர்கள் கேட்கின்றனர். அதை நிறைவேற்றுவது இந்த அரசினுடைய கடமை. காரணம், இவர்கள் வாக்குறுதி கொடுத்துள்ளனர். எனவே, இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்” என்றார்.
