நீலகிரி மாவட்ட திமுக வாக்குச்சாவடிகள் நிலை முகவர்கள் கூட்டம், உதகையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. நூற்றுக்கணக்கான முகவர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் பேசிய நீலகிரி எம்.பியும், திமுக துணை பொதுச் செயலாளருமான ஆ.ராசா, “வரும் நாடாளுமன்ற தேர்தல் தேசத்தை காக்க வேண்டிய தேர்தலாகும். தேசத்தை பாதுகாக்கும் பொறுப்பு திமுக தலைவர் தோள் மீது உள்ளது. எனவே, அனைவரும் தேர்தல் பணியை சிறப்பாக செய்ய வேண்டும்.
நில அபகரிப்பு தற்போது பகல் கொள்ளையாக மாறிவிட்டது! அரசியல்வாதிகள், மக்களை மிரட்டுவதை நீதிமன்றம் வேடிக்கைப் பார்க்காது!
அரசியல்வாதிகள் தங்களது அதிகாரத்தின் மூலம் பொதுமக்களை மிரட்டுவதையும், அவர்களுக்கு பிரச்சினை ஏற்படுத்துவதையும் இந்த நீதிமன்றம் வேடிக்கைப் பார்க்காது” என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
பாகுபாடு இருக்கும் வரை இட ஒதுக்கீடு தொடர வேண்டும்! ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கருத்து!
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் புதன் கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மோகன் பாகவத், “நாம் நம் சக மனிதர்களை சமூக கட்டமைப்பில் பின்னுக்குத் தள்ளிவைத்திருந்தோம். அவர்கள் மீது நாம் அக்கறை காட்டவில்லை. இது 2000 ஆண்டுகள் தொடர்ந்தது.
செப்டம்பர் 12க்குப் பிறகு தண்ணீர் திறக்க முடியாது! உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகா மனு!
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்ற சிறப்பு அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் கர்நாடக அரசு நீர்வளத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ராகேஷ் சிங் உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் விளக்க மனு தாக்கல் செய்துள்ளார்.
எண்ணும் எழுத்தும் திட்ட மதிப்பீடுக்கு அனுமதிக்கவே மாட்டோம்! SCERT இயக்ககம் சுயாட்சி பெற்ற அதிகார மையமா? ஐபெட்டோ கடும் கண்டனம்!
எண்ணும் எழுத்தும் திட்டத்தினை மதிப்பீடு செய்வதற்கு, எதிர்ப்பை மீறி முதுகலை ஆசிரியர்கள் தலைமையில், பி.எட்., மாணவர்களை அதிகாரிகள் பிடிவாதமாக அனுப்ப உள்ளனர். பள்ளிகளில் அவர்களை அனுமதிக்க மாட்டோம் என்று ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
விருது பெறும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை பெருமளவு குறைத்தது ஏன்? மத்திய அரசுக்கு ஐபெட்டோ அமைப்பு கண்டனம்!
தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவரும், ஐபெட்டோ தேசியச் செயலாளருமான வா. அண்ணாமலை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், குடியரசு முன்னாள் தலைவர் சர்வபள்ளி டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த நாளினை 1962 முதல் ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறார்கள். செப்டம்பர்-05 ஆசிரியர் தினம் என்பது ஆசிரியர்களின் கல்வித் தொண்டுக்கான அங்கீகாரமாகும்.
