இந்த வார ராசிபலன் – செப்டம்பர் 4ல் இருந்து செப்டம்பர் 10 வரை – மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களை துல்லியமாகக் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிட சிரோன்மணி’ பிரசன்ன ஜோதிடர் ஆர்.கே.வெங்கடேஸ்வரர்.
ஆளும்கட்சிப் பிரமுகர்களால் சட்டம் ஒழுங்கு சீர்கேடு! பொம்மை முதல்வரின் திறமையின்மையால் தமிழகம் தலைகுனிவு!
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான புரட்சித் தமிழர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் எந்தஒரு குற்ற நிகழ்விலும், ஏதாவது ஒரு ஆளும் கட்சிப் பிரமுகர் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
+2 ஆசிரியர்கள் மூலம் எண்ணும் எழுத்தும் திட்டம் மதிப்பீடு! பிரச்சனைகளைப் பட்டியலிட்டு ஐபெட்டோ சரமாரிக் கேள்வி!
ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “எண்ணும் எழுத்தும் திட்டத்தினை மதிப்பீடு செய்வதற்கு கல்லூரியில் படிக்கும் பி.எட் மாணவர்களை தேர்வு செய்வதற்கு பதிலாக, மாவட்டத்திற்கு 22 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்து அனுப்ப, பள்ளிக்கல்வி இயக்குனருக்கு SCERT இயக்குனர் கடிதம் அனுப்பியுள்ளார்.
‘One Nation, One Election’க்குத் தயாராகும் பாஜக! சாதக, பாதகங்கள் என்னென்ன? முழுமையான அலசல்!
”ஒரே நாடு, ஒரே தேர்தல்” திட்டம் குறித்த சாத்தியக்கூறுகளை ஆராய, குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு சிறப்புக் குழு அமைத்துள்ளது. குழு உறுப்பினர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். இந்தக் குழு ”ஒரே நாடு, ஒரே தேர்தல்” திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்க உள்ளது.
வெட்கித் தலைகுனியக் கூடிய செய்தி! ஈரோடு- சேலம் பதிப்பு மீது சட்ட நடவடிக்கை! சென்னை தினமலர் அறிவிப்பு!
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் விரிவாக்க திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் தொடங்கிவைத்தார். 31 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் பயில்கின்ற சுமார் 17 லட்சம் மாணவர்கள் இந்த காலை உணவு திட்டத்தின் மூலம் பயன் பெறுகிறார்கள்.
