அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கொங்கு மண்டத்தில் சுற்றுபயணம் செய்து அதிமுக தொண்டர்களை சந்தித்து பழனிக்கு நேற்று வந்த ஈபிஎஸ் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். இதில் பெரும் திரளான தொண்டர்கள் பங்கேற்றனர்.
இடுக்கி, முல்லைப் பெரியாறு அணைகள்! கேரளாவின் பொய் பரப்புரைகள்! அம்பலப்படுத்தும் விவசாயிகள் சங்கம்!
கேரளாவின் மிகப்பெரிய அணையான இடுக்கி அணையிலுள்ள, மூன்றாவது ஷட்டரை 70 மீட்டர் உயர்த்தி, 50 கன அடி தண்ணீரை காலை 10 மணி அளவில் கேரளா அரசு திறந்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணைக்கு எதிரான ஆல்பம்! விவசாயிகள் கொந்தளிப்பு!
பெரியாறு அணை உறுதித்தன்மைக்கு எதிராக, கேரளாவைச் சேர்ந்த ஒருவர், ‘ஆல்பம்’ பாடலை தயாரித்து, பீதியைக் கிளப்பும் வகையில் ‘வீடியோ’ வெளியிட்டதற்கு, தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நெல் கொள்முதலை கார்ப்பரேட்டுகளிடம் தாரைவார்ப்பதா? கொந்தளிக்கும் விவசாய சங்கங்கள்!
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழக அரசு பொறுப்பேற்றது முதல் விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்களை கைவிட்டு வருகிறது. தற்போது திடீரென தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலமாக தமிழக அரசு நெல் கொள்முதல் செய்வதை தனியாருக்கு அனுமதி வழங்கி அறிவித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அதிமுக தலைமை அலுவலக விவகாரம்! உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனுத்தாக்கல்!
அதிமுக தலைமை அலுவலகம் விவகார வழக்கில் தனது தரப்பு வாதத்தைக் கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த மாதம் 11-ந் தேதி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையை சேதப்படுத்தினர்.
மனிதர்களை வளமாக பார்க்கக் கூடாது! சாத்தியமாகப் பார்க்க வேண்டும்! சத்குரு ஜக்கி வாசுதேவ் பேச்சு!
ஈஷா லீடர்ஷீப் அகாடமி சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ‘Human Is Not a Resource’ என்ற பெயரிலான 3 நாள் தலைமைப் பண்பு மேம்பாட்டு நிகழ்ச்சி கோவை ஈஷா யோகா மையத்தில் இன்று தொடங்கியது.
ஆகஸ்ட் – 11 முக்கியமான நாள்! அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் முதலமைச்சர் திடீர் கடிதம்!
அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், “இளைய சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு மாபெரும் அச்சுறுத்தலாக இருக்கும் போதைப் பொருட்களின் பாதிப்புகள் குறித்து உங்களின் கவனத்தை ஈர்க்கவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
