மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் செயலர் ஆர்.தர்மர் ஆகியோர் இன்று வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர்.
500 ரூபாய் கள்ள நோட்டுகள் இரு மடங்கு உயர்வு! ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!
கடந்த 2016ம் ஆண்டு உயர் மதிப்புகளை கொண்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பு இழந்ததாக பிரதமர் மோடி அறிவித்தார். உயர் மதிப்புள்ள நோட்டுகளால் தான் ஊழல், கறுப்புப் பணம், கள்ளநோட்டு புழக்கம் போன்ற மோசடிகள் நடப்பதாக கூறிய மத்திய அரசு, அதிக மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை வெளியிட்டது.
அதலபாதாளத்தில் கிரிப்டோ வர்த்தகம்! கறுப்புப் பணத்தை முதலீடு செய்தவர்கள் தவிப்பு!
கிரிப்டோ கரன்சிகள் அதல பாதாளத்துக்குச் சரிந்திருக்கிறது. பிட்காயின் மதிப்பு 6 மாதங்களுக்கு முன்னர் ரூ.50 லட்சத்தை தாண்டியிருந்தது. மே 26-ம் தேதி இதன் மதிப்பு ரூ. 23.08 லட்சங்களாக சரிந்துள்ளது. பிட்காயின் மட்டுமன்றி மேலும் பல செல்வாக்கான கிரிப்டோகரன்சிகள் அவற்றின் மதிப்பில் பாதிக்கும் மேலாக வீழ்ந்துள்ளன.
NEETஐ எதிர்த்துக்கொண்டு TET தேர்வு நடத்துவது சரியா? டெட் தேர்வில் வென்றவர்களுக்கு போட்டித் தேர்வு வைப்பதுதான் சமூக நீதியா? வேல்ஸ் பார்வை!
தமிழ்நாட்டில் கட்சி பேதமின்றி டெட் தேர்வை வரவேற்பவர்கள், நீட் தேர்வை எதிர்க்கிறார்கள். TET (Teachers Eligibility Test) தகுதித் தேர்வானது மத்திய அரசு சொல்லி மாநில அரசால் நடத்தப்படுவது. NEET (National Eligibility cum Entrance Test) தகுதித் தேர்வு மத்திய அரசால் நடத்தப்படுவது. இரண்டுமே தகுதித்தேர்வு எனும்போது, எதனால் இந்த முரண்?
தொழில் முனைவோரை உருவாக்கும் ZOHO ஸ்ரீதர் வேம்பு! பாரதத்தின் மணம் வீசும் தலையாட்டி பொம்மை!
பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும் இந்த மாதத்திற்கான மனதின் குரல் (மன் கி பாத்) வானொலி நிகழ்ச்சி இன்று காலை 11.00 மணிக்கு ஒலிபரப்பானது. இது 89-வது மனதின் குரல் நிகழ்ச்சியாகும்.
திமுக அரசின் வணிக விரோத கொள்கை! இதுதான் திராவிட மாடலா? ஓபிஎஸ் கண்டனம்!
வணிகர்களை ஒரு விழுக்காடு சந்தை வரி (Market Cess) செலுத்த ஆளாக்கியுள்ள திமுக அரசின் வணிக விரோத கொள்கைக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
பிற மொழிகளை கற்பதிலோ, பேசுவதிலோ தவறில்லை! கருணாநிதி சிலை திறப்பு விழாவில் வெங்கய்யா நாயுடு கருத்து!
சென்னை – ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில், பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் முன்புறம் அண்ணா சாலை ஓரத்தில் 12 அடி உயர பீடத்தில், 16 அடி உயரத்தில் ரூ.1.7 கோடி மதிப்பில் நிறுவப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு திறந்து வைத்தார்.
