குடிபோதையில் தாயை தாக்கிய +2 மாணவன்! தட்டிக் கேட்ட அண்ணனை குத்திக்கொன்ற கொடூரம்!

0
263

காஞ்சிபுரம் மாநகராட்சி ஓரிக்கை திருவேகம்மன் நகர் பகுதியில் வசிப்பவர்கள் பள்ளி ஆசிரியர்களான பால் பிரபுதாஸ் – செல்வராணி தம்பதியினர். இவர்களுக்கு வின்சென்ட்(21), ஷெல்லி ஜான்(17) என இரு மகன்கள் உள்ளனர்.

மூத்த மகன் வின்சென்ட் காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் பிஎஸ்சி விலங்கியல் பட்டப்படிப்பும், இளைய மகன் ஷெல்லி ஜான் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பிலும் படித்து வருகின்றனர். சில வருடங்களுக்கு முன் இவர்களது தந்தை பால் பிரபுதாஸ் இறந்துவிட்ட நிலையில், தாயார் செல்வராணி மகன்களை பராமரித்து வருகிறார்.

Also Read : சட்டவிரோதமாக இயங்கிய கல்குவாரி! புகார் அளித்தவர் லாரி ஏற்றிக் கொலை!

இந்நிலையில் பிளஸ் டூ படிக்கும் மாணவனான ஷெல்லி ஜான் போதைக்கு அடிமையாகிவிட்டதாக கூறப்படுகிறது. தாயும், அண்ணனும் பலமுறை புத்திமதி கூறியும் ஜான் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிகிறது.

Also Read : எந்த பிளாஸ்டிக் பாதுகாப்பானது தெரியுமா? பிளாஸ்டிக் பயன்பாடும், வகைகளும்!

இந்நிலையில் நேற்று நள்ளிரவு குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த ஷெல்லி ஜான், போதையில் தாய் செல்வராணியை தாக்கி உள்ளான். இதனை அண்ணன் வின்சென்ட் தட்டி கேட்டு உள்ளான். இதனால் ஆத்திரமடைந்த ஷெல்லி ஜான் வீட்டில் இருந்த காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து வின்சென்ட்டின் இடது மார்பில் பலமாக குத்தியுள்ளான்.

இதில் நிலை குலைந்து விழுந்த வின்சென்டை, தாய் செல்வராணி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி வின்சென்ட் பரிதாபமாக உயிரிழந்தார்.

Also Watch: Flu காய்ச்சலுக்கும் COVID-க்கும் என்ன வித்தியாசம்? – Dr. Subramanian Swaminathan Explains

இச்சம்பவம் குறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று வின்சென்ட் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து கொலை வழக்கு பதிவு செய்த போலீஸார், ஷெல்லி ஜானை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

குடி போதையில் வந்து தாயை தாக்கி,தட்டி கேட்ட அண்ணனை குத்திக் கொன்ற பள்ளி மாணவனின் செயல் ஓரிக்கை பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கணவன் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், மகனின் போதைப்பழக்கத்தால், தாயார் செல்வராணி தற்போது அனாதையாக்கப்பட்டுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry