Thursday, February 19, 2026
Home Blog Page 106

தமிழகத்தை அச்சுறுத்தும் நீரிழிவு நோய்! இந்தியாவில் 10 கோடி பேர்…! அதிரவைக்கும் ஆய்வு முடிவுகள்!

உலக அளவில் தொற்றா நோய்களின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. தொற்றா நோய்களில் ஒன்றான சர்க்கரை நோயால் இளம் வயதினர் முதல் முதியவர்கள் வரை பலரும் பாதிக்கப்படுகின்றனர். உலக அளவில் 1980-ம் ஆண்டு 10.8 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த எண்ணிக்கை 2014-ம் ஆண்டில் 41.4 கோடியாக அதிகரித்தது. 2000 முதல் 2019 வரையில் நீரிழிவு நோய் காரணமாக மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை 3 சதவீதம் அதிகரித்துள்ளது.

170-ஐ நெருங்குகிறது வயநாடு நிலச்சரிவு பலி! மனிதத் தவறே காரணம் என பூவுலகின் நண்பர்கள் தெளிவான விளக்கம்! வயநாடு செல்வதைத் தவிர்க்கும் ராகுல்காந்தி!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை கொட்டி வருகிறது. வயநாடு மாவட்டத்தின் வைத்திரி தாலுகாவிற்குட்பட்ட மேப்பாடி, முண்டக்கை மற்றும் சூரல்மலா ஆகிய பகுதிகளில் ஜூலை 29ஆம் தேதி நள்ளிரவு மற்றும் 30ஆம் தேதி அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இப்பகுதிகளில் மட்டும் கடந்த 4 நாட்களில் 70 சென்டி மீட்டர் வரை மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

காபி Vs டீ – எது பெஸ்ட்? ஒரு நாளைக்கு எத்தனை கப், எந்த நேரத்தில் குடிக்கலாம்?

காலையில் எழுந்ததும் டீ அல்லது காபி குடிப்போம். சிலர் எழுந்தவுடன் படுக்கையிலேயே காபி அல்லது தேநீர் அருந்துகிறார்கள். ஆனால், ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது, காபியா அல்லது தேநீரா? மருத்துவ கூற்றுப்படி, காபி அல்லது தேநீர், எது ஆரோக்கியத்திற்கு சிறந்த பானம் என்பதை பார்க்கலாம்.

சிஎஸ்கே அணி நிர்வாகத்தின் தமிழின விரோதப்போக்கு! தமிழ்நாட்டில் திறமையான இளம் வீரர்களே இல்லையா? என்ன செய்கிறது #TNCA?

தமிழர்கள் இல்லாத சிஎஸ்கே அணியைத் தடை செய்ய வேண்டும் என பேரவையில் பாமக எம்.எல்.ஏ. கோரிக்கை வைக்க, கிரிக்கெட் ஆர்வலர்களைத் தாண்டி மக்கள் மத்தியிலும் இது விவாதத்தைக் கிளப்பியுள்ளது. TNCA எனப்படும் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் என்ன செய்துகொண்டிருக்கிறது? என்ற கேள்வியும் இதனூடே எழுகிறது.

கல்வித்துறையை கலவரத் துறையாக மாற்ற வேண்டாம்! G.O. No. 243 கல்வித்துறைக்கு சம்பாத்தியம் பெற்றுத் தரும் அரசாணையா? என ஐபெட்டோ கேள்வி!

ஜூலை 3-ந் தேதி முதல் தொடக்கக் கல்வித் துறையில் நடத்துவதாக அறிவித்துள்ள ஆசிரியர்களின் மாறுதல் கலந்தாய்வினை நிறுத்திட வேண்டும் என்று தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவரும், ஐபெட்டோ தேசியச் செயலாளருமான அண்ணாமலை கூறியுள்ளார்.

தேசிய கீதம்..! திராவிட மாடல்..! சட்டம் ஒழுங்கு..! எப்படிப் பாராட்ட முடியும்? வெளிநடப்பு செய்தது ஏன்? ஆளுநர் ரவி விளக்கம்!

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, பிரபல ஆங்கில நாளிதழான டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு(04/MAY/2023) பிரத்யேகப் பேட்டி அளித்துள்ளார். அப்போது, இந்த ஆண்டு ஜனவரியில் ஆளுநர் உரைக்குப் பிறகு, தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பாக நீங்கள் வெளிநடப்பு செய்தது சரியா? முக்கிய தலைவர்களின் பெயர்களையும் விட்டுவிட்டீர்களே? என்று முதல் கேள்வியாக எழுப்பப்பட்டது.

மினிமம் பேலன்ஸ் தேவையில்லை! ஏ.டி.எம்.மில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.15+GST!

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, வங்கிப் பரிவர்த்தனைகள் தொடர்பான விதிமுறைகளை மாற்றியமைத்துள்ளது. இது வரும் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

antalya bayan escort