Thursday, February 19, 2026
Home Blog Page 110

எதிர்க்கட்சி அந்தஸ்தையாவது தக்க வைத்துக்கொள்ளுங்கள்! ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுரை!

திமுகவுக்கு இது இறுதித் தேர்தலாக அமைய வேண்டும் என்று கூறியுள்ள முதலமைச்சர் பழனிசாமி, மீண்டும் எதிர்க்கட்சி அந்தஸ்தையாவது தக்க வைத்துக்கொள்ள திமுக தலைவர் ஸ்டாலின் முயற்சிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.

அரசு ஊழியர்களை பழிவாங்கும் திமுக அரசு! வட்டார வள அலுவலர்களை மீண்டும் பணியமர்த்த சீமான் வலியுறுத்தல்!

“வள அலுவலர்கள் 10 ஆண்டுகள் தொடர்ச்சியாகப் பணிபுரிந்தால் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற நிலையில், தற்போது 9 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், அவர்கள் அனைவரையும் பணி நீக்கம் செய்துவிட்டுப் புதிதாகப் பணியாளர்களை நியமிக்கும் திமுக அரசின் முடிவு முழுக்க முழுக்க அரசு ஊழியர்களை பழிவாங்கும் நடவடிக்கையே” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

மலக்குடல் புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு! மருத்துவ உலகில் புதிய மைல் கல்!

மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தோஸ்டார்லிமாப் எனும் புதிய மருந்தை தொடர்ந்து ஆறு மாதம் எடுத்துக் கொண்ட பிறகு முற்றிலுமாக குணமடைந்த நிகழ்வு மருத்துவ உலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் லாபத்துக்காக தியாகத்தை சிறுமைப்படுத்துவதா? மோடி அரசுக்கு சோனியா கண்டனம்!

சுதந்திரப் போராட்ட வரலாறு குறித்தும், கடந்த 1947ம் ஆண்டு நடந்த தேசப்பிரிவினை குறித்தும் பாஜக சார்பில் ஒருவீடியோ வெளியிடப்பட்டிருந்தது. அந்த வீடியோவில் இந்தியப் பிரிவினை நடந்தபோது இருந்த காங்கிரஸ் தலைமை, ஜவஹர்லால் நேரு, முகமது அலி ஜின்னா ஆகியோரை குற்றம்சாட்டி இருந்தது.

தமிழகத்தில் கொரோனா பரவல் 2-வது அலை! சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை! மாஸ்க் அணிய அறிவுரை!

தமிழகத்தில் கோவிட்-19 பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் 2-வது அலை உருவாகியுள்ளது

25 மாவட்டங்களில் வரும் 27-ந் தேதி அதிமுக அமைப்பு தேர்தல்! ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவிப்பு!

அதிமுக மூன்றாம் கட்ட அமைப்பு தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெறும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் அறிவித்துள்ளனர்.

+2 ஆசிரியர்கள் மூலம் எண்ணும் எழுத்தும் திட்டம் மதிப்பீடு! பிரச்சனைகளைப் பட்டியலிட்டு ஐபெட்டோ சரமாரிக் கேள்வி!

ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “எண்ணும் எழுத்தும் திட்டத்தினை மதிப்பீடு செய்வதற்கு கல்லூரியில் படிக்கும் பி.எட் மாணவர்களை தேர்வு செய்வதற்கு பதிலாக, மாவட்டத்திற்கு 22 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்து அனுப்ப, பள்ளிக்கல்வி இயக்குனருக்கு SCERT இயக்குனர் கடிதம் அனுப்பியுள்ளார்.

antalya bayan escort