பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணாத அரசு பதவி விலகக் கோரி ஒரு மாத காலமாக முகாமிட்டு போராட்டம் நடத்துவோர் மீது அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் திடீரென தாக்குதல் நடத்தியதால் பெரும் பதற்றம் நிலவுகிறது.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு சாவுமணி அடித்த வீரன் வாஞ்சிநாதன்! போஸுக்கு முன்னோடியாய் ஆங்கிலேயர்களை அலறவிட்ட வரலாறு!
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஜூன் 17, 1911 அன்று மிக முக்கிய சம்பவம் நிகழ்ந்தது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த ஆஷ்துரையை வாஞ்சிநாதன் சுட்டுக்கொன்றுவிட்டு தனது உயிரையும் மாய்த்துக்கொண்டார். மாவீரன் வாஞ்சிநாதனின் நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
அறநிலையத்துறை கோவில்களில் தமிழிலும் குடமுழுக்கு! செயல்முறைகளை அனுப்ப ஆணையர் வேண்டுகோள்!
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிப்பேராணையின்படி, திருக்கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் “திருக்கோயில்களில் வழிபடும் பக்தர்கள் தாம் வழிபடும் கோயிலின் ஆகமத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு, திருக்கோயில் ஆகமத்தை ஆவணப்படுத்தி தமிழிலும், ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்து புத்தகங்களாக பதிப்பிக்க முடிவு செய்யப்பட்டது.
மத அடிப்படைவாதிகளின் ஆயுதங்களா மாணவர்கள்? கல்விக் கூடத்தில் கருப்பு, நீலம், காவி தேவையில்லை!
3 Minutes Read : மாணவர்களிடத்தில் பேசிப் பேசியே வளர்ந்ததுதான் திராவிட முன்னேற்ற கழகம். தற்போது திமுக ஆட்சி அதிகாரத்தில் உள்ள நிலையில், கர்நாடக ஹிஜாப் விவகாரத்தை முன்வைத்து, பாஜக எதிர்ப்பு – ஆதரவு என்ற பெயரில் தமிழ்நாட்டில் மத துவேஷங்கள் விதைக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
ஆரோக்கியத்தில் அற்புதம் செய்யும் வாழைத்தண்டு! அல்சர், தொப்பை, ரத்த விருத்தி, எடை குறைப்பு, சிறுநீரக பிரச்னைகளுக்கு தீர்வு!
அதிகப்படியான சதையைக் குறைத்து, உடலை ‘சிக்’கென மாற்றும் வாழைத்தண்டில் நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் அதிகம். வாழைத்தண்டில் கால்சியம், வைட்டமின் பி6, பொட்டாசியம், இரும்புச்சத்து, மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
தமிழகத்தில் வேகமாகப் பரவும் காய்ச்சல்! எழும்பூர் மருத்துவமனையில் நிரம்பி வழியும் படுக்கைகள்!
தமிழகம் முழுவதும் குழந்தைகளுக்கு ஃப்ளூ(FLU) காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. எழும்பூர் மருத்துவமனையில் ஒரே நாளில் 100 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெட்ரோல், டீசல் மூலம் கிடைத்த 21 லட்சம் கோடி ரூபாய் எங்கே? மத்திய அரசை உலுக்கும் காங்கிரஸ்!
கடந்த 6 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் மூலம் பெற்ற ரூ.21 லட்சம் கோடி எங்கே சென்றது? என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி இருக்கிறது.
