தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் விரிவாக்க திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் தொடங்கிவைத்தார். 31 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் பயில்கின்ற சுமார் 17 லட்சம் மாணவர்கள் இந்த காலை உணவு திட்டத்தின் மூலம் பயன் பெறுகிறார்கள்.
லஞ்ச ஒழிப்புத்துறை பச்சோந்தி போன்று நிறம் மாறுகிறது! ஓபிஎஸ் வழக்கில் ஐகோர்ட் கடும் கண்டனம்!
2001முதல் 2006 வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் முதலமைச்சராகவும், அமைச்சராகவும் இருந்த ஒ.பன்னீர்செல்வம் தனது மனைவி விஜயலட்சுமி, மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப், மகள் கவிதா பானு மற்றும் சகோதரர் உள்ளிட்ட 7 பேர் பெயரில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை வாங்கியாக தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு பதிவு செய்தது.
சூப்பரான ஸ்பெசிஃபிகேஷனுடன் ஐபோன் 15 சீரிஸ் மாடல்! அறிமுகத் தேதியை அறிவித்தது ஆப்பிள்!
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 15 சீரிஸ் மாடல்களின் வெளியீட்டு தேதியை உறுதிப்படுத்தி இருக்கிறது. அதன்படி செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்ய முடிவெடுத்துள்ளது. இந்த நிகழ்வு ஆப்பிள் அதிகாரப்பூர்வ சேனல்களில் நேரலை செய்யப்படுகிறது.
கோடநாடு குற்றவாளிகளுக்கு திமுக ஏன் ஜாமின் கொடுத்தது? வழக்கை சிபிஐ விசாரிக்க ஈபிஎஸ் வலியுறுத்தல்!
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமிதரிசனம் செய்த பிறகு, சென்னை திரும்பும் வழியில் மதுரையில் விமான நிலையத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், கோடநாடு விவகாரம் பற்றி முரசொலி நாளேட்டில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறித்து கேட்கப்பட்டது.
காவிரி நீர்ப் பங்கீடு விவகாரம்! தமிழகத்திற்கு 5,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்தது கர்நாடகா!
டெல்லியில் திங்கள் கிழமை நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழுக் கூட்டத்தில், காவிரியில் அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு விநாடிக்கு 5000 கன அடி நீரை திறந்துவிட பரிந்துரை செய்யப்பட்டது. இதனை ஏற்க மறுத்த தமிழக அரசு, நிலுவையில் உள்ள 54 டிஎம்சி நீரை திறந்துவிட உத்தரவிடுமாறு வலியுறுத்தியது.
Chennai Air Pollution! சென்னையில் எகிறும் காற்று மாசு! தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வில் பகீர் தகவல்!
மாசற்ற காற்று என்ற மையக் கருத்தை முன்வைதது இந்திய அளவிலான உச்சி மாநாடு பெங்களூருவில் நடைபெற்றது. அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்விற்கான மையமானது (Center for Study of Science, Technology, and Policy (CSTEP), காற்று மாசுபாடு ஆய்வு மையம் (Centre for Air Pollution Studies (CAPS)) அமைப்புடன் இணைந்து இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஆகஸ்ட் 23-25 வரை இந்த உச்சி மாநாடு நடைபெற்றது.