அவெஞ்சர்ஸ் திரைப்பட இயக்குநர்களின் அடுத்த படத்தில் நடிக்க நடிகர் தனுஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். 2021 ஜனவரி மாதம் லாஸ் ஏஞ்சல்ஸில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தெரிகிறது.
கொரோனா தடுப்பூசிப் பணிகள் முடிந்தவுடன் குடியுரிமை திருத்தச் சட்டம்! அமித் ஷா திட்டவட்டம்!
தடுப்பூசி போடும் பணிகள் முடிந்தவுடன், குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். இந்த சட்டத்தால் இந்திய சிறுபான்மையினருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனவும் அவர் உறுதியளித்தார்.
மதுரையில் ஓரம்கட்டப்பட்டும் பி.டி.ஆர்.! தனது நிகழ்ச்சிகளை புறக்கணிக்குமாறு கட்சியினர் மிரட்டப்பட்டுவதாக புலம்பல்!
சமூக நலன், மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி மதுரையில் நடைபெற்றது. இதில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு பேசினார்.
பயம் நீக்கும் ஞானமலை முருகன்! 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவிலில் குருவின் அம்சமாக அருள்பாலிக்கும் ஞானபண்டிதன்!
ஞானம் பெறாதவரின் கல்வியறிவுகூட பொருளற்றதாகிப் போய்விடும். ஈட்டிய பொருளை நல்லவழியில் செலவிடவும், ஞானத்தைப் பெறவும் குரு ஒருவரின் அருள் நமக்குத் தேவை. எல்லோருக்குமே குரு கிடைப்பது சாத்தியமில்லை என்ற சூழலில், அத்தனை உயிர்களுக்கும் ஞான வடிவமாக – ஞானகுருவாகக் காட்சியளிப்பவன் அந்த ஞானபண்டிதன் முருகப்பெருமான். ஞான மூர்த்தியான முருகப்பெருமான் குடிகொண்ட ஒரு மலையே ஞான வடிவில் அமைந்துள்ளது. அதன் காரணமாகவே அந்த மலை `ஞானமலை’ என்றே போற்றப்படுகிறது.
கழுத்தில் விநாயகர் டாலருடன் டாப்லெஸ் புகைப்படம்! இறை நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் ரிஹான்னா!
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிஹான்னா மேலாடை அணியாமல், கழுத்தில் விநாயகர் டாலர் அணிந்துள்ள படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
லாக்அப் டெத்? புளியங்குடி இளைஞர் உடலை வாங்க மறுக்கும் பெற்றோர்! தென் மாவட்டங்களில் பரபரப்பு!
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகாவிற்கு உள்பட்ட புளியங்குடியைச் சேர்ந்த, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரான மாடசாமி என்பவரது மகன் தங்கசாமி (26). இவர் தனது உறவினர் ஒருவருக்கு மதுபாட்டில்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக சப்ளை செய்ததார் என கடந்த 11-ம் தேதி புளியங்குடி காவல்நிலைய எஸ்.ஐ. பரமசிவம் உள்ளிட்ட போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
வன்னியர் இட ஒதுக்கீடு ரத்துக்கு அரசுதான் காரணம்! போதைப் பொருள் தாராளமாக புழங்குகிறது! எடப்பாடி பழனிசாமி பகீர் குற்றச்சாட்டு!
வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு ரத்துக்கு நூற்றுக்கு நூறு சதவீதம் திமுக அரசுதான் காரணம் என்று எதிர்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
