திமுக அரசின் முதல் பட்ஜெட்டை, காகிதமில்லா இ–பட்ஜெட்டாக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் கலைவாணர் அரங்கில் இன்று தாக்கல் செய்தார். இதில் இடம்பெற்றுள்ள முக்கியமான அறிவிப்புகளை பார்ப்போம்.
டிஜிட்டல் புரட்சிக்கு வித்திடும் ஜியோ: ₹3,999-க்கு 5ஜி ஸ்மார்ட்போன் – ஒரு புதிய அத்தியாயம்!
இந்தியாவின் டிஜிட்டல் எதிர்காலம் ஒரு புதிய திருப்புமுனையை எட்டியுள்ளது. அதிவேக 5ஜி தொழில்நுட்பத்திற்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் கொண்டு வர ரிலையன்ஸ் ஜியோ ஒரு புரட்சிகரமான அறிவிப்பை வெளியிடத் தயாராகிறது.
சுகர் பேஷன்ட்டும் பயமில்லாம உருளைக்கிழங்கு சாப்பிடலாம்! இப்படி குக் பண்ணுங்க, என்ஜாய் பண்ணுங்க…!
டைப் 2 நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் உருளைக்கிழங்கு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்தான், ஆனால் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்று அவசியம் இல்லை. கவனமாக சமைப்பதன் மூலம், நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் கூட உருளைக்கிழங்கை சாப்பிட முடியும். உருளைக்கிழங்கில் வைட்டமின்கள் பி, சி மற்றும் பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் மாங்கனீசு போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.
#EWS! உயர் சாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு செல்லும்! உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்தது. தற்போதைய தலைமை நீதிபதி யுயு லலித்துக்கு நாளைய தினம் (நவ.8) கடைசி பணி நாள் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்ப்பு இன்றைய தினம் வழங்கப்பட்டது.
குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500 பொங்கல் பரிசு! தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்தத் தொகுதியான சேலம் மாவட்டம் எடப்பாடியில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500 வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்தார்.

பெரிய சோரகை கிராம கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தை தொடங்கினார். பிரச்சாரத்தின்போது பேசிய அவர், “பல்வேறு தடைகளை தாண்டி 4வது ஆண்டில் அரசு நடைபோடுகிறது. இந்தியாவிலேயே உபரி மின்சாரம் தயாரிக்கிற மாநிலம் தமிழகம். நீர் மேலாண்மையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.
புயல், கொரோனா போன்ற பேரிடர்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு மீண்டு வந்துள்ளோம். நெல் கொள்முதலில் தமிழக அரசு சரித்திர சாதனை படைத்துள்ளது. இந்தியாவிலேயே கல்வியிலும் தமிழகம் தலைசிறந்து விளங்குகிறது. அரசுப் பள்ளி மாணவ–மாணவிகளுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

எடப்பாடி தொகுதி அதிமுகவின் எஃகு கோட்டை. 43 ஆண்டு கால வரலாற்றில் ஒருமுறைகூட எடப்பாடி தொகுதியில் திமுக வெற்றி பெற்றதில்லை முதலமைச்சர் தொகுதி என்ற பெருமை எடப்பாடி தொகுதிக்கு உள்ளது. எடப்பாடி தொகுதியில் திமுக பிரசாரம் செய்வது பகல் கனவு காண்பது போன்றது. முதல்வர் பதவி இறைவன் கொடுத்தது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆட்சி நீடிக்குமா என சிலர் பேசினர், பல்வேறு தடைகளை தாண்டி 4ஆவது ஆண்டில் அரசு நடைபோடுகிறது என கூறினார்.
இருப்பாளி என்ற இடத்தில் பேசிய அவர், இதுவரை பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்பட்ட நிலையில், வரும் ஆண்டு பொங்கல் பரிசானது ரூ.2500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார். பொங்கல் பரிசு ரூ.2,500 மற்றும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு, உலர் திராட்சை, முந்திரி, ஏலக்காய் இவற்றுடன் நல்ல துணிப்பை ஒன்றும் கொடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

பொங்கல் பரிசுத்தொகுப்பு ஜனவரி 4ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று குறிப்பிட்ட முதலமைச்சர், வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கப்பட்டு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்றார். எந்த தேதியில் யார் வர வேண்டும் என டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார். பிரச்சாரத்தின் இடையே ஆங்காங்கே அம்மா மினி கிளினிக்குகளை அவர் திறந்துவைத்தார்.
Subscribe to our channels on YouTube & Telegram &
Tamilnadu &
Pondicherry
அதிகார தீண்டாமையை கடைபிடிக்கும் அறிவாலயம்! புறக்கணிக்கப்படும் பட்டியல் வகுப்பினர்!
திமுகவின் 71 ஆண்டு கால வரலாற்றில் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகிய முக்கிய பதவிகள் இதுவரை ஒரு முறை கூட பட்டியல் வகுப்பினருக்கு வழங்கப்படவில்லை. ஆ.ராசா பட்டியல் வகுப்பை சேர்ந்தவர் என்பதால் புறக்கணிக்கப்பட்டு இருப்பது அக்கட்சியின் சமூக நீதி கொள்கையை கேள்வி எழுப்புகிறது.
மின் கட்டணம் ரூ.1000க்கு மேலிருந்தால் ஆன்லைனில் செலுத்த வேண்டும்! நுகர்வோர் இழப்பீடு பெறவும் புதிய நடைமுறை அறிமுகமாகிறது!
தமிழ்நாட்டில் குறைவழுத்த மின் நுகர்வோர் கட்டணம் ரூ. 1,000க்கு மேல் இருந்தால் ஆன்லைனிலோ அல்லது டிமாண்ட் டிராஃப்ட் மூலமாகவோ செலுத்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம்(TNERC) பரிந்துரை செய்துள்ளது.
