விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், ஜிஎஸ்டி வரி உயர்வுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டது. டெல்லியில் அக்கட்சி தலைவர்கள் ராஷ்டிரபதி பவனுக்கு பேரணியாக சென்றனர். போலீஸார் அவர்களை கைது செய்தனர். காங்கிரஸ் போராட்டத்தை முன்னிட்டு டெல்லியின் சில பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.