அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் கடந்த 40 மாதங்களாக நடைபெறும் திமுக-வின் காட்டாட்சி தர்பார் ஆட்சியில், அப்பாவி மக்களை வாட்டி வதைப்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவது கொடுமையின் உச்சம். செப்டம்பர் 27 அன்று சென்னை மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட ஒருசில தீர்மானங்கள், சென்னை மக்களின் பாக்கெட்டுகளில் இருந்து நேரடியாக பணத்தைப் பிடுங்கும் வகையில் அமைந்துள்ளது மிகவும் கண்டனத்துக்குரியது.
ஐபோன் ஆலை தாக்குதலின் பின்னணியில் சீனா! இந்தியாவுக்கு எதிரான வர்த்தகப் போர்! பெருநிறுவனங்களை அச்சுறுத்தும் சீன கம்யூனிஸ்ட்!
சீனாவிலிருந்து வெளியேறி, இந்தியாவில் தொழில் நிறுவும் பெரு நிறுவனங்களை அச்சுறுத்தும் பணி தொடங்கியுள்ளது. கர்நாடகாவில் Wistron தொழிற்சாலை தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியை ஆராயும்போது இது தெளிவாகப் புலப்படுகிறது.
சமக்ர சிக்ஷா திட்டத்தில் பணியாற்றுவோருக்கு தமிழக அரசு ஊதியம் வழங்க வேண்டும்! முதலமைச்சருக்கு ஐபெட்டோ வலியுறுத்தல்!
ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தேசியக் கல்விக் கொள்கை, விஸ்வகர்மா திட்டம், நீட் தேர்வு, பிஎம்ஸ்ரீ பள்ளி, எல்லாவற்றையும் எதிர்ப்பதோடு மட்டுமன்றி, WE REJECT NEP 2020 என கொள்கை ரீதியாக எதிர்த்து போராடி வருகிறோம்.
ஆட்சியரை பொய்சொல்ல வைத்த வசந்தம் கார்த்திகேயன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? கள்ளச்சாராய சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ. பளீர் கேள்வி!
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. செந்தில்குமார், திமுகவின் கோர முகம் அம்பலமாகி இருப்பதாக கூறியுள்ளார். விகடன் இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியின் விவரம்.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு சாவுமணி அடித்த வீரன் வாஞ்சிநாதன்! போஸுக்கு முன்னோடியாய் ஆங்கிலேயர்களை அலறவிட்ட வரலாறு!
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஜூன் 17, 1911 அன்று மிக முக்கிய சம்பவம் நிகழ்ந்தது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த ஆஷ்துரையை வாஞ்சிநாதன் சுட்டுக்கொன்றுவிட்டு தனது உயிரையும் மாய்த்துக்கொண்டார். மாவீரன் வாஞ்சிநாதனின் நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
பட்டென காலில் விழுந்த மாஃபா பாண்டியராஜன்! OPS உள்நோக்கத்துடன் செயல்படுவதாக ஜெயக்குமார் குற்றச்சாட்டு!
அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடக்கும் எனக் கூறியுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓ.பி.எஸ். உள்நோக்கத்துடன் செயல்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
