இட்லி பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. ஹோட்டல்களுக்குச் சென்றாலும் நிறைய உணவுகளின் லிஸ்ட்டுகளை அடுக்கிக் கொண்டே செல்வார்கள். அத்தனையும் காதுக் கொடுத்து கேட்டு விட்டு இட்லி இருக்கா? என்ற கேள்வியோடு நம்முடைய உணவுகளை ஆர்டர் செய்வோம்.
பள்ளிக் கல்வித்துறையை அடிமை போல் நடத்துவதா? தஞ்சாவூர் கலெக்டருக்கு எதிராக போராட்டம்! ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு!
ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சனிக்கிழமை பொது விடுமுறை, தொடர் மழை இவற்றையெல்லாம் பொருட்படுத்தாது திட்டமிட்டபடி 19.10.2024 அன்று தஞ்சாவூரில் மாவட்டம் முழுவதும் உள்ள ஒன்று, இரண்டு, மூன்று கற்பிக்கும் வகுப்பாசிரியர்கள் கூட்டத்தினை நடத்துவதில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிடிவாதமாக உள்ளார்.
சென்னை சுற்றுவட்டாரத்தில் அதிகனமழைக்கு வாய்ப்பில்லை! ஆந்திராவுக்கு நகர்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!
சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரையிலும் கனமழை பெய்யவில்லை. வானம் வெளிவாங்கியுள்ள நிலையில், ஆங்காங்கே மிக லேசான மழையே பெய்கிறது.
மழைக்கு நடுவே ஆசிரியர்களுக்கு பயிற்சி! ஆதிக்கம் செலுத்தும் தஞ்சை மாவட்ட ஆட்சியர்! கலெக்டர்கள் வசமாகிவிட்டதா கல்வித்துறை? முதலமைச்சருக்கு ஐபெட்டோ கடிதம்!
ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “கொட்டும் மழையிலும் நனைந்து கொண்டு வெள்ள பாதிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறீர்கள். பெருமிதம் கொள்கிறோம்.
6 செ.மீ. மழையையே சென்னை மாநகரத்தால் தாங்க முடியவில்லை! 20 செ.மீ. பெய்தால்..! மருத்துவர் ராமதாஸ் சுளீர் கேள்வி!
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில், “சென்னையில் இன்று காலை 8.00 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 6 செ.மீ. அளவுக்கு மட்டுமே மழை பொழிந்துள்ள நிலையில், அதையே சென்னை மாநகரத்தால் தாங்க முடியவில்லை. சென்னை மாநகரின் பல பகுதிகளில் ஓரடி உயர்த்திற்கும் கூடுதலாக மழை நீர் தேங்கி நிற்கிறது. பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்திருக்கிறது.
காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்தது! சென்னையில் மழை நீடிக்கிறது! எங்கெல்லாம் கனமழை பெய்யும்?
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று இரவு தொடங்கி விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. குறிப்பாக காலை முதலே விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இதேபோல், தமிழ்நாட்டின் விழுப்புரம், கடலூர், விருதுநகர் உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் கனமழை தொடர்கிறது.
