ஆஸ்கார் விருது போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது ‘கூழாங்கல்’ திரைப்படம்! தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் வருத்தம்!

0
145

ஆஸ்கார் விருது போட்டியில் இருந்து ‘கூழாங்கல்’ திரைப்படம் வெளியேறியுள்ளது. இதற்கு தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ரவுடி பிக்சர்ஸ் சார்பில் நயன்தாரா- விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்த படம் ‘கூழாங்கல்’. இந்தப் படம் பல்வேறு திரைப்பட விழாக்களுக்கு அனுப்பப்பட்டது. பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் ‘கூழாங்கல்’ திரையிடப்பட்டு விருதுகளையும் வென்றது. இந்த நிலையில், வரும் 2022-ம் ஆண்டு மார்ச் 27-ம் தேதி ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது.

Also Read: ‘கூழாங்கல்’ திரைப்படம் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரை! டைகர் விருதையும் வென்ற முதல் தமிழ் படம்!

இதற்காக இந்தியா சார்பில் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான பிரிவில், ஆஸ்கர் விருதுப் போட்டிக்கு ‘கூழாங்கல்’ படம் பரிந்துரைக்கப்பட்டது. ‘கூழாங்கல்’ திரைப்படம் இறுதிப் பட்டியலில் இடம்பெறும் என்று தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் நம்பிக்கை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஆஸ்கார் விருது போட்டியில் இருந்து ‘கூழாங்கல்’ திரைப்படம் வெளியேறியிருக்கின்றது.

இதுகுறித்து விக்னேஷ் சிவன் தனது டிவிட்டர் பதிவில், ”ஆஸ்கார் பட்டியலில் நம் படம் வந்திருக்கிறதா என்று பார்ப்பதே பெரிய சாதனை. இறுதிப் பட்டியலில் இடம்பிடித்திருந்தால் எங்களைப் போன்ற சினிமா தயாரிப்பாளர்களுக்கு மகிழ்ச்சியும் பெருமையும் குறிப்பிடத்தக்கதாக இருந்திருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

*இந்தச் செய்தியை ஒலி வடிவில் கேட்க, மொபைல் ஸ்கிரீனின் வலப்புறம் தெரியும் SHARE என்ற ரவுண்ட் பட்டனை அழுத்தினால், அந்த வரிசையின் கீழே ஹெட்ஃபோன் போன்ற குறியீடு இருக்கும். அதை அழுத்தி ஹெட்செட் உதவியுடன் செய்தியை ஒலி வடிவத்தில் கேட்க முடியும்*