மூளைக்கும் வயிற்றுக்கும் நடக்கும் சிக்னல் பரிமாற்றம்! உணவுக்கும் மூளைக்குமான சிலிர்க்கவைக்கும் தொடர்பு! Can nutrition affect your mental health?

0
45
The link between food and mental health

4.30 Minute(s) Read : நாம் உண்ணும் உணவு நமது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தை அளிக்கிறது. ஆனால் அது மூளை மீது என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது? மூளையின் செயல்பாட்டுடன் உணவிற்கு என்ன தொடர்பு? என்பதை அறிய, வயிற்றில் என்ன நடக்கிறது என்பதை முதலில் தெரிந்துகொள்வோம்.

வயிறு என்றால் என்ன? ஹூஸ்டனில் உள்ள பேய்லர் மருத்துவக் கல்லூரியின் காஸ்ட்ரோஎன்ட்ராலஜி பேராசிரியர் ஜெஃப் ப்ரெடிஸ், “வாய் முதல் ஆசனவாய் வரை உள்ள எல்லா உறுப்புகளும் வயிற்றின் பாகங்கள். அவை செரிமானத்தில் பங்கு வகிக்கின்றன. இதில் கல்லீரலும், கணையமும் அடங்கும். இந்த பல மீட்டர் நீளமுள்ள குடல் பொதுவாக வயிறு என்று அழைக்கப்படுகிறது.

செரிமானச் செயல்பாட்டில் குடலின் ஒவ்வொரு பகுதியும் முக்கியப் பங்கு வகிக்கிறது. அமிலத்தின் உதவியுடன் வயிறு உணவை அரைக்கிறது. பின்னர் அது சிறுகுடலுக்கு அனுப்பப்படுகிறது. அங்கு உணவின் ஊட்டச்சத்துக்கள் செரிக்கப்படுகின்றன.” என்கிறார்.

Medical Journal Source : Study confirms that while certain foods can be associated with a mental health condition, this tells us little about why the food causes this effect

உணவு எப்படி செரிக்கப்படுகிறது என்றால், ‘எது ஜீரணிக்கப்படவில்லையோ அது பெருங்குடலுக்கு அனுப்பப்படுகிறது. அங்கு மீதமுள்ள பொருட்களும் தண்ணீரும் செரிக்கப்படுகின்றன. இதற்குப் பிறகு உடலில் எஞ்சியிருப்பது மலமாக வெளியேற்றப்படுகிறது. இந்த முழு செயல்முறையிலும், இரைப்பைக் குடல் பாதையில் இருக்கும் எல்லாத் தசைகள் மற்றும் நரம்புகளும் ஒன்றாக இணைந்து உணவை அரைத்துச் செரிக்கின்றன.

வயிற்றின் வேலை உணவை ஜீரணிப்பது மட்டுமல்ல, நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்துவதும் ஆகும். உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் உணவின் தேவையற்றக் கூறுகள் உடலின் மற்ற பகுதிகளை அடையாமல் இருப்பதை வயிறு உறுதி செய்கிறது. சில பாக்டீரியாக்கள் நோயைப் பரப்பலாம். சிலருக்குப் பலவீனமான வயிற்று சுவர் இருப்பதன் காரணமாக, நுண்ணுயிரிகள் அல்லது பாக்டீரியாக்கள் வயிற்றில் இருந்து கசிந்து உடலின் மற்ற பகுதிகளுக்குப் பரவி, அவர்கள் நோய்வாய்ப்படக்கூடும்.

நமது வயிறு, உடலின் மிக முக்கியமான நோய் எதிர்ப்புச் சாதனமாகவும் இருக்கிறது. நம் குடல் ஒரு சக்திவாய்ந்த நோயெதிர்ப்பு அமைப்பு. இது மிகவும் முக்கியமானது. ஏனென்றால் பல வகையான பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் நம் உணவின் மூலம் வயிற்றை அடைகின்றன,” என்கிறார் ஜெஃப் ப்ரெடிஸ்.

Also Read : சாராயத்துக்குக் குறைவில்லாத இணைய போதை! மாணவர்கள், இளைஞர்களை அச்சுறுத்தும் ‘இன்டெர்நெட் அடிக்‌ஷன் டிஸார்டர்’! What Is Internet Addiction Disorder?

பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் இரைப்பை குடல் பாதையில் இருந்து வெளியேறி உடலின் மற்ற பாகங்களுக்குள் நுழைந்தால், அது கணிசமான தீங்கை விளைவிக்கும். எனவே, நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் முதல் பாதுகாப்புச் சுவர் நமது வயிறு. ஆனால் நமது வயிறு தேவைக்கும் அதிகமாக சுறுசுறுப்பாக இருந்தால் அது வீங்கி விடும். குடலில் கொப்புளங்கள் மற்றும் ஆசனவாயில் வீக்கத்தை ஏற்படுத்தும் க்ரோன்ஸ் நோய் மற்றும் அல்சரேட்டிவ் கொலைடிஸ் போன்ற நோய்களை இது ஏற்படுத்தும்.

வயிற்றைச் சுற்றியுள்ள நரம்புகள், மூளையுடன் நேரடி தொடர்பைக் கொண்டுள்ளன. அவை இரண்டிற்கும் இடையே செய்திகள் பரிமாறப்படுகின்றன. வயிற்றில் ஏதேனும் பிரச்சனை என்றால், மூளைக்கு அது தெரிந்துவிடும். இந்த இணைப்பு மிகவும் ஆழமானது என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. வேகஸ் நரம்பு என்பது மூளைக்கும் வயிற்றுக்கும் இடையே இருக்கும் சமிக்ஞைபே பரிமாற்றத்தின் ஒரு அதிவேக நெடுஞ்சாலை என்கிறது மருத்துவ உலகம்.

வயிற்றுக்கும் மனநோய்க்கும்கூட தொடர்பு இருப்பதாக டெக்சஸ் பல்கலைக்கழகத்தின் சவுத்வெஸ்டர்ன் மருத்துவ மைய நரம்பியல் விஞ்ஞானியும், உளவியல் பேராசிரியருமான ஜேன் போஸ்டர் கூறியுள்ளார். மனப் பதற்றம் அல்லது மன அழுத்தத்துடன் தொடர்புடைய சிறப்பு வகைப் பாக்டீரியாக்கள் குறித்து ஜேன் ஆராய்ச்சி செய்து வருகிறார். நமது உடலில் இருக்கும் வேகஸ் நரம்புதான் மூளையை வயிற்றுடன் இணைக்கும் மிக நீளமான நரம்பு என்று அவர் தெரிவித்துள்ளார்.

வேகஸ் நரம்பு வயிற்றின் தசைகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள உறுப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது இருவழி நரம்பு ஆகும். இது மூளையில் இருந்து வயிற்றுக்கும், வயிற்றில் இருந்து மூளைக்கும் சமிக்ஞைகளை அனுப்புகிறது. அதாவது வயிற்றில் இருந்து பெறப்படும் சிக்னல்களுக்கு ஏற்ப மூளைச் செயல்படுகிறது.

மன உளைச்சல், வயிற்றில் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பது நமக்குத் தெரியும். வயிற்றில் இருக்கும் சரியான பாக்டீரியாக்கள் மன அழுத்தத்தை குறைக்க உதவும் என்பது தற்போது தெரியவந்துள்ளது. மனச்சோர்வு அவடைந்தவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், மனச்சோர்வு அல்லது பதற்றத்தைக் குறைக்க உதவும் சில பாக்டீரியாக்கள் இருப்பதைக் கண்டறிந்தோம்,” என்று ஜேன் போஸ்டர் குறிப்பிடுகிறார்.

மனச்சோர்வு அடைந்தவர்களிடையே நிலவும் அமைதியின்மைக்கான காரணத்தைக் கண்டுபிடிப்பது ஒரு சிக்கலானப் பணியாகும். ஆனால் இப்போது ஒரு துப்பு நம் கையில் கிடைத்துள்ளது. இதன் மூலம் பாக்டீரியா அல்லது நுண்ணுயிரி இல்லாததால் அமைதியின்மை அதிகரிக்கிறதா? என்பதை நாம் கண்டறியலாம் என ஜேன் போஸ்டர் தெரிவித்துள்ளார்.

நம் வயிற்றில் இருக்கும் பாக்டீரியாக்கள் நமது மரபணுக்களுடன் தொடர்புடையதா? அல்லது நமது உணவு மற்றும் வாழ்க்கை முறையுடன் தொடர்புடையதா? என்பதை நம்மால் இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. சீரான உணவு மற்றும் உடற்பயிற்சி, நமது வயிறு மற்றும் மனதை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

செரிமானத்தை மேம்படுத்த இரண்டு வகையான சப்ளிமெண்ட்டுகள் உதவுகின்றன. முதலாவது ப்ரோபயாடிக்குகள் – நமது வயிற்றில் உள்ள அதே வகையான பாக்டீரியாக்களை அவை கொண்டுள்ளன. இரண்டாவது ப்ரீபயாடிக்குகள் – நம் குடலில் உள்ள நுண்ணுயிரிகளை வளர்க்கும் நார்ச்சத்துக் கொண்டவை. ஆனால் இந்த சப்ளிமெண்ட்ஸ் நம் வயிற்றின் பெருங்குடலை அடையும் போது மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்.

பெருங்குடலை அடைவதற்கு அவை சிறுகுடலின் வழியாகச் செல்ல வேண்டும். அதன் நீளம் நமது உடலின் நீளத்தை விட மூன்று மடங்கு அதிகம். இந்த சப்ளிமெண்ட்ஸ் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். அப்போதுதான் பலன் கிடைக்கும்.

Also Read : உடல் பருமன் அறிகுறிகள்; ஏற்படுத்தும் நோய்கள்! Obesity: What You Need to Know

செரிமானம் நன்றாக இல்லை என்று உணரும் ஒருவர், ப்ரோபயாடிக் அல்லது ப்ரீபயாடிக் சப்ளிமெண்ட் எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், பல ப்ரோபயாடிக்குகள் வயிற்றிலேயே அழிந்துவிடுகின்றன. எனவே நீங்கள் உட்கொள்ள விரும்பும் ப்ரோபயாடிக் நுண்ணுயிரிகள் குடலில் உயிர்வாழ முடியுமா இல்லையா என்பதை கண்டுபிடிக்க வேண்டும். எனவே மருத்துவரின் பரிந்துரைப்படியே ப்ரோபயாடிக்குகள் அல்லது ப்ரீபயாடிக்குகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

வயிறு ஆரோக்கியமாக இருக்க பல வகையான பாக்டீரியாக்கள் மற்றும் நுண்ணுயிரிகள் தேவை என்று சிகாகோ லயோலா பல்கலைக்கழகத்தில், நுண்ணுயிரியல் மற்றும் நோயெதிர்ப்புத் துறை பேராசிரியரான கெயில் ஹெக்டி கூறுகிறார். வயிற்று நோய்களை உண்டாக்கும் நோய்க்கிருமிகள் பற்றிய நிபுணரான அவர், “வயிற்றில் இருக்கும் பல வகையான நுண்ணுயிரிகள் தனியாக வேலை செய்யாது. அவை ஒன்றிணைந்து வேலை செய்கின்றன. அவை நம்மை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் பங்கு வகிக்கின்றன. அவை இல்லாமல் மனிதர்கள் உயிர் வாழ முடியாது. அதாவது வயிற்றைக் கவனிக்க, அங்கிருக்கும் நுண்ணுயிரிகளைக் கவனிப்பது முக்கியம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நுண்ணுயிரிகள் நம் உணவில் எஞ்சியதை உண்ணும். உதாரணமாக, நாம் பீன்ஸ் அல்லது நார்ச்சத்து உள்ள மற்ற காய்கறிகளை சாப்பிடுகிறோம். இந்த நார்ச்சத்து முழுமையாக ஜீரணிக்கப்படாதபோது அது பெருங்குடலை அடைகிறது. அங்கும் வாழும் இந்த பாக்டீரியாக்கள் அந்த நார்ச்சத்தில் செழித்து வளர்கின்றன. இதன் ஒரு மோசமான விளைவு என்னவென்றால், அது வாயுவை உருவாக்குகிறது. ஆனால் இந்த பாக்டீரியாக்கள் சரியாக வளர்ந்து வேலை செய்கின்றன என்பதற்கு இது ஒரு நல்ல அறிகுறி.

Large intestine. Human internal organ.

ஆனால் நாம் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்ணும்போது இவ்வாறு நடப்பதில்லை. பதப்படுத்தப்பட்ட உணவில் மிகக் குறைந்த அளவு நார்ச்சத்தே இருக்கிறது. அதில் சர்க்கரை உள்ளது. அதை நாம் உடனடியாக ஜீரணித்துவிடுகிறோம். நுண்ணுயிரிகளுக்கு எதுவும் மிச்சமாவதில்லை.

புரதம் மற்றும் குளுக்கோஸ் நிறைந்த உணவுகள் நம் தசைகளை வளர்க்கின்றன. நாம் சாப்பிடும்போது நம் உடலை மட்டுமல்லாமல் வயிற்றில் இருக்கும் நுண்ணுயிரிகளின் ஊட்டச்சத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும். இதற்காக நாம் பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும். உணவு எவ்வளவு இயற்கையானதாக உள்ளதோ அது வயிற்றுக்கு அவ்வளவு நல்லது. தயிர் போன்ற புளிக்கவைக்கப்பட்ட உணவுகளும் நல்லது. ஏனெனில் வயிற்றுக்கு தேவையான பாக்டீரியா அதில் உள்ளது.

உணவு உண்ணும் போது நமக்கு எது பிடிக்கும்? என்று மட்டும் சிந்திக்காமல், வயிற்றில் இருக்கும் நுண்ணுயிரிகளுக்கு எது நல்லது? என்று சிந்திக்க வேண்டும். இரண்டு பேருக்கு உணவளிப்பது போல் இதை நாம் சிந்திக்க வேண்டும். ஒன்று உங்கள் உடல், மற்றொன்று உங்கள் வயிற்றில் இருக்கும் நுண்ணுயிரி. மனித உடலுக்கு சக்தி தேவை. அதற்குப் புரதம் சாப்பிட வேண்டும், உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஆனால் வயிற்றில் வளரும் நுண்ணுயிரிகள் ஆரோக்கியமாக இருக்க நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை உட்கொள்ள வேண்டும். இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்,” என்று கெயில் ஹெக்ட் கூறுகிறார்.

நமது மன ஆரோக்கியமும் இந்த நுண்ணுயிரிகளுடன் நேரடியாகத் தொடர்புடையது. உடல் பருமன், நீரிழிவு, அல்சைமர் மற்றும் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வயிற்றில் இந்த நுண்ணுயிரிகளின் பன்முகத்தன்மை குறைவாக இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ’எல்லா நோய்களின் தொடக்கமும் வயிற்றில் இருந்துதான்’ என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். எனவே நமது ‘Gut feeling’ அதாவது ’உள்ளுணர்வு’ மீதும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

Disclaimer : The information in this news item is not intended to replace the advice of a qualified healthcare professional. If you have any questions or concerns about your health, please speak to your doctor or other qualified healthcare professional.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry