சரிவிகித உணவு முறையால் நீரிழிவு குறைபாட்டை தடுக்க முடியுமா? இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சொல்லும் காரணங்கள்..!

0
81
Representative Image

‘சரிவிகித உணவு‘ என்ற வார்த்தையை அடிக்கடி கேள்விப்படுகிறோம். மருத்துவக் கட்டுரைகளில் தவிர்க்க முடியாத வாசகமாகவும் இது இருக்கிறது. ஆங்கிலத்தில் Balanced diet என்று சொல்லப்படும் இதன் முக்கியத்துவம்தான் என்ன?

அனைத்து சத்துகளையும் சரியான விகிதத்தில் உள்ளடக்கிய உணவே இதன் அர்த்தம். இதனடிப்படையில் ‘இந்தியர்களுக்கான’ சரிவிகித உணவு பற்றிய வழிகாட்டுதல்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) சமீபத்தில் வெளியிட்டுள்ளது. சுமார் 148 பக்கங்கள் கொண்ட இந்த வழிகாட்டுதலில் 17 வகையான அறிவுறுத்தல்கள் இடம்பெற்றுள்ளன. இதுபற்றி வேல்ஸ் மீடியாவில் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.

Also Read : இந்தியர்களுக்கான ஆரோக்கியமான உணவு எது? சமைப்பதற்கு மண்பாண்டங்கள்தான் சிறந்ததா? மத்திய அரசின் திருத்தப்பட்ட வழிகாட்டுதல் வெளியீடு!

அத்தியாவசிய ஊட்டச்சத்துகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும், தொற்றா நோய்களை (Non communicable disease) தடுப்பதற்காவும் சரிவிகித உணவுமுறையைக் கடைப்பிடிப்பது அவசியமாகும். இந்தியர்களுக்கு உண்டாகும் நோய்களில் சுமார் 56.4 சதவிகித நோய்கள் தவறான உணவுப் பழக்கங்களாலேயே உருவாகின்றன. உடலுக்குத் தேவையான கொழுப்பு அமிலங்களை சமையல் எண்ணெய்களின் வழியே பெற்றுக் கொள்வதைவிட நட்ஸ், எண்ணெய் வித்துகள், கடல் உணவுகளின் வழியே பெற்றுக் கொள்வதே சிறந்தது.

ஆரோக்கியமான உணவுமுறையும், போதுமான உடற் பயிற்சிகளும் இதயநோய்களையும், உயர் ரத்த அழுத்தத்தையும் கணிசமான அளவில் குறைக்கும். வாழ்க்கைமுறை மாற்றங்களால் வருகிற டைப் 2 (Type 2) டயாபட்டீஸ் என்கிற இரண்டாம் வகை நீரிழிவினையும் சீரான வாழ்க்கை முறையால் தடுக்க முடியும். ஆரோக்கியமான உணவுப்பழக்கம் மற்றும் உடற்பயிற்சியானது இளவயது மற்றும் திடீர் மரணங்களை கணிசமான அளவு தவிர்க்க உதவுகிறது.

Also Read : ஐடி ஊழியர்கள் எதிர்கொள்ளும் உடல்நலப் பிரச்சனைகள்! ஊழியர்களின் ஆரோக்கியத்தை உறிஞ்சும் ஐ.டி. நிறுவனங்கள்! Vels Exclusive!

தவறான உணவுப்பழக்கத்துடன் உடல் இயக்கமின்மை கூட்டாக சேர்ந்து ஆரோக்கிய சீர்கேட்டுக்குக் காரணமாக அமைகிறது. நல்ல சத்தான உணவுகளைத் தேடி உண்ணாமையும், நுண்ணூட்டச்சத்து குறைபாடுகளும், உடல் பருமனும் அதிக பிரச்னைகளை உருவாக்கி வருகின்றன. எனவே அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் அதிக கொழுப்புள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

அதிக சர்க்கரை கொண்ட உணவுகளை தவிர்க்க வேண்டும், நாள் ஒன்றுக்கு 20 முதல் 25 கிராம் சர்க்கரையே இந்தியர்களுக்குப் போதுமானது. உடற்பயிற்சி செய்கிறவர்கள், தங்களது கட்டான உடலுக்காக புரோட்டீன் சப்ளிமென்டுகளைப் பயன்படுத்துகிறார்கள். தொடர்ச்சியாக புரோட்டீன் சப்ளிமென்டுகளைப் பயன்படுத்தும்போது எலும்புகளின் தாது இழப்பையும், சிறுநீரக நோய்களையும் எதிர்காலத்தில் சந்திக்க வேண்டி வரலாம்.

Also Read : இந்தியாவுக்கான பிரத்யேகமான காலணி அளவு! இனி UK, US காலணி அளவுகள் தேவையில்லை!

நாம் உட்கொள்ளும் உணவின் ஆற்றலில் (Energy) சராசரியாக 5 சதவிகிதத்துக்கும் குறைவான அளவிலேயே சர்க்கரை இருக்க வேண்டும். தானியங்களிடமிருந்து கிடைக்கும் கார்போஹைட்ரேட்டின் அளவு 45 சதவிகித கலோரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். நம் புரத உணவின் தேவை 15 சதவிகிதம். இதற்கு மீதம் உள்ள கலோரி அளவுகள் நட்ஸ், பழங்கள், காய்கறிகளிடமிருந்து கிடைக்க வேண்டும். கொழுப்பு அளவானது மொத்த உணவின் அளவில் 30 சதவிகிதம் இருக்க வேண்டும்.

ICMRன் திருத்தப்பட்ட வழிகாட்டுதலின்படி, உணவுப்பொருள்கள் வாங்கும்போது அதன் லேபிளை படியுங்கள். கர்ப்பிணிகள் மற்றும் இளம் தாய்மார்களுக்கான உணவு, உடல்நலத்தை உறுதிப்படுத்த வேண்டும். குழந்தைக்கு 2 ஆண்டுகள் வரையிலும் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குறைந்தபட்சம் 6 மாதங்கள் தாய்ப்பால் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். ஊட்டச்சத்து மிக்க உணவுகளை மூத்த குடிமக்களுக்கு வழங்குவதில் முன்னுரிமை கொடுங்கள்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry