Saturday, February 14, 2026
Home Blog Page 124

இந்தியா உலகக்கோப்பையை வெல்ல முடியாததன் பின்னணி! பிட்ச் ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக மாறியது எப்படி?

குஜராத் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டியில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 240 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில் இந்தியாவின் தோல்விக்குக் காரணமான சில விஷயங்களைப் பார்ப்போம்.

செய்யாறு சிப்காட் சுற்றி நிலங்களை வாங்கி குவித்துள்ள அமைச்சர் எ.வ. வேலு? அரசியலமைப்பை மீறி தமிழக அரசு செயல்படுவதாக குற்றச்சாட்டு!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா விரிவாக்கத்துக்காக, மேல்மா, குரும்பூர், காட்டுக்குடிசை உள்ளிட்ட 11 கிராமங்களில் உள்ள 3,174 ஏக்கர் அளவுக்கு நிலத்தைக் கையகப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் சார்பில் கடந்த ஜூலை 2-ம் தேதியில் இருந்து மேல்மா கூட்டுச்சாலையில் பந்தல் அமைத்து தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

சட்டவிரோத மணல் கொள்ளை! 10 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்! நெருக்கடியில் ஆட்சியாளர்கள்!

சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாரின் அடிப்படையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை(Enforcement Directorate – ED) சோதனை நடைபெற்றது. இதில் ஆட்சியாளர்களுக்கு மிகவும் நெருங்கிய நபர்களிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

விமரிசையாக நடைபெற்ற திருச்செந்தூர் சூரசம்ஹாரம்! ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என முழக்கமிட்டு பக்தர்கள் பரவசம்!

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், அலைவீசும் கடலருகே அமைந்துள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடக்கும் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி விழா கடந்த 13-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. சஷ்டித் திருவிழாவின் உச்ச நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடந்தது.

திண்டிவனம் – தி.மலை நெடுஞ்சாலையில் புதிய சுங்கச்சாவடி! செஞ்சி சுற்றுவட்டார விவசாயிகள் கடும் எதிர்ப்பு!

திண்டிவனம் – திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் செஞ்சி அருகே நாட்டார்மங்கலத்தில் புதிதாக சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் நான்கைந்து மாதங்களில் முடிந்துவிடும் என்று NHAI அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த சுங்கச் சாவடிக்கு செஞ்சி சுற்று வட்டார விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஒரு கம்பெனிக்காக கல்வியைப் பாழ்படுத்துவதா? இனி, எமிஸ் பதிவு செய்யமாட்டோம்! அச்சுறுத்தலை எதிர்கொள்ளத்தயார் என ஐபெட்டோ ஆவேசம்!

அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (ஐபெட்டோ) தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “டிட்டோஜாக் மற்றும் தமிழக ஆசிரியர் கூட்டணி அறைகூவலினை ஏற்று எமிஸ் இணையதளத்தில், மாணவர்கள், ஆசிரியர்கள் வருகைப் பதிவினை தவிர்த்து மற்ற அனைத்து பதிவுகளிலிருந்தும் தங்களை விடுவித்துக் கொண்டு அதில் உறுதியாக இருக்கும் மாவட்ட, வட்டார அமைப்புகளை பெருமையுடன் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை உனடியாக திருப்பெறாவிட்டால் மிகப்பெரும் போராட்டம்! தமிழக அரசுக்கு ஈபிஎஸ் எச்சரிக்கை!

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சட்டமன்றத் தொகுதி, அனக்காவூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல்மா, தேத்துறை, குறும்பூர், நர்மா பள்ளம், நெடுங்கல், அத்தி, வடஆளப்பிறந்தான், இளநீர்குன்றம், வீரம்பாக்கம் ஆகிய 9 ஊராட்சிகளைச் சேர்ந்த சுமார் 3,300 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய விளை நிலங்களை `சிப்காட் தொழிற்பூங்கா விரிவாக்கம்’ என்ற பெயரில் கையகப்படுத்துவதற்கான அரசாணையை இந்த திமுக அரசு பிறப்பித்துள்ளது.

antalya bayan escort