Saturday, February 14, 2026
Home Blog Page 129

மகனுக்கு, சந்திரசேகர் எனப் பெயர் சூட்டிய எலான் மஸ்க்! மத்திய அமைச்சர் பகிர்ந்த சுவாரசியத் தகவல்!

டெஸ்லா உரிமையாளரும், உலகப் பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் இருப்பவருமான எலோன் மஸ்க் தனது மகனுக்கு சந்திரசேகர் என்று பெயர் வைத்துள்ளார். மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தனது சமூக வலைதளத்தில் இதனை உறுதி செய்துள்ளார்.

சிம்பிளான உயிர் காக்கும் சோதனை! வீட்டிலேயே செய்து பாருங்க, உங்க ஆயுளையே தெரிஞ்சிக்கலாம்! What is the One Leg Standing test?

ஒற்றைக் காலில் நிற்கும் யோகப் பயிற்சி அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால், ஒற்றைக் காலில் நிற்பது என்பது, உங்களது ஆரோக்கியம் மற்றும் நீங்கள் வாழப்போகும் நாள்களைத் தொடர்புப்படுத்த வாய்ப்புள்ளது என்பது தெரியுமா?

ஐ.டி. ரெய்டு வளையத்தில் எ.வ. வேலு! 60க்கும் அதிகமான இடங்களில் சோதனை! ஒப்பந்ததாரர்கள், ரியஸ் எஸ்டேட் அதிபர்கள் கலக்கம்!

பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் ஆகிய துறைகளை கவனிக்கும் அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான வீடு, கல்வி நிறுவனங்களில் இன்று காலை 7 மணி முதல்  துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படை உதவியுடன் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

INDI கூட்டணியில் எதுவும் நடப்பதுபோல் தெரியவில்லை! காங்கிரஸ் மீது நிதிஷ்குமார் கடும் அதிருப்தி!

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கடந்த ஆண்டு பா.ஜ.க-வுடனான கூட்டணி ஆட்சியை முறித்துக்கொண்டார். அதைத் தொடர்ந்து, ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து புதிய ஆட்சி அமைத்த பிறகு, 2024 தேர்தலை எண்ணத்தில் வைத்து பிற எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்து பாட்னாவில் கூட்டம் நடத்தினர்.

தேசியக் கல்விக்கொள்கையைப் பின்பற்றி திறனறித் தேர்வு! 3,6,9ம் வகுப்பு மாணவர்கள் OMR தாளில் தேர்வெழுத நிர்ப்பந்தம்! ஐபெட்டோ கடும் விமர்சனம்!

அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (ஐபெட்டோ) தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “புதிய கல்விக் கொள்கையில் கூட மூன்றாம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு நடத்துவதை தவிர்த்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கிறார்கள்.

NEP 2020க்காக உருவாக்கப்பட்டு, NCERT இன் அங்கமான PARAKH( Performance Assessment Review and Analysis of Knowledge for Holistic Development), ETS என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஆலோசனையுடன் SEAS-2023 (State Educational Achievement Survey) தேர்வினை உலக வங்கி வங்கி நிதி உதவியுடன் நாளை(03/11/2023) நடத்த உள்ளது. புதிய தேசிய கல்விக் கொள்கைப்படி, பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை அளவிட மாநிலங்கள் தனியாக கள ஆய்வு செய்ய நடத்தப்படும் இந்த State Educational Achievement Survey தேர்வில் நாடு முழுவதும் 11 மில்லியன் மாணவர்கள் பங்கேற்கிறார்கள்.

இதற்காக, தமிழகத்தில் இன்று (02.11.2023) பி.எட்., மாணவர்கள் சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்குச் சென்று, தேர்வு பேக்கேஜ்களை கொடுத்து, பள்ளி விவரங்கள், மாணவர்களின் விவரங்களை தொகுத்து வைத்திடுமாறு பள்ளித் தலைமை ஆசிரியரிடம் அறிவுறுத்தி உள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 3, 6 மற்றும் 9-ம் வகுப்புகள் உள்ள 27, 047 பள்ளிகள் மற்றும் அதில் படிக்கும் மாணவர்களின் கற்றல் திறன் ஆய்வு செய்யப்பட உள்ளது. இதற்காக மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களாக முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த SEAS தேர்வினை நடத்துவதற்காக கல்லூரிகளில் பி.எட், எம்.எட், பயிலும் 29,775 மாணவர்கள் கள ஆய்வாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் வட்டார அளவிலும் ஒருங்கிணைப்பாளர்களாக 20 பள்ளிகளுக்கு ஒருவர் வீதம் விரிவுரையாளர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் என மொத்தம் 1,356 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.

ஆறு பேக்கேஜ் களில் வினாத்தாள் விடைத்தாள் பேனா ஆகியவை SCERT வழியாக தேர்வினை கண்காணிக்கும் அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாம். தேர்வு நடைபெறும் அறையில் தேர்வு நடத்தும் கள ஆய்வாளரைத் தவிர, தலைமை ஆசிரியரோ, வகுப்பு ஆசிரியரோ இருக்கக் கூடாது. அந்தளவு கெடுபிடிகளுடன், அவ்வளவு மந்தனமான முறையில் தேர்வினை நடத்த வேண்டுமாம்.

Also Read : சமூக ஊடகப் பதிவுகளை தணிக்கை செய்ய அரசு அமைப்பு! ஜனநாயகத்துக்கு விடப்பட்ட சவால், கருத்துரிமைக்குப் பெரும் அச்சுறுத்தல்! Fact Checking Unit!

அதிகபட்சம் 30 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு தேர்வு நடத்தப்படுகிறது. மூன்று வகையான(A,B,C) வினாக்கட்டுகள் அனுப்பி வைத்துள்ளார்களாம். அரசு போட்டித் தேர்வு முறையில், OMR (Optical Mark Recognition – OMR SHEET) தாள் வடிவில் ஒரு வினா தொகுப்பில் இருக்கக்கூடிய வினாக்கள், மற்றொரு தொகுப்பில் வினா எண் மாறி, மாறி இருக்குமாம். நல்லவேளை நீட் தேர்வைப் போன்று, எங்களுடைய மாணவர்களின் இடுப்பில் அணிந்துள்ள அரைஞாண் கயிற்றை தவிர, கழுத்திலோ, காதிலோ, பெரிதாக அணிகலன்கள் எதுவும் இல்லை. இல்லையென்றால் அதையும் கழற்றச் சொல்லி இந்தத் தேர்வினை நடத்தினாலும் வியப்பதற்கு ஒன்றுமில்லை..!

தேர்தல் முடிந்து பொருள்களை ஒப்படைப்பது போல், இந்தத் தேர்வினை முடித்து நாளை(03/11/2023) மாலையே, OMR தாள் மற்றும் எழுது பொருட்களை ஏழு பேக்கேஜ்களில் ஒப்படைத்தல் வேண்டுமாம். பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவையான ஆசிரியர்களை நியமனம் செய்ய அக்கறை காட்டவில்லை. கற்பித்தல் பணிகளைத் தவிர பிற பணிகளை ஆசிரியர்களுக்கு அடுக்கடுக்காக அள்ளித் தந்து வருகிறார்கள்.

மாணவர்களின் அடைவுத்திறனை கண்காணிப்பதற்கு மட்டும், ஹெலிகாப்டரில் இருந்து நேரடியாக வந்து இறங்குவதைப் போல, வானளாவிய கற்பனை உலகில் மிதந்து வருகிறார்கள். எப்படி அடைவு சோதனை நடத்தினாலும் சரி; எழுதுகிற மாணவர்கள் எங்கள் மாணவர்கள்; எங்கள் மாணவர்களைப் பற்றி எங்களுக்குத்தான் தெரியும். தேர்வுக்கு திட்டமிட்டுள்ள மத்திய அரசினைப் பற்றியும் தெரியும். NCERT பற்றியும் எங்களுக்கு தெரியும்.

Also Read : அரசு ஆதரவில் சைபர் தாக்குதல்! எதிர்க்கட்சி எம்.பி-க்களுக்கு ஆப்பிள் நிறுவனம் அலெர்ட்! ஒட்டுக்கேட்கிறதா மத்திய அரசு?

மதிப்பீடாக இருந்தாலும் சரி, அடைவுத்திறன் சோதனையாக இருந்தாலும் சரி, தேர்வாக இருந்தாலும் சரி, இவையெல்லாம் இயல்பான சுதந்திரமான சூழலில் நடைபெற வேண்டும். முற்றிலும் இயல்புக்கு மாறாக, பி.எட்., கல்லூரியில் படிக்கும் மாணவர்களை வைத்து தனி அறையில், நெருக்கடியான மந்தன முறையில் தேர்வினை நடத்தினால், அந்த மூன்றாம் வகுப்பு மாணவர்கள் எப்படி அந்தத் தேர்வினை எழுதுவார்கள் என்பதை எங்களால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

OMR(Optical Mark Recognition) தாளில் மூன்றாம் வகுப்பு மாணவர்கள் திடுதிப்பெனெ எப்படி தேர்வினை எழுதுவார்கள்? இந்தச் சோதனையின் முடிவுகள் எப்படி சரியான முடிவுகளை தரும்? யதார்த்தத்தை (Practical) விட்டு விலகி நிற்கும் கல்வித்துறையே, சிந்திக்க வேண்டியவற்றை சிந்தித்து செயல்படுத்த எப்போதுதான் முன் வருவீர்கள்? நீங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

தேசிய கல்விக் கொள்கையினை அமல்படுத்துவதற்கு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையினரை நியமனம் செய்தால் முதல் வகுப்பு முதலே பொதுத் தேர்வுகளை நடத்தவும் தயங்க மாட்டார்கள். நீட் தேர்வினை நாம் எதிர்க்கிறோம். ஆனால் நியமனத் தேர்வினை நாமே நடத்துகிறோம். தேசிய கல்விக் கொள்கையில், தொடக்கக் கல்வியில் உள்ள வகுப்புகளுக்கு பொதுத் தேர்வினை எதிர்க்கிறோம். ஆனால் NCERT நடத்துகிற அடைவுத்திறன் தேர்வினை நாமே வரவேற்று நடத்துகிறோம்.

Also Read : வகுப்பறையை அரசியல் மேடையாக்கிய திமுக எம்.எல்.ஏ.! நீட் தேர்வுக்கு எதிராக பள்ளியிலேயே தலைமை ஆசிரியர் பிரச்சாரம்!

விஸ்வகர்மா யோஜனா திட்டத்திற்கு ரூ. 13,000 கோடி நிதியினை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. பெற்றோர் தொழிலை பிள்ளைகள் கற்றுக் கொள்ளலாம். ரூபாய் 15,000 இலவசம். உடனடியாக ஒரு லட்சம் கடனும் தருகிறார்கள். இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், ஈரோடு, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நீலகரி, திருப்பூர், விருதுநகர் என ஏழு மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. ஆண்டவன் சொல்கிறார், அருணாச்சலம் கேட்கிறார் என்பார்கள்!. ஆனால் தற்போது அருணாசலம் சொல்கிறார், ஆளுபவர்கள் கேட்டு வருகிறார்கள்! என்று பரவலாக தெரிவித்து வருகிறார்களே!

ஒரு புதுப் பெயரினை, நல்ல தமிழ்ப் பெயரினை விஸ்வகர்மா யோஜனா திட்டத்திற்கு அருணாசலங்கள் அறிமுகப்படுத்தினால், இது முதலமைச்சரின் நல்ல திட்டம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற பக்குவ நிலைக்கு நம்மை தள்ளுவார்களோ? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் மையக் கருத்துதான் என்ன? பொறுத்திருந்து பார்ப்போம்..! சமூக நீதிக்கு எதிராக கல்வித்துறை எந்தத் திட்டங்களை அமல்படுத்த முனைப்பு காட்டினாலும், உரிமை உறவுடன் என்றும் எதிர்க் குரல் கொடுப்போம்! விடிவு காலத்தை நோக்கி நமது பயணத்தினை தொடர்வோம்..!” இவ்வாறு அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

பயிர் காப்பீட்டுத் தொகை வழங்காமல் விவசாயிகளை வஞ்சிக்கும் விடியா திமுக அரசு! முன்னாள் அமைச்சர் காமராஜ் குற்றச்சாட்டு!

மத்திய அரசு அறிவித்த பயிர் இழப்பீடு தொகையை வழங்காமல் விடியா திமுக முதலமைச்சர் ஸ்டாலின் அரசு விவசாயிகளை வஞ்சிப்பதாக அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான காமராஜ் குறறஞ்சாட்டியுள்ளார்.

சமூக ஊடகப் பதிவுகளை தணிக்கை செய்ய அரசு அமைப்பு! ஜனநாயகத்துக்கு விடப்பட்ட சவால், கருத்துரிமைக்குப் பெரும் அச்சுறுத்தல்! Fact Checking Unit!

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், தி.மு.க., மற்றும் திராவிடக் கொள்கைகளை எதிர்க்கும் அரசியல் கட்சியினர், அரசியல் ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், சமூக வலைதள ஆர்வலர்கள் மீது வழக்குகள் பதிவது, சிறையிலடைப்பது எனத் தொடர் அடக்குமுறைகள் நடந்து வருகின்றன. இதை மேலும் கூர்தீட்டும் விதமாக, தமிழகத்தில் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்குச் சாவு மணி அடிக்கும் விதமாக சமூக ஊடகக் கண்காணிப்பு அமைப்பு தொடங்கப்பட்டு, அதற்கு திமுக ஆதரவாளர் இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

antalya bayan escort