Friday, February 13, 2026
Home Blog Page 149

போராட்டம் நடத்திய பாஜகவினரையும், கைது செய்ய வந்த போலீஸாரையும் தாக்கிய டிஎஸ்பி! தேனியில் பெரும் பரபரப்பு!

தேனியில், சனாதன எதிர்ப்பு பேரணிக்கு, எதிராகத் திரண்ட பாஜகவினரை, காவல்துறை துணை கண்காணிப்பாளர் அடித்து, திட்டி கைது செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சம்பந்தப்பட்ட டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேனி மாவட்ட பாஜகவினர் தெரிவித்து உள்ளனர்.

வாழும் பெரியார் ஈபிஎஸ்! பெண் உரிமையை குழி தோண்டி புதைத்த ஸ்டாலின்! அதிமுக குற்றச்சாட்டு!

‘மகளிர் உரிமைத்தொகையில் பல்வேறு குளறுபடிகள் இருக்கிறது. இத்திட்டத்துக்கு தனது தந்தை பெயரை சூட்டுவதை மட்டும் நோக்கமாக கொண்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், பெரியாரின் சுயமரியாதைச் சுடரை அணைத்து விட்டார்’ என்று அம்மா பேரவை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

8வது முறையாக வசமானது ஆசியக் கோப்பை! 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை துவம்சம் செய்த இந்தியா!

ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றிபெற்றுள்ளது. சிராஜ் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி இலங்கை அணியை திக்குமுக்காட வைத்தார்.

பி.எம். விஸ்வகர்மா திட்டத்தை தொடங்கிவைத்தார் மோடி! கைவினைக் கலைஞர்களின் முன்னேற்றம் உறுதி செய்யப்படும் என மத்திய அரசு தகவல்!

கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தின்போது செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி, பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை அறிவித்தார். இந்தத் திட்டத்துக்கு ரூ.13,000 கோடியை ஒதுக்கீடு செய்ய கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

பஞ்சாங்கம் என்றால் என்ன? எது சரியானது… திருக்கணிதப் பஞ்சாங்கமா, வாக்கியப் பஞ்சாங்கமா?

0

வேல்ஸ் மீடியா நேயர்களுக்காக, வார ராசி பலன்களை துல்லியமாகக் கணித்துத் தந்து வரும், ‘ஜோதிட சிரோன்மணி’ ஆர்.கே.வெங்கடேஸ்வரர், ஜோதிடம் தொடர்பான நமது வாசகர்களின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறார்.

தமிழக அரசு மெத்தனம்! கருகும் குறுவைப் பயிர்கள்! டெல்டா மாவட்டங்களை வறட்சிப் பகுதியாக அறிவிக்கக் கோரிக்கை!

காவிரி நீரை நம்பி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்த விவசாயிகள், எதிர்பார்த்த நீர்வரத்து இல்லாததால் பயிர்களைக் காப்பாற்ற முடியாமல் தவிக்கின்றனர். இந்நிலையில், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை வறட்சி மண்டலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ. 1,000! நிபந்தனைகளை விதித்து பாதிப்பேரை ஏமாற்றுவதா? என ஈபிஎஸ் கண்டனம்!

அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏய்ச்சிப் பிழைக்கும் தொழிலையும், மக்களை ஏமாற்றியே அரசியல் நடத்தும் வித்தையையும், கைவந்த கலையாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆளும் திமுக-வும், அதன் தலைவர் மு.க. ஸ்டாலினின் தலைமையிலான இந்த நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசும், காலாகாலத்திற்கும் மக்கள், தங்களின் மகுடிக்கு மயங்கிக் கிடப்பார்கள் என்ற மமதையில் மிதந்து வருகிறது.

antalya bayan escort