பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரம் இதுவரை இல்லாத அளவுக்கு சீரழிந்திருப்பதாக ஆய்வுகள் தெரியவந்திருக்கின்றன. அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்பிக்க போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் அமர்த்தப்படாதது தான் இச்சீரழிவுக்கு காரணமாகும்.
எந்தெந்தத் தேதிகளில், எந்தெந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன? தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடுமா? ஈபிஎஸ் கிடுக்கிப்பிடி கேள்வி!
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களை எளிதில் மறக்கடித்துவிடலாம்’ என்ற நம்பிக்கையுடன், திமுக, 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் இருந்தே, நிறைவேற்ற முடியாத பல்வேறு பொய்யான வாக்குறுதிகளை அளித்து தமிழக மக்களின் வாக்குகளைப் பெற்று, 2019 நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் வெற்றியைப் பெற்றது.
இனி இப்படி பேசக்கூடாது..! மு.க. ஸ்டாலின் முன்னிலையில், மேடையிலேயே உதயநிதியை எச்சரித்த டி.ஆர். பாலு!
திமுகவின் 75 ஆவது பவள விழா மற்றும் முப்பெரும் விழா வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரியில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தேசியக் கல்விக் கொள்கையை பகிரங்கமாக அமல்படுத்தும் SCERT! மாணவர்கள் நலன் காக்கும் முடிவை எடுக்குமாறு டிட்டோஜாக் அமைப்புக்கு ஐபெட்டோ அறிவுரை!
ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “வீரம் செறிந்த தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களுக்கான போராட்ட வரலாற்றுப் பதிவுகள் நமக்கெல்லாம் எப்போதும் வழிகாட்டிக் கொண்டிருக்கின்றன. ஏழு சங்கங்களில் தொடங்கிய டிட்டோஜாக் இன்று 11 சங்கங்களாகப் பெருகி இருப்பது சமுதாய பாதிப்புக்களைக் களையும் வலுவினை ஏற்படுத்தித் தரட்டும்.
அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை! அண்ணாமலை என்ற நரி ஊளையிடுகிறது! அதிமுகவினர் விடமாட்டார்கள்! ஜெயக்குமார் எச்சரிக்கை!
சென்னையில் ராயபுரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “ஒரு கூட்டணியில் இருந்துகொண்டு, கூட்டணி தர்மத்தை மீறி பேசுகின்ற எந்த ஒரு செயலையும், கருத்தையும் தன்மானம் உள்ள அதிமுக தொண்டன் எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ளமாட்டான்.
போராட்டம் நடத்திய பாஜகவினரையும், கைது செய்ய வந்த போலீஸாரையும் தாக்கிய டிஎஸ்பி! தேனியில் பெரும் பரபரப்பு!
தேனியில், சனாதன எதிர்ப்பு பேரணிக்கு, எதிராகத் திரண்ட பாஜகவினரை, காவல்துறை துணை கண்காணிப்பாளர் அடித்து, திட்டி கைது செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சம்பந்தப்பட்ட டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேனி மாவட்ட பாஜகவினர் தெரிவித்து உள்ளனர்.
வாழும் பெரியார் ஈபிஎஸ்! பெண் உரிமையை குழி தோண்டி புதைத்த ஸ்டாலின்! அதிமுக குற்றச்சாட்டு!
‘மகளிர் உரிமைத்தொகையில் பல்வேறு குளறுபடிகள் இருக்கிறது. இத்திட்டத்துக்கு தனது தந்தை பெயரை சூட்டுவதை மட்டும் நோக்கமாக கொண்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், பெரியாரின் சுயமரியாதைச் சுடரை அணைத்து விட்டார்’ என்று அம்மா பேரவை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
