Tuesday, March 17, 2026
Home Blog Page 178

பிளஸ் 2 விடைத்தாளில் பெரும் குளறுபடி! கூடுதல் மதிப்பெண்கள் வழங்கியது அம்பலம்! பெற்றோர், கல்வியாளர்கள் அதிர்ச்சி!

தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 13 ம் தேதி முதல் ஏப்ரல் 3 ம் தேதி வரையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாணவர்களின் விடைத்தாள் திருத்தம் செய்யப்பட்டு, மே 8 ம் தேதி தேர்வுத்துறை தேர்வு முடிவுகளை வெளியிட்டது.

2011க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு TET தேர்ச்சி கட்டாயமில்லை! அனைத்து பதவி உயர்வுகளுக்கும் டெட் தேர்ச்சி அவசியம்!

2011-ம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்காவிட்டாலும் பணியில் நீடிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பதவி உயர்வுகளுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் எனவும் நீதிமன்றம் தனது ஆணையில் கூறியுள்ளது.

அமைச்சர் பொன்முடி Tongue Slip ஆகி Loose Talk விடுகிறார்! தமிழக ஆசிரியர் கூட்டணி கடும் விமர்சனம்!

இதுதொடர்பாக ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “கல்வி வளர வேண்டும். கல்வி வளர்வதற்கு நீங்கள்தான்(ஆசிரியர்கள்) காரணமாக இருக்கிறீங்க. உங்கள் கையில் தான் இருக்கு. நாங்கள் என்னதான் மேடையில் பேசிட்டு போனாலும் அங்க போய் மாணவர்களை பார்த்து சொல்லித்தருபவர்கள் நீங்கள் தான்.

சீனாவில் தொடர்ந்து அடக்குமுறைக்கு உள்ளாகும் முஸ்லிம்கள்! மசூதிகளை சேதப்படுத்தி வரும் ஜின் பிங் அரசு!

சீனாவில் ஜின்ஜியாங் மாகாணத்தின் மேற்குப் பகுதியில் உய்குர் மொழி பேசும் முஸ்லிம்கள் உள்ளிட்ட பல்வேறு சிறுபான்மை மக்கள் வசிக்கின்றனர். சீனாவின் மற்ற மாகாணங்களில் குழந்தைப் பிறப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த மாகாணத்தில் மட்டும் கட்டுக்குள் வரவில்லை.

ஆவினுக்கு அச்சுறுத்தலாக நிற்பது அமுலா? பத்துக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களா? நடைமுறைச் சிக்கலா?

தமிழ்நாட்டின் கிராமப் பொருளாதாரத்தில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக முக்கியப் பங்குவகிப்பது பால் உற்பத்தி. விவசாயம் கையைச் சுடுகிறபோதெல்லாம் விவசாயிகளைக் காப்பாற்றும் காமதேனுவாகக் கறவை மாடுகளே உள்ளன.

ஆவின் பால் கொள்முதல் குறைவு! விநியோகத்தில் பெரும் குளறுபடி! முதலமைச்சர் தலையிட பாமக வலியுறுத்தல்!

இது தொடர்பாக பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் பெரும்பான்மையான பகுதிகளில் ஆவின் பால் வழங்கப்படவில்லை என்றும், சில பகுதிகளில் மிகவும் தாமதமாக பால் வழங்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

கர்நாடக அமைச்சருடன் எதற்காகப் பேச்சுவார்த்தை? துரைமுருகனுக்கு விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம்!

மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன், “கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், புதிதாக பொறுப்பு ஏற்றிருக்கிற, நீர்ப்பாசனத் துறைக்கு பொறுப்பு வகிக்கும் துணை முதலமைச்சர் சிவக்குமார், மேகேதாட்டுவில் அணை கட்டிய தீருவோம்; அதற்கான உத்தரவுகள் அதிகாரிகளுக்கு பிறப்பிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இச்செயல் உச்சநீதிமன்ற தீர்ப்பை குழிதோண்டி புதைப்பதற்கு சமமானதாகும்.

antalya bayan escort