4 Min(s) Read : சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் மோடி நாளை(மே 28 ஞாயிற்றுக்கிழமை) திறந்துவைக்கிறார். மே 28 அன்று விநாயக் தாமோதர் சாவர்க்கரின் 140வது பிறந்த ஆண்டு தினம். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் இறுதிச் சடங்கும் இந்த நாளில்தான் நடைபெற்றது.
கொரோனாவை விட கொடிய தொற்றுநோய்க்கு உலகம் தயாராக வேண்டும்! உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!
சீனாவில் கடந்த 2020-ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகத்தையே ஆட்டிப்படைத்தது. லட்சக்கணக்கான உயிர்களை பலி வாங்கியது. இந்தியாவில் 3 அலைகளாக மிரட்டிய கொரோனா வைரஸ் தொற்றால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.
செயற்கை இனிப்பூட்டிகள் ஆபத்தானவை என WHO அறிவிப்பு! போதிய ஆதாரங்கள் இல்லை என மறுக்கும் மருத்துவ நிபுணர்கள்!
‘செயற்கை இனிப்பூட்டிகளை (Artificial sweeteners) நீண்ட காலம் பயன்படுத்தும்போது இரண்டாம் வகை சர்க்கரை நோய் (Type 2 Diabetes Mellitus) வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிப்பதோடு, பெரியவர்களுக்கு இதய நோய் – இறப்பு அபாயம் அதிகரிக்கவும் அவை காரணமாகலாம்’ என்று உலக சுகாதார நிறுவனம்(WHO) எச்சரித்திருக்கிறது.
கட்டாயத் தமிழ் கற்பிக்கும் பிற கல்வி வாரியப் பள்ளிகள் எவை? வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு பாமக வலியுறுத்தல்!
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் 2014-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி, தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டம் தவிர்த்த பிற கல்வி வாரிய பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில், நடப்பாண்டில் ஒன்பதாம் வகுப்பு வரையிலும், அடுத்த ஆண்டில் பத்தாம் வகுப்பு வரையிலும் தமிழ் கட்டாயப்பாடமாக்கப்பட வேண்டும்; அதற்கான தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று தனியார் பள்ளிகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தனியார் பள்ளிகளை சரியான நேரத்தில் எச்சரிக்கும் வகையிலான இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
